ஆழியின் மௌனம்:சாங்கியயோகம்-1

ஆழியின் மௌனம்:சாங்கியயோகம்-1

ஜெயமோகன்.இன் இல் இருந்து

DSC_5374

[ நாராயணகுரு சிலை. ஊட்டி நாராயண குருகுலம் ]

 நடராஜகுருவும் நித்யசைதன்ய யதியும் சேர்ந்து பயணம் செய்யும்போது ஒரு குருத்வாராவுக்குள் செல்கிறார்கள். அங்கே இருக்கும் கியானிகள் நடராஜகுருவுக்கு குரு கிரந்த சாஹிபை வாசித்துக்காண்பிக்கிறார்கள். நடராஜ குரு அந்த நூலை அதற்கு முன்னதாக கேடதில்லை. அது குர்முகி மொழியில் இருக்கிறது. ஆனால் கேட்கக் கேட்க நடராஜகுரு அந்நூலின் வரிகளுக்கு பொருள்சொல்லிக்கோண்டே இருக்கிறார். நித்யாவுக்கு ஆச்சரியம். ‘இதில் ஒன்றுமில்லை. இந்நூலின் அடிப்படைக் கலைச்சொற்கள் எல்லாமே சம்ஸ்கிருத மூல்த்தின் சிறிய உச்சரிப்புவேறுபாடுகள் மட்டுமே ‘ என்று நடராஜகுரு சொல்கிறார். Continue reading

நான்கு அடிப்படை பேசுபொருட்கள்…

நான்கு அடிப்படை பேசுபொருட்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

IMG_6025

[ நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஊட்டி இலக்கிய முகாமில்]

இந்திய சிந்தனை மரபு

இந்திய சிந்தனை மரபை அறிவதற்கு நான்கு மையமான பேசுபொருட்களை தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம். அவற்றில் இருந்து இந்திய தத்துவ சிந்தனையின் தரப்புகளுக்குள் செல்வது ஒரு கயிறைப்பற்றிக் கொண்டு காட்டுக்குள் செல்வதுபோன்றது.

1. விடுதலை

இந்திய சிந்தனையின் தரப்புகள் அனைத்திலுமே அடிப்படையான முதல் வினாவாக உள்ளது இதுதான், இச்சிந்தனையின் பயன் என்ன? இதை ஏன் நான் படிக்கவேண்டும், ஏன் இதன்படி வாழவேண்டும்? எல்லா சிந்தனைகளும் இதற்கான ஒரு பதிலை நமக்கு அளித்தபின்னரே ஆரம்பிக்கின்றன. அவை அளிக்கும் பதிலை ஒட்டுமொத்தமாக ஒரே சொல்லில் விடுதலை என்று சொல்லலாம். முக்தி, மோட்சம்,வீடுபேறு என்றெல்லாம் பல சொற்களில் இது குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு சிந்தனைக்கும் இச்சொற்கள் ஒவ்வொரு விதமாக பொருள்கொள்கின்றன. ஆனால் சிந்தனை என்பது விடுதலை என்ற பயனை அளிப்பதாக இருக்கவேண்டும் என்பது எல்லா தத்துவத்தரப்புகளுக்கும் பொதுவாக உள்ளது. Continue reading

தத்துவத்தைக் கண்காணித்தல்

தத்துவத்தைக் கண்காணித்தல்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

Picture 031

[கவி மழைப்பயணம்]

அன்புள்ள ஜெ…சார்,

1980-90 களில் ரஜ்னீஷ் மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை படித்துவிட்டு நண்பர்களிடம் விவாதித்துக்கொண்டிருப்போம். ஒரு நெருங்கிய நண்பர் திடீரென்று ஒரு நாள் மொட்டையடித்துக்கொண்டு வெள்ளை ஜிப்பா, வேஷ்டி அணிந்துகொண்டு வந்தார். ‘நான் இன்றுதான் பிறந்திருக்கிறேன். என்னை நான் diseducate செய்து கொண்டேன்.‘ என்றார்.  (அச்சில் வருவதை…பாடப்புத்தகங்கள் உள்பட…உண்மை என்று என்று நம்பிக்கொண்டுருந்த கால கட்டம் அது) சிறிது நேரம் கழித்து ‘பசிக்கிறது…மசால் வடை சாப்பிடலாமா‘ என்றார். மற்றொரு நண்பர் ‘மசால் வடையை diseducate செய்யவில்லையா‘ என்று கேட்டார். அவ்வளவுதான்..அந்த நண்பர் சட்டென்று எழுந்து சென்று விட்டார். அவரை மீண்டும் பழய நிலைக்கு கொண்டு வர 5 வருடங்கள் ஆனது. Continue reading

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-3 [நிறைவுப் பகுதி]

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-3 [நிறைவுப் பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC01192

[கவி மழைப்பயணம்]

இரண்டு மனிதர்கள் எப்போது கூடிவாழ ஆரம்பிக்கிறார்களோ அப்போதே உளக்கட்டுப்பாடு தொடங்கி விடுகிறது. கூட்டாக வாழும் எல்லா உயிர்களும் உளக்கட்டுப்பாடும் படிக்க வரையறையும் அச்சமூகத்தால் வலியுறுத்தப்படுகின்றன. ஜேன் குடால் போன்ற நவீன ஆய்வாளர்கள் சிம்பன்ஸி சமூகத்தில் பலவிதமான பாலியல் கட்டுபாடுகள் உள்ளதை எடுத்துக்காட்டியுள்ளனர். பாலியல் கட்டுபாடு இல்லாத பழங்குடிச் சமூகம் ஏதும் கண்டடையப்பட்டதில்லை. அப்படியானால் •பிராய்டியக் கோட்பாடுகளை சிம்பனிஸிக்களுக்கும் போட்டுப் பார்க்கலாமா என்ன? Continue reading

