உருவமும் அருவமும்

உருவமும் அருவமும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

nitya

[குரு நித்ய சைதன்ய யதி அவர்களுடன் ஆசிரியர்]

உருவம் இல்லாதவற்றுக்கு உருவம் தருவதுதான் புராதனமான இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படும் தனித்தன்மை. ஆனால் வேதகாலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் முற்றிலும் மாறுபட்ட வகையில் தங்கள் கற்பனையைச் செலுத்தியிருந்தார்கள். நாம் ஆராய வேண்டியது இதைத்தான்.

ரிக் வேதத்தின் முதல் குறிப்பு அக்கினியைப் பற்றியதாகும். கண்முன் எரியும் அக்னி உரு யதார்த்தம். ஆனால் வேதங்களில் உள்ள அக்னி முற்றிலும் அருவமானது. அதாவது உருவத்திலிருந்து உருவின்மைக்கு, பருண்மையிலிருந்து சூட்சுமத்திற்குப் போவதற்கான யத்தனத்தை நாம் வேதங்களில் காண்கிறோம்.

அக்னியிலிருந்து அக்னித்துவத்திற்கு நகர்கிறது அக்கற்பனை.

நித்ய சைதன்ய யதியின் எழுத்துக்களுக்காக நண்பