இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி

இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி

[சொல்புதிது குழுமவிவாதத்தில் இருந்து ஜெயமோகன்.இன் ல் வெளியானது]

அன்புள்ள ஜெ,

நீண்ட நாட்களாய் எனக்குள் இருந்த ஒரு சந்தேகத்தைக் கேட்கிறேன்.நீங்கள் அடிக்கடி இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றிப் பேசுகிறீர்கள்.இது எவ்விதம் சாத்தியம் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.நாரயண குருவும் அரவிந்தரும் கென் வில்பரும் இது பற்றி எழுதியதைப் படித்திருக்கிறேன்.ஆனாலும் இதை நேர்வாழ்வில் பாவிப்பதன் சாத்தியங்கள் பற்றி எனக்குச் சந்தேகம் இருந்துகொண்டேதான் உள்ளது.

இலக்கியமும்,தத்துவமும் இரண்டு எதிர்நிலைகள் அல்லவா..ஒன்று எல்லாவற்றையும் தொலைவிலிருந்து பார்க்கும் பருந்துப் பார்வை எனில் இன்னொன்று எல்லாவற்றையும் மிக நெருங்கி உருப்பெருக்கி மூலம் கூர்ந்து பார்ப்பது அல்லவா.ஒன்று எல்லாவற்றையும் மிகு உணர்ச்சியுடன் அணுகுவது.ஒன்று மிகு தர்க்கத்துடன் அணுகுவது.ஒருவரால் எப்படி இரண்டு பார்வைகளையும் ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளமுடியும்..நான் படித்த வரையில் இலக்கியவாதிகளின் தத்துவமோ தத்துவவாதிகளின் இலக்கியமோ அத்துணை பூரணமாய் இல்லை.[அரவிந்தரின் சாவித்திரி போல.].

என்னால்இந்த இருமைகளைத் தாண்டிப் போக முடிந்ததே இல்லை.ஒன்றை நோக்கி நான் இழுக்கப் படும்போது மற்றது சுமையாக என்னைப் பின்னோக்கி இழுப்பதை உணர்ந்திருக்கிறேன்.நீங்கள் கூட உங்கள் திரிதல் பருவத்தில் ஒரு மடத்தில் ‘எழுதுவதே உன் அறம்”என்று ஒருவர் மடை மாற்றியதைப் பற்றி சொல்லி இருந்தீர்கள்.இப்போது இந்தப் பிளவு உங்களைத் தொந்தரவு செய்வதில்லையா?இரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்யும் என நீங்கள் சொல்வீர்கள் என நினைக்கிறேன்.எதிரெதிர்த் திசைகளில் செல்லும் இரண்டு பாதைகள் எங்கே எவ்விதம் சேர்கின்றன?

போகன்

***

போகன்:

விஷ்ணுபுரத்திலேயே இந்த விவாதம் ஆரம்பம் முதல் இருந்தது. மானுட அறிதல்,மானுட அனுபவம் ஒன்றே. புலன்களும் அறிதல்முறையுமே அதைப் பலவாக்குகின்றன.

நடராஜகுரு ‘அறிவியலைப் பாடலாமா?’ என ஒரு நல்ல கட்டுரை எழுதியிருகிறார்.Can a science be sung? அவரது விஸ்டம் என்ற தொகைநூலில் உள்ள இக்கட்டுரை சொல்புதிதில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது.

[நடராஜகுரு]

நடராஜ குரு இவ்விஷயத்தில் ஹென்றி பெர்க்ஸன், ஏ என் வைட்ஹெட், ரஸல் , விட்கென்ஸ்டைன்ஆகியோரை எடுத்துக்கொண்டு மேலே சிந்தித்துச்செல்கிறார். Continue reading

19. சத்காரியவாதமும், வேதாந்தமும் – தொடர்ச்சி

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

சாங்கியம் – சத்காரியவாதமும், வேதாந்தமும் – தொடர்ச்சி

[மேகமலை பயணத்தின் போது]

சாங்கிய தரிசனத்தை புரிந்துகொள்வதில் இடறல் ஏற்படக்கூடிய இடம் இது. அது குணபேதங்கள் இல்லாத பருப்பொருளையே முதலில் ஆதி இயற்கை என்கிறது. முக்குணங்களின் சமன் குலைந்ததும் உருவாகும்’மகத்’ என்பது ஒரு கருத்து நிலை அல்லது ஓர் இயல்பு! அதாவது , பருப்பொருள் திடீரென்று கருத்து வடிவமாக, பிரக்ஞை வடிவமாக மாறுகிறது.

