குறுந்தொகை-கடிதம்

குறுந்தொகை-கடிதம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

அன்புள்ள ஜெயமோகன்,

எப்படி நெல்லி தின்று தண்ணீர் அருந்திய ஆட்டிற்குக் கொம்பு முதல் குளம்பு வரை இனித்ததோ உங்கள் உரை கேட்டு என் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்தது.

இலக்கியம் இவ்வளவு சுவையோ? காதலை விட சுவை அதிகமோ எனத் தோன்றுகிறது 🙂

அக உணர்வுகளை இயற்கை என்னும் பூதக் கண்ணாடி கொண்டு விளக்கினார்களோ, குறுந்தொகையை உங்கள் உரை அழகாக விளக்கியது.

என்னுடைய பத்தாம் வகுப்பில் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் படித்த பசலை நோய், அதனால் வளையல் ஒட்டியாணம் ஆகும் அளவிற்குத் தலைவி மெலிந்த கற்பனை அப்போதே பிடித்தது. உங்கள் உரைக்குப் பிறகு எல்லாவற்றையும் படிக்கவேண்டும் என்ற ஆவல் மிகுதியாகிறது. Continue reading

உரை; கடிதங்கள்

உரை; கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

அன்புள்ள ஜெ,

கோதை ஆற்று வெள்ளம் பாய்ந்து வந்து சென்னையில் எங்களை நிலை குலையச் செய்தது. குறுந்தொகை மூலம் கவிதையை மட்டும் அல்ல, வாழ்வையும் மீண்டும் புதிதாக அறிமுகம் செய்து வைத்தது உங்கள் உரை. ‘காடு’ தந்த பேரெழுச்சியை விட இன்னும் தீவிரமானதாக இருந்தது என்றே சொல்வேன். தொடக்கத்தில் இருந்தே உவமைகளும் படிமங்களும் கொட்டியபடியே இருந்தன. எதுவுமே வலிந்து புனைந்ததாக இல்லாமல் வெகு இயல்பாக அமைந்தன. இவ்வளவு உணர்ச்சிகரமான ஒரு உரையை நான் என் வாழ்நாளில் கேட்டதில்லை. ஒரு பத்து நிமிடங்கள் கடந்த பின் ‘யோவ் தாங்கலை! நிறுத்துய்யா’ என்று கூவத் தோன்றியது. Continue reading

அடுத்தகட்ட வாசிப்பு

அடுத்தகட்ட வாசிப்பு

ஜெயமோகன்.இன் ல் இருந்து

P1040756-1

[மேகமலை பயணத்தின் போது நண்பர்களுடன்]

உங்களின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூல் மூலமாகவும், உங்களின் இணைய தளத்தில் உள்ள இலக்கியக் கட்டுரைகளின் வழியாகவும் கற்றுக்கொண்டதில் புதுக்கவிதையைக் குழப்பமில்லாமல் ஓரளவிற்கு வாசிக்க முடிகிறது. சற்று குழப்பமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது அதை என் அனுபவம் சார்ந்து புரிந்துகொள்ள முடிகிறது. கவிதைகள் சில பல வார்தைகளில் இருப்பதால் தொடர்ந்துபடிப்பதன் மூலம் அதில் உள்ள படிமம், குறியீடு போன்ற விசயங்களையும் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் சிறுகதை, நாவல் போன்று பக்கம் பக்கமாக வாசிக்கும்போது மொழிக்குரிய அந்த நுட்பமான குறியீடு, படிமம் போன்ற விசயங்கள் என எதுவும் தென்படுவதுபோன்று தோன்றுவதில்லையே! என்ன எழுதியிருக்கிறதோ அதை அப்படியே படித்த உணர்வுதான் ஏற்படுகிறதே தவிர கவிதையில் உணரும் நுட்பமான விசயங்களை, அனுபவங்களை சிறுகதை, நாவலில் உணர முடியவில்லையே! அணுகுமுறையில் அல்லது வாசிப்பு முறையில் ஏதேனும் மாற்றம் தேவையா!

நன்றி

பூபதி

Continue reading

அறமெனப்படுவது – கடிதங்கள்

அறமெனப்படுவது – கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

new_3432

[நாஞ்சில் மற்றும் வாசக நண்பர்களுடன் குவைத்தில்]

அன்பின் ஜெயமோகன் ,

மானுட அறமே மேலான அறம் என்ற உங்கள் கட்டுரை அருமை, அறுதியிட்டுக் கூறுவதே அறம் எனப்பட்டதா? குடும்ப அறம் காக்க முயலாமல், குல அறமும் காக்க முயலாமல், மானுட அறத்தைக் காத்ததினாலேயே கண்ணகி தெய்வம் ஆகி நின்றாளோ ??

நன்றி

சிவகுமார்

அன்புள்ள சிவகுமார்,

ஆம், அதனால்தான் கண்ணகி அறச்செல்வி என்று ஆசிரியராலேயே சுட்டப்படுகிறாள்.

Continue reading

நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்

நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

sanskrit-literature

அன்புள்ள ஜெ,

வணக்கம். உங்களின் வலைத்தளத்தில் “நான் இந்துவா?” என்ற கேள்விக்கான பதிலைப் படித்தேன். உணர்ச்சிவசப்பட வைத்தது. முக்கியமாக “உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப்பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா?” என்ற வரிகள் ஓங்கி மண்டையில் அடித்தாற் போல இருந்தது

உங்களின் பல கட்டுரைகளில் பதில்களில் “தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா” என்று அடிக்கடி கேட்கிறீர்கள். உங்களுடைய இந்தக் கேள்வி என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. தெரிந்து கொள்ளத் தூண்டுகிறது. நாற்பத்திரண்டு வயதில்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆர்வம் பிறப்பதை நினைத்து வெட்கமாக இருக்கிறது. ஆனால் இப்போதாவது ஆர்வம் வருகிறதே என்று ஒருபக்கம் சந்தோஷமாக உள்ளது. எனக்குள் தேடலைத் தூண்டியது நீங்கள் தான். என் மனமார்ந்த நன்றி. உங்களை நேரில் சந்தித்துப் பேசியபோது ஏதேதோ வீணாகப் பேசி வாய்ப்பைத் தவற விட்டு விட்டோமே எனத் தோன்றுகிறது. Continue reading

சயன்ஸே சொல்லுது!

சயன்ஸே சொல்லுது!

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

அன்புள்ள ஜெ,

காந்தியின் சனாதனம்-4 இல் சீர்திருத்த அணுகுமுறையின் செயல்பாட்டை அடிப்படை விதிகளாக சுருக்கிச் சொல்லியிருந்தீர்கள்.

ஆனால் மதப்பற்று காரணமாகத் தங்கள் மதம் ஐரோப்பிய சிந்தனையையும் அறிவியலையும் விட ஆழமானதும் உயர்ந்ததுமாகும் என வாதிடுவார்கள். அதற்கான விளக்கங்கள் எல்லாமே ஐரோப்பிய தத்துவத்தையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும்.

‘உருவ வழிபாடு’ திரியில் சுட்டப்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் ‘சிலை வழிபாடு பிரசெண்டேஷனில்’ நான் கண்டது நீங்கள் மேல் சொன்ன வரிகள்தான் என்று நினைக்கிறேன். மேலும் சிக்கல் என்னவென்றால் சில ஐரோப்பிய விஞ்ஞானிகளே அறிவியலையும் மதத்தையும் இணைத்து ‘அறிவியலுக்கு வெளியே கருத்து’ கூறுகிறார்கள். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள் காட்டி மதத்தில் எதையாவது நிறுவ முயல்வது போல் ஆபத்தானது வேறொன்றுமில்லை. அது போல் செய்பவர்கள் மதத்தின் அறிவியலின் அடிப்படைகளை உண்மையில் உணர்ந்தவர்களா என்பது சந்தேகமே.

Continue reading

கடவுள்நம்பிக்கை உண்டா?

கடவுள்நம்பிக்கை உண்டா?

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[பூடான். வடகிழக்கு பயணத்தின் போது]

அன்புள்ள ஜெ,

இந்து ஞான மரபு, தத்துவங்கள், பகவத் கீதை, உபநிடதங்கள் மற்றும் பல இதர நூல்களை விரிவாக, ஆழமாகக் கற்று உணர்ந்த நீங்கள், கோயில்களின் சூட்சுமங்களைப் பற்றிப் பேசும் நீங்கள், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாமல் இருப்பது பெரும் ஆச்சரியம் அளிக்கிறது.

மாபெரும் கோயில்களை, நூல்களை உருவாக்கியவர்களைச் செலுத்தியது கடவுள் நம்பிக்கை தான். கோயில்களில் பல மிக நுட்பமான, எளிதில் புரிந்து கொள்ள முடியாத சூட்சமங்கள் நிறைய உள்ளன. மூலவர் சிவலிங்கதிற்கு அடியில் சில ‘எந்திரங்களை’ப் (மந்திரிக்கப்பட்ட தகடுகள்) புதைத்திருக்கும் சூட்சமம் உள்ளது. ஆத்மார்த்தமாக வழிபடுபவர்களுக்கு ஏதோ ஒன்று கிடைக்கிறது.

எனது வாழ்வில், சில நம்ப முடியாத miracle like திருப்பங்களை, மாற்றங்களை பக்தியின் மூலம், கோயில்கள் மூலம் அடைந்திருக்கிறேன். ஜோதிடம் கற்றதும் இந்தப் பின்னணியில் தான். அசைவ உணவை அறவே விட்டு விட்டேன்.ராமாயணத்தின் ஒரு பகுதியான சுந்தர காண்ட பாராயணம் செய்து, பெரும்நற்பலனை அடைந்திருக்கிறேன். Medical miracle என்ற வகையில் !ஒரு பெரியாரிய குடும்பத்தில் பிறந்து, நாத்திகனாக வளர்ந்து, இன்று இப்படிமாற்றம் ! Continue reading

யாதெனின் யாதெனின்…

யாதெனின் யாதெனின்…

ஜெயமோகன். இன் ல் இருந்து

100_2622

[அருகர்களின் பாதை, இந்திய நெடும்பயணத்தில். ஃபெட்சா குகைவிகாரம். பூனா அருகே]

இரண்டு நாட்களுக்கு முன்னர் கெ.பி.வினோத் என்ற நண்பர் பார்க்க அலுவலகம ்வந்திருந்தார். நல்ல வாசகர். கணிப்பொறித்துறையில் ஒரு நிறுவன மேலாளராக இருக்கிறார். ரயில் டிக்கெட் எடுப்பதற்கான என்னுடைய சிரமங்கள் பற்றிய பேச்சு வந்தது. இணையம் மூலம் பதிவுசெய்யலாமே என்றார் வினோத். அதற்கு கடன் அட்டை வேண்டுமே என்றேன். ”என்னது, கடன் அட்டை இல்லையா?” என்று பிரமித்தபின் ”சரி பரவாயில்லை. ஒரு வைப்பு அட்டை பெற்றுக்கொள்ளுங்கள். எல்லா வங்கிகளிலும் கொடுப்பார்கள்”.நான் ”அதற்கு வங்கியில் பணம் போடவேண்டுமே..”என்றேன். அவர் சற்றுநேரம் வியந்து மாய்ந்துகொண்டிருந்தார். பொதுவாக கணிப்பொறி துறையில் இருப்பவர்களிடம் பிறர் எப்படி உயிர்வாழ்கிறார்கள் என்பதை சொல்லிப் புரியவைப்பத கஷ்டம்.

Continue reading

துறவு-கடிதம்

துறவு-கடிதம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

Swami-Ootty

[சுவாமி வியாசப்பிரசாத்,. நித்ய சைதன்ய யதியின் மாணவர்]

அன்பு ஜெயமோஹன்,

வணக்கம். ஆன்மீகம் பற்றிய தங்கள் கேள்வி பதிலில் ஒரு பாரம்பரியம் பற்றிய அதாவது இந்திய ஆன்மீகத்தின் வழி முறைகள் மீது தங்களுக்கு உள்ள ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும்படியான ஒரு பதிவைக் கண்டேன். இது இந்த மண்ணில் பிறந்தவருள் நடக்கும் உரையாடல் என்னும் அளவில் வேண்டுமென்றால் பொருந்தும். ஆனால் ஆன்மீகம் இந்த அணுகுமுறைக்குள் அடங்காத அளவு ஆழ்ந்தது. ஆன்மீகம் ஒரு தாயின் ஒவ்வொரு குழந்தையும் தாயன்பைத் தனக்கு என்ற ஒரு அந்தரங்க, தனித்த பேறாகக் கருதி வளருவது போன்றது. எனவே எந்தப் பாரம்பரியத்தில் பிறந்திருந்தாலும் முன்னோடிகள் எத்தனை பேர் இருந்தாலும் தானே விண்டு தானே கண்டு உணர வேண்டியதே அது. புருஷார்த்தங்களான தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் நான்கும், கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்னும் மூன்றும் இந்திய மண்ணின் ஆன்மீக அணுகு முறைக்கான புரிதலுக்கு உதவும். ஆனால் ஆன்மீகம் ஐன்ஸ்டீனுக்கும் வாய்த்தது. இந்த மண்ணிலிருந்து துவங்குபவருக்கு சாத்திரங்கள் இந்தப் புரிதலுக்கு அன்னியமானவற்றையும் அடக்கியவையே. சாத்திரங்களை ஒப்பிடுகையில் உபநிடதங்களில் பகவத் கீதையும் கடோபநிஷதமும் வாதப் பிரதிவாதமாக அமைந்தமையால் புரிதலுக்கான துவக்கத்துக்கு மிக ஏற்றவை.

Continue reading

தீபாவளி யாருடையது?

தீபாவளி யாருடையது?

ஜெயமோகன்.இன் ல் இருந்து

100_3588

[பிக்கானீர். அருகர்களின் பாதை இந்திய நெடும்பயணத்தின் போது]

அன்புள்ள ஜெ

நலமா? இந்திய மரபு, ஆன்மிக சிந்தனைகள், தத்துவங்கள் என உங்களின் பல தரவுகளை படித்து இருக்கிறேன், படித்தும் வருகிறேன். வெகு நாட்களாக மன ஆழத்தில் இருக்கும் கேள்வி இது, ‘தீபாவளி’ தமிழர் பண்டிகை இல்லையா? இது வட நாடு சென்று தென் நாடு மீண்ட ஒரு பண்டிகையா உண்மையில்? நமது தீப ஒளி பண்டிகையான ‘கார்த்திகை’ தீபத் திருவிழாவின் வட நாட்டு வடிவமா? நரகன் என்பவனே , தேவ அசுர மோதல்கள் என புனையப்படும் ஆரிய திராவிட இன குழுக்களின் மோதல்களில் திராவிட இனச் சார்பாக நின்ற மாவீரனின் படிமமா? நமது இன அழிப்பை (தொன்ம வரலாறு அல்லது புராணத்தின் படி) நாமே கொண்டாடும் ஒரு இழிவான பண்டிகையா? அனைத்துக்கும் மேலாக, ஒருவனது இறப்பை நாம் கொண்டாடலாமா? நாம் பண்பட்டவர்கள் இல்லையா? என்றும் எனக்குள்ளும் எனக்கு வெளியேயும் கேள்விகள் பல, விடை தேடி உங்களிடம் மீண்டும் நான்.

அன்புடன்
சக்திவேல், சென்னை Continue reading