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-2

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC01191

[கவி மழைப்பயணம்]

நிலைபெற்றவன்

ஆத்மவான் என்ற சொல்லின் செயல்தள விரிவாக்கம் ‘ஸ்திதப்பிரதிக்ஞன்’ என்ற சொல்லாகும். ஆத்மாவாக தன்னை உணர்ந்து தத்துவார்த்தமான தெளிவை அடைந்தவன் செயல்களில் ஈடுபடும்போது சிதறாத உள்ளம் கொண்டவனாக நிலைத்த பிரக்ஞை கொண்டவானக இருப்பான். அவனே நிலைபெற்றவன். கீதையில் உள்ள இக்கலைச் சொல் இந்து ஞானமரபில் பலதளங்களில் மீளமீள விவாதிக்கப்படும் ஒன்றாகும். Continue reading

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-1

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC01173

[கவி மழைப்பயணம்]

பாலக்காடு அருகே சாலக்குடியில் பிரம்மானந்த சிவயோகி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் தன் மாணவரான சிவானந்தரைச் சந்தித்தபோது நடந்த்து என்று ஒரு கதை சொல்வார்கள். ஞானம் தேடிவந்து வணங்கிய சிவானந்தருக்கு குரு சொன்னார்’’ தூங்காதே’’ பலநாள் தூங்காமலிருக்க முயன்று உடல் மெலிந்து மனம் குலைந்த நிலையில் மீண்டும் குருவிடம் வந்து சிவானந்தர் சொன்னார் ‘’தூங்காமலிருக்க என்னால் முடியவில்லை’’ Continue reading

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.4 [நிறைவுப்பகுதி]

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.4 [நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[சிட்னி]

வேதங்களும் கருமங்களும்

இப்பகுதியில் வேதங்களுக்கு கீதை அளிக்கும் மறுப்பு இந்து ஞான மரபில் கடந்த இருபது நூற்றாண்டுகளாக தத்தளிப்பை உருவாக்கிவருவதாகும். நித்ய சைதன்ய யதி ஒர் உரையாடலில் இவ்வண்ணம் குறிப்பிட்டார். ”வாளை அதன் எதிரே வரும் ஒவ்வொன்றும் மழுங்கடிக்க முயல்கின்றன. வேதாந்தத்தை அத்துடன் உரையாடும், அதற்கு உரையளிக்கும், அதை விரித்துப் பேசும் ஒவ்வொரு தரப்பும் ஏதோ ஒருவகையில் மழுங்கடிக்கவே முயல்கின்றன.” நான் ‘சங்கரர் கூடவா?’ என்று கேட்டேன். “ஆம், சங்கரரும் நாராயண குருவும் கூடத்தான்” என்றார் நித்யா. நான் வியப்பில் பேச்சிழந்தேன். Continue reading

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.3

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.3

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[போர்நினைவிடம் ,கன்பெரா]

பயன்கருதா செயல்

யோகம் என்பது குவிந்த நிலை, நிலை கொண்ட நிலை, அந்நிலையில் அலைபாய்தல் இல்லை, உளவல்லமை சிதறுவதில்லை என்று கூறும் கிருஷ்ணர் அதை யோகத்தின் பயனாகவும் யோகத்திற்கான வழிமுறையாகவும் கூறுகிறார் என்பதை பிற பாடல்கள் மூலமாக அறியலாம். இது சாங்கிய யோகமாதலால் கிருஷ்ணன் இப்பகுதியில் அன்றாட நடைமுறை வாழ்வின் செயல்களை எப்படி யோகமாக ஆக்குவது என்றுதான் பேசுகிறார். Continue reading

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.2

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[ஓபரா ஹவுஸ். சிட்னி. ஆஸ்திரேலியா பயணத்தின் போது]

பொதுவாக பல உரைகளில் சாங்கிய யோகம் என்ற தலைப்பு குறித்த ஒரு தடுமாற்றம் இந்த இடத்தில் வரக்காணலாம். கீதையின் தலைப்புகளில் கடைசித் தொகுப்புரையிலும் வரும் ‘யோகம்’ என்பது முரணியக்க அணுகுமுறையை குறிக்கிறது. ஆனால் இங்குள்ள யோகம் என்பது யோகம் என்னும் நடைமுறையைச் சுட்டுகிறது. அதாவது தியானத்தை உள்ளடக்கிய ஒரு யோகசாதனையைக் குறிக்கிறது. இப்பகுதியின் தலைப்பு இருபொருள் சுட்டும்படி இருக்கிறது என்று வேண்டுமானால் கொள்ளலாம். Continue reading

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.1

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[மெல்பர்ன் அருகில் பலாரட் என்ற ஊரில். ஆஸ்திரேலியப்பயணத்தின் போது]

நந்தி சிலை நம் சிற்ப மரபின் முக்கியமான சாதனைகளில் ஒன்று. தமிழகத்தில் பிரம்மாண்டமான மாக்காளைகளை சுதைவடிவில்செய்து வைத்திருக்கிறார்கள். கல்லில் வடித்த அழகிய காளைகளும் உண்டு. சில ஆலயங்களில் வெண்கலச்சிலைகளையும் காணலாம். கர்நாடகத்தில் பல ஆலயங்களில் பிரம்மாண்டமான நந்தி சிலைகள் உண்டு. மைசூர் சாமுண்டி குன்றில் உள்ள நந்திதான் கர்நாடக மாநிலத்தின் இலச்சினையாக இருக்கிறது. Continue reading