தத்துவ விவாதத்தில் எப்போதுமுள்ள பிரச்சினை உயிரற்ற ஜடப்பொருட்களில் இருந்து தான் உயிரும் பிரக்ஞையும் எப்படி உருவாயின என்பதுதான். இதை மேற்குறிப்பிட்ட விதத்தில் சாங்கியம் எதிர் கொண்டது. இந்தப் புள்ளிக்குப் பிறகு சாங்கியத்தின் தருக்கம் கருத்து முதல்வாதத்தை நோக்கி (அதாவது தலைகீழாகத்) திரும்பியிருப்பதைக் காணலாம். மகத் என்ற பிரக்ஞை விதையில் இருந்து தன்னுணர்வு உருவாகிறது. இதுவும் ஒரு கருத்து வடிவமே. அதிலிருந்து அனுபவங்கள். அனுபவத்திலிருந்து புலன்கள். புலங்களிலிருந்து உருப்புகள். இவற்றின் விளைவாக ஐந்து பரு வடிவங்கள் உருவாயினவாம். அதாவது பஞ்ச பூதங்கள் என்பவை நம் ஐந்து புலன்களின் விளைவாக வெளியே தெரிபவை மட்டுமே! Continue reading

மனிதாபிமானமும் தத்துவமும்

மனிதாபிமானமும் தத்துவமும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[நண்பர்களுடன். இலக்கிய முகாம், ஊட்டி நாராயண குருகுலம்]

அன்புள்ள ஜெ

மீண்டும் ஒரு கேள்வி. இதெல்லாமே என்னுடைய மன உறுத்தல்கள்தானே ஒழிய உங்களை சீண்டுவதற்காகவோ வெட்டி சர்ச்சைக்காகவோ கேட்கவில்லை. இந்தமாதிரி பிரபஞ்ச உண்மைகளைப்பற்றி பேசுவதனால் மனிதனுக்கு என்ன பயன்? மனித வாழ்க்கையை அது மேம்படுத்துகிறதா என்ன? இந்தப் பேச்சுகள் மூலம் கண்ணெதிரே உள்ள வாழ்க்கையை நாம் நிராகரிக்க நேரும் அல்லவா? இது நம்மை மனிதாபிமானம் இல்லாதவர்களாக ஆக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. உங்கள் கருத்தை கோருகிறேன்.

சிவகுமார் பொன்னம்பலம்

அன்புள்ள சிவக்குமார்,

கார்ல் சகனின் ’புரோக்காவின் மூளை’ [ [Broca’s Brain, Carl Sagan] என்ற நூலை வாசித்துக்கொண்டிருக்கும்போது ஒருவரி மனதில் தடுக்கியது. ’பிரபஞ்சவெளியின் முடிவில்லாத தூசிப்பரப்பில் அதன் ஒரு பருக்கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு தற்காலிக நிகழ்வுதான் உயிர் என்பது. அதில் ஒரு சிறுகூறுதான் மானுடம். மனிதனுக்கு சிறப்புக்கவனம் கொடுக்கும் படைப்புசக்தியோ காக்கும்சக்தியோ ஏதுமில்லை. அது மனிதவாழ்வில் தலையிடுவதும் இல்லை.நவீன அறிவியல் மானுடமைய ஆன்மீகத்தை முழுமையாகவே ரத்து செய்துவிட்டது’ Continue reading

18. சாங்கியம் – சத்காரியவாதமும், வேதாந்தமும்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

ஆறு தரிசனங்கள்

சாங்கியம் – சத்காரியவாதமும், வேதாந்தமும்

[மழைப்பயணம்.கவி, கேரளா]

சத்காரிய வாதத்தை சாங்கிய அறிஞர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள் என்று அறிய அவர்கள் எப்படித் தங்கள் முக்கிய எதிர்த்தரப்பான வேதாந்தததை எதிர்கொண்டனர் என்று பார்ப்பது உதவிகரமானதாகும்.

பிரம்மம் மட்டுமே ‘சத்’ அல்லது ‘இருப்பு உடையது’ என்கிறது வேதாந்தம்.பிரபஞ்சம் ‘அசத்’ அதாவது ‘இருப்பு அற்றது’ (அல்லது மாயத்தோற்றம் அல்லது மனமயக்க நிலை); சத் வடிவமான பிரம்மதிலிருந்தே அசத் வடிவமான பிரபஞ்சத்தோற்றம் உருவாயிற்று என்று அது கூறியது. Continue reading

இங்கிருந்து தொடங்குவோம்

கொஞ்சநாள்முன்னர் நானும் நண்பர்களும் வட தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது ஒரு விவசாயி சொன்ன வசனம் காதில் விழுந்தது ”…அப்பாலே சடங்கு சாங்கியம்லாம் செஞ்சு பொண்ணைக் கூட்டிட்டு வந்தாச்சு…” நண்பர் கேட்டார், ”சடங்கு சரி, அதென்ன சாங்கியம்?” ஜெயமோகன்.இன் ல் இருந்து

§§§

இங்கிருந்து தொடங்குவோம்

by

ஜெயமோகன்

[மேகமலையில் நண்பர்களுடன்]

இந்து ஞான மரபில் பரிச்சயம் உள்ள ஒருவருக்கு சாங்கியம் என்ற சொல் மிக அறிமுகமானதாகவே இருக்கும். அது நம் சிந்தனை மரபில் உள்ள ஒரு முக்கியமான பிரபஞ்ச தரிசனத்தின் பெயர். சாங்கிய தரிசனத்தை கபில ரிஷி தொகுத்தளித்தார். அவர் எழுதிய நூல் சாங்கியகாரிகை.

சாங்கிய தரிசனம் கடந்த காலத்தில் மிக முக்கியமான சிந்தனையாக இருந்திருக்கிறது. ‘முனிகளில் நான் கபிலன்’ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான். கபிலர் பிறந்த ஊர் கபில வாஸ்து. அந்த ஊரில்தான் புத்தர் பிறந்தார். பௌத்த சிந்தனையில் சாங்கியத்தின் செல்வாக்கு அதிகம். சாங்கியத்தின் துணைத் தரிசனமாகத்தான் யோகம் உருவாகி வந்தது. இன்று யோகம் இந்து,சமண,பௌத்த மதங்களுக்கு பொதுவான ஒரு ஞான வழிமுறையாக உள்ளது.

சாங்கியம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? ஜெக்கோபி என்ற இந்தியவியல் அறிஞர் ‘சங்கிய’ என்ற சொல்லில் இருந்து வந்தது என்று ஊகிக்கிறார். கறாரான கணிதத் தன்மை கொண்ட ஒரு சிந்தனை என்ற பொருளில் வந்திருக்கலாம் என்கிறார். அது ஒரு ஊகம்தான். Continue reading

17. சாங்கியத்தின் தத்துவ மையம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

ஆறு தரிசனங்கள்

சாங்கியத்தின் தத்துவ மையம்

[மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணனுடன். மேகமலை.]

சாங்கியத் தரிசனத்தின் தத்துவ மையம் என்பது அது முன் வைக்கும் விடுதலைக்கான வழியேயாகும். சாங்கிய காரிகையில் உள்ள முதல் சுலோகமே மானுட துக்கத்தை தீர்ப்பதே சிந்தனையின் நோக்கம் என்று கூறுகிறது. துக்கமிலாத வாழ்வே விடுதலை. துக்கம் அறியாமையிலிருந்து உருவாகிறது. ஆகவே அறிவே விடுதலை தருவது என்கிறது சாங்கியம்.

அத்யாத்மீகம், ஆதி பெளதிகம், ஆதி தெய்வீகம் எனும் மூவகைத் துயரங்களுக்கு இரையாகக் கூடியவன் மனிதன். அகத்துயரம், புறத்துயரம், இயற்கை நியதி தரும் துயரம் என்று இம்மூன்றையும் தமிழ்ப்படுத்தலாம். மனக்குழப்பங்கள், காமம், குரோதம், மோகம் போன்ற தீங்குதரும் இச்சைகள், நோய்கள் முதலியவை அகத்துயரங்கள். சமூக அமைப்பு மூலமோ இயற்கைப் பொருட்களின் மூலமோ விளையும் துயரங்கள் புறத்துயரங்கள். இயற்கை விதிகள், பிரபஞ்ச இயக்கம் முதலிய, மனிதனுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட காரணங்களிலிருந்து வரும் துயரம் இயற்கைத்துயரம்.

இம்மூன்று துயரங்களையும் மனிதன் எதிர் கொண்டே ஆகவேண்டும். இவற்றை தடுக்க அவனால் முடியாது. ஆனால் இவற்றை காரண காரிய ரீதியாக புரிந்துகொண்டான் என்றால் அவனுக்கு அச்சமோ பதற்றமோ பரிதவிப்போ ஏற்படுவதில்லை. இவை தரும் துயரங்களில்லிருந்து அவன் தன்னை விடு விடுவித்துக்கொள்ள முடியும். சாங்கியம் தரும் அடிப்படைப் புரிதல் அவ்விடுதலைக்கு உதவும். அதைச் சாங்கிய மரபு ‘ வியக்த அவியக்த விஞ்ஞானம்’ என்கிறது. இதைத் ‘தெரிந்தது தெரியாதது குறித்த அறிவு” என்று விளக்கலாம். நமக்கு தெறிவது இயற்கை. தெரியாதது மூல இயற்கை. மூல இயற்கை இயற்கையாக மாறி இயங்கும் விதமே நாம் அறிய வேண்டியது. Continue reading

தூய அத்வைதம்

தூய அத்வைதம்

[ஜெயமோகன்.இன் ல் இருந்து]

[நண்பர்களுடன். இலக்கிய முகாம், ஊட்டி நாராயண குருகுலம்]

அன்புள்ள ஜெ,

உங்கள் பல கட்டுரைகளில் தூய அத்வைதம் என்று வருகிறது. அது என்ன? வேதாந்தமா? அல்லது அத்வைதத்திலேயே இரு பிரிவுகள் உள்ளனவா? அத்வைதத்தை சைவம் என்று கொள்ளலாமா? ஏனென்றால் வைணவர்கள் அத்வைதத்தை மறுத்துத்தானே விசிஷ்டாத்வைதம் பேசுகிறார்கள்? தமிழ்நாட்டில் சைவர்களான ஸ்மார்த்த பிராமணர்களே அதிகமும் அத்வைதம் பேசுகிறார்கள். இந்தக்குழப்பம் பலவருடங்களாகவே எனக்கு இருக்கிறது. உங்கள் விளக்கம் உதவும் என நினைக்கிறேன்

கெ.டி.சாமி

அன்புள்ள சாமி அவர்களுக்கு,

நானும் பல சந்தர்ப்பங்களில் நேர்ப்பேச்சில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நேரிட்டிருக்கிறது. அப்பதில்களை இந்த தருணத்தில் தொகுத்துக்கொள்ளலாமென நினைக்கிறேன்.

வேதாந்தம் என்பதன் நீட்சியும் வளர்ச்சியும்தான் அத்வைதம். அத்வைத வேதாந்தம் என்றுதான் சொல்வார்கள். ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் மத்வரின் துவைதம் நிம்பார்க்கரின் துவைதாத்வைதம் போன்றவை எல்லாமே வேதாந்தத்தின் பல்வேறு வளர்ச்சி நிலைகளே. அவற்றை ஒட்டுமொத்தமாக பிற்கால வேதாந்தங்கள் என்று சொல்வதுண்டு.

வேதாந்தம் என்ற சொல்லுக்கு வேதங்களின் இறுதி என்று பொருள். இரு வகைகளில் இச்சொல் பொருள்படுகிறது. பிற்காலத்தில் உருவான பல ஞானநூல்கள் வேதங்களுடன் இணைக்கப்பட்டன. பிராம்மணங்கள், ஆரண்யகங்கள்,உபவேதங்கள் போன்றவை இவ்வாறு இணைக்கப்பட்டவையே. அவ்வாறே பிற்கால ஞானநூல்களான உபநிடதங்களும் வேதங்களுடன் இணைக்கப்பட்டன. ஒவ்வொரு முக்கியமான உபநிடதமும் ஒரு வேதத்துக்கு உரியதாகும். உதாரணமாக சாந்தோக்ய உபநிடதம் சாமவேதத்தின் துணைப்பகுதி [ உபாங்கம்] இவ்வாறு வேதங்களில் இறுதியாக இணைந்தவை ஆதலால் உபநிடதங்களை ஒட்டிய சிந்தனை வேத இறுதி என்ற பொருளில் வேதாந்தம் என அழைக்கப்பட்டது Continue reading

16. ஆதி இயற்கை வாதம் – சாங்கியம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

ஆறு தரிசனங்கள் 

ஆதி இயற்கை வாதம் – சாங்கியம்

[பூட்டான் புலிக் கூடு மடாலயம் முன்பு]

ஆறு தரிசனங்களில் முதன்மையானதாகவும் காலத்தால் முற்பட்டதாகவும் கருதப்படுவது சாங்கியமேயாகும். சாங்கியத்திற்குத் தமிழில் ’ஆதி இயற்கைவாதம்’ என்று சாராம்சப்படுத்தி பெயர் சூட்டலாம். சாங்கியத்தின் முதன்மையான மையக்கருத்து, முக்குணங்களும் பரிபூரணச் சமனிலையில் இருக்கும் ஆதி இயற்கையைப் பற்றிய அதன் கணிப்புதான். புராதன இந்தியாவில் சாங்கியம் அறிஞர்கள் மத்தியில் மிகுந்த புகழ் பெற்றிருந்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

‘சங்கிய’ என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து சாங்கியம் என்ற சொல்லாட்சி உருவாயிற்று என்று கூறப்படுகிறது. எண்ணிக்கை, தருக்க ஞானம், பயன்பாடு சார்ந்த பொருள் ஆகிய பொருளில் பயன் படுத்தப்படும் சொல்தான் சங்கிய என்பது. தருக்கத்தை அடிப்படையான மெய்ஞான மார்க்கமாகக் கொண்டிருந்தமையால் சாங்கியம் இப்பெயர் பெற்றது போலும். சாங்கியம் என்ற சொல் தமிழில் வட்டார வழக்கில் குலச்சடங்கு என்ற பொருளில் பயன் படுத்தப்படுகிறது. Continue reading

சிற்பச்செய்திகள்

சிற்பச்செய்திகள்

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் தங்களது விஷ்ணுபுரம் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய கோயில் சார்ந்த கலைச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். உதாரணத்திற்கு விமானம், பிரகாரம், முகமண்டபம் மற்றும் பல. இதுபோல சிற்பங்கள் குறித்த கலைச் சொற்கள். இவைகளை எப்படி புரிந்து கொள்வது? தயவுசெய்து வழிகாட்டவும். காட்டுவீர்களா?

இப்படிக்கு
பா.மாரியப்பன்

அன்புள்ள மாரியப்பன்

கோயில்சார்ந்த கலைச்சொற்கள் பொதுவாக வையாபுரிப்பிள்ளை பேரகராதியில் உள்ளன. தனியாக ஒரு கலைச்சொல்லகராதி இல்லை. இந்தப் பெருங்குறையை அ.கா.பெருமாள் அவர்களிடம் பேசியதுண்டு. பெருமாள், செந்தீ நடராசன் இருவரும் இணைந்து கோயில்சிற்பக்கலை சார்ந்த ஒரு சிறிய கலைக்களஞ்சியம் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு வருடங்களாக வேலை நடந்துகொண்டிருக்கிறது

கீழக்கண்ட நூல்கள் தகவல்களை அளிக்க உதவியானவை

[வரலாற்றாய்வாளர் திரு அ.கா.பெருமாள்

இடம்: குமரிமாவட்டம் முஞ்சிறை அருகில்]

சுசீந்திரம் கோயில் – அ.கா.பெருமாள்

தென்னிந்திய திருக்கோயில்கள் – கெ.ஆர்.சீனிவாசன்

திருவட்டார் பேராலயம் – அ.கா.பெருமாள்

தஞ்சை பெரியகோயில் – குடவாயில் பாலசுப்ரமணியம்

ஜெ

மூலக்கட்டுரைகள்

http://www.jeyamohan.in/?p=21461

http://www.jeyamohan.in/?p=2291

http://www.jeyamohan.in/?p=2042

 

தென்னிந்திய திருக்கோயில்கள் – கெ.ஆர்.சீனிவாசன்

தென்னிந்திய திருக்கோயில்கள் – கெ.ஆர்.சீனிவாசன்

நூல் அறிமுகம் by ஜெயமோகன்

[ஜெயமோகன்.இன் இல் இருந்து தொகுத்தது]

[தஞ்சை பெரிய கோயில் – பிரகதீஸ்வரர் ஆலயம் ]

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது நாம் வேறு வழியில்லாமல் கோயில்களுக்கே செல்ல வேண்டியிருக்கும். காடுகள், அருவிகள், மலைகள், ஆறுகள் என நம்முடைய இயற்கை அற்புதங்கள் பல உண்டு. ஆனால் அங்கெல்லாம் அவற்றின் பகுதியாக கோயில்களும் இருக்கும். பிரம்மாண்டமான ஒரு ஆன்மிக மரபு கிளைவிட்டு கிளைவிட்டு தழைத்த நிலத்தில் இங்குள்ள கலை இலக்கியம் வாழ்க்கைமுறை அனைத்துக்கும் கோயில்களே ஆதாரமாக நிற்கின்றன. Continue reading