அலையறியா கடல்:சாங்கிய யோகம்-3 [நிறைவுப் பகுதி]

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-3 [நிறைவுப் பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC01192

[கவி மழைப்பயணம்]

இரண்டு மனிதர்கள் எப்போது கூடிவாழ ஆரம்பிக்கிறார்களோ அப்போதே உளக்கட்டுப்பாடு தொடங்கி விடுகிறது. கூட்டாக வாழும் எல்லா உயிர்களும் உளக்கட்டுப்பாடும் படிக்க வரையறையும் அச்சமூகத்தால் வலியுறுத்தப்படுகின்றன. ஜேன் குடால் போன்ற நவீன ஆய்வாளர்கள் சிம்பன்ஸி சமூகத்தில் பலவிதமான பாலியல் கட்டுபாடுகள் உள்ளதை எடுத்துக்காட்டியுள்ளனர். பாலியல் கட்டுபாடு இல்லாத பழங்குடிச் சமூகம் ஏதும் கண்டடையப்பட்டதில்லை. அப்படியானால் •பிராய்டியக் கோட்பாடுகளை சிம்பனிஸிக்களுக்கும் போட்டுப் பார்க்கலாமா என்ன? Continue reading

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-2

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC01191

[கவி மழைப்பயணம்]

நிலைபெற்றவன்

ஆத்மவான் என்ற சொல்லின் செயல்தள விரிவாக்கம் ‘ஸ்திதப்பிரதிக்ஞன்’ என்ற சொல்லாகும். ஆத்மாவாக தன்னை உணர்ந்து தத்துவார்த்தமான தெளிவை அடைந்தவன் செயல்களில் ஈடுபடும்போது சிதறாத உள்ளம் கொண்டவனாக நிலைத்த பிரக்ஞை கொண்டவானக இருப்பான். அவனே நிலைபெற்றவன். கீதையில் உள்ள இக்கலைச் சொல் இந்து ஞானமரபில் பலதளங்களில் மீளமீள விவாதிக்கப்படும் ஒன்றாகும். Continue reading

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-1

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC01173

[கவி மழைப்பயணம்]

பாலக்காடு அருகே சாலக்குடியில் பிரம்மானந்த சிவயோகி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் தன் மாணவரான சிவானந்தரைச் சந்தித்தபோது நடந்த்து என்று ஒரு கதை சொல்வார்கள். ஞானம் தேடிவந்து வணங்கிய சிவானந்தருக்கு குரு சொன்னார்’’ தூங்காதே’’ பலநாள் தூங்காமலிருக்க முயன்று உடல் மெலிந்து மனம் குலைந்த நிலையில் மீண்டும் குருவிடம் வந்து சிவானந்தர் சொன்னார் ‘’தூங்காமலிருக்க என்னால் முடியவில்லை’’ Continue reading

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.4 [நிறைவுப்பகுதி]

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.4 [நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[சிட்னி]

வேதங்களும் கருமங்களும்

இப்பகுதியில் வேதங்களுக்கு கீதை அளிக்கும் மறுப்பு இந்து ஞான மரபில் கடந்த இருபது நூற்றாண்டுகளாக தத்தளிப்பை உருவாக்கிவருவதாகும். நித்ய சைதன்ய யதி ஒர் உரையாடலில் இவ்வண்ணம் குறிப்பிட்டார். ”வாளை அதன் எதிரே வரும் ஒவ்வொன்றும் மழுங்கடிக்க முயல்கின்றன. வேதாந்தத்தை அத்துடன் உரையாடும், அதற்கு உரையளிக்கும், அதை விரித்துப் பேசும் ஒவ்வொரு தரப்பும் ஏதோ ஒருவகையில் மழுங்கடிக்கவே முயல்கின்றன.” நான் ‘சங்கரர் கூடவா?’ என்று கேட்டேன். “ஆம், சங்கரரும் நாராயண குருவும் கூடத்தான்” என்றார் நித்யா. நான் வியப்பில் பேச்சிழந்தேன். Continue reading

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.3

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.3

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[போர்நினைவிடம் ,கன்பெரா]

பயன்கருதா செயல்

யோகம் என்பது குவிந்த நிலை, நிலை கொண்ட நிலை, அந்நிலையில் அலைபாய்தல் இல்லை, உளவல்லமை சிதறுவதில்லை என்று கூறும் கிருஷ்ணர் அதை யோகத்தின் பயனாகவும் யோகத்திற்கான வழிமுறையாகவும் கூறுகிறார் என்பதை பிற பாடல்கள் மூலமாக அறியலாம். இது சாங்கிய யோகமாதலால் கிருஷ்ணன் இப்பகுதியில் அன்றாட நடைமுறை வாழ்வின் செயல்களை எப்படி யோகமாக ஆக்குவது என்றுதான் பேசுகிறார். Continue reading

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.2

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[ஓபரா ஹவுஸ். சிட்னி. ஆஸ்திரேலியா பயணத்தின் போது]

பொதுவாக பல உரைகளில் சாங்கிய யோகம் என்ற தலைப்பு குறித்த ஒரு தடுமாற்றம் இந்த இடத்தில் வரக்காணலாம். கீதையின் தலைப்புகளில் கடைசித் தொகுப்புரையிலும் வரும் ‘யோகம்’ என்பது முரணியக்க அணுகுமுறையை குறிக்கிறது. ஆனால் இங்குள்ள யோகம் என்பது யோகம் என்னும் நடைமுறையைச் சுட்டுகிறது. அதாவது தியானத்தை உள்ளடக்கிய ஒரு யோகசாதனையைக் குறிக்கிறது. இப்பகுதியின் தலைப்பு இருபொருள் சுட்டும்படி இருக்கிறது என்று வேண்டுமானால் கொள்ளலாம். Continue reading

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.1

செயலெனும் யோகம் சாங்கிய யோகம்.1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[மெல்பர்ன் அருகில் பலாரட் என்ற ஊரில். ஆஸ்திரேலியப்பயணத்தின் போது]

நந்தி சிலை நம் சிற்ப மரபின் முக்கியமான சாதனைகளில் ஒன்று. தமிழகத்தில் பிரம்மாண்டமான மாக்காளைகளை சுதைவடிவில்செய்து வைத்திருக்கிறார்கள். கல்லில் வடித்த அழகிய காளைகளும் உண்டு. சில ஆலயங்களில் வெண்கலச்சிலைகளையும் காணலாம். கர்நாடகத்தில் பல ஆலயங்களில் பிரம்மாண்டமான நந்தி சிலைகள் உண்டு. மைசூர் சாமுண்டி குன்றில் உள்ள நந்திதான் கர்நாடக மாநிலத்தின் இலச்சினையாக இருக்கிறது. Continue reading

கீதை கடிதங்கள்

கீதை கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[மோயாற்றுக் கரை  பானமரப்பட்டி. தெங்குமராட்டா பயணத்தின் போது]

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். தங்களின் வலைப்பக்கங்களைத் தொடர்ந்து படித்து வருபவன் நான். பொது, மற்றும் இலக்கியம் சார்ந்த விஷயங்களைவிடத் தத்துவம் சார்ந்த விஷயங்கள்தான் தங்களிடம் அதிகம் பரிமளிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. உங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான பொழுதுகளை இந்தத் தேடலில் கழித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்த அளவுக்கான ஒப்புநோக்குப் பார்வை தங்களிடம் சாத்தியமாகிறது என்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது என்னால். கீதையைப்பற்றி அவ்வப்போது எழுதிக்கொண்டே வருகிறீர்கள். குறிப்பாக அது ஒரு தத்துவநூல் என்பதை நிறுவுவதில் தாங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். அதுதான் உண்மையும்கூட. ஆனால் அதை ஒரு மத நூலாகப் புரிந்து கொண்டிருப்பவர்கள்தான் இங்கே  அதிகம். அதை அப்படிப் புரிய வைத்திருப்பதில் ன்மீகவாதிகளுக்கு நிறையப் பங்கு உண்டு.ஆன்மீகவாதிகள் தாங்கள் அறிந்தோ, அறியாமலோ ஒருவகையான அரசியலுக்கு  ட்பட்டுப்போகிறார்கள். ஆன்மீகம் மக்களின் ஒற்றுமைக்காகவும், ஒருமித்த சிந்தனையை வளப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்பட வேண்டும். அதுதான் சரியான ஆன்மீகம் என்று கருதுகிறேன் நான். எது மக்களின் ஒருமித்த சிந்தனையை, ஒற்றுமையை, மனித நேய சிந்தனையை, மேம்படுத்துகிறதோ அதுவே சிறந்த ஆன்மீகம் என்று எனக்குத் தோன்றுகிறது. Continue reading

சாங்கிய யோகம்:கடிதங்கள்

சாங்கிய யோகம்:கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[தெங்குமராட்டா]

அன்புள்ள ஜெயமோகன்,

பகவத் கீதையை நீங்கள் அணுகியுள்ள விதம் மிகவும் அருமையாக இருக்கிறது. அந்நூலை எப்படி ஒரு முழுமைப்பார்வையில் அணுகவும் அத்துடன் நம் அகத்தேடலுக்கான ஒரு வலிமையான கருவியாக பயன்படுத்தவும் சொல்லிக்கொடுத்துள்ளீர்கள். தங்களுக்கும் தங்கள் குரு நித்ய சைதன்ய யதிக்கும் தனிப்பட்ட முறையிலேயே ஒரு வாசகனாக கடமைப்பட வைத்துள்ள உரை. சாங்கியம் குறித்த தங்கள் கட்டுரைகளை பலமுறை வாசித்தேன் – அது உருவாக்கிய மனக்கிளர்ச்சி அடங்கும் வரை. ஹென்றி பெர்கூஸனின் உயிர்வாதம் மற்றும் அதனை நிராகரிக்கும் எளிய பொருள்முதல்வாதம் ஆகிய இரட்டையில் விழாமல் ஆன்மாவினை அருமையாக விளக்கியுள்ளீர்கள். பொருள்முதல்வாதமும் எளிய இரட்டைநிலைகளைவிட்டு முன்னகர்ந்துள்ளது. Continue reading

கீதை, கடிதங்கள்

கீதை, கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[பூட்டானின் பழைய மாளிகைகளில் ஒன்று. வடகிழக்கு பயணத்தின் போது]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கீதையைப் பற்றிய உங்களின் முந்தைய கட்டுரைகள் வெளிவந்த போது, நவீன வாசகர்களுக்கு ஏற்றவகையில் கீதைக்கு நீங்களே ஒரு மொழியாக்கமும் விளக்கவுரையும் எழுதினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்போது முதல் இரண்டு அத்தியாயங்களையும் படிக்கிறபோது, இதற்கு முன்னோடியாகத்தான் அந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. அர்ஜுன விஷத யோகமும் (மகத்தான மனத் தடுமாற்றம்), ஸாங்கிய யோகமும் (உலகாற்றும் நெறி) உங்கள் மொழி நடையில் படிப்பதற்குப் பரவசமாகவே இருக்கிறது. விளக்க உரையில் தரப்பட்டிருக்கும் ஏராளமான தகவல்களும் கருத்துக்களும் எனக்கு மிகப் புதியவை. Continue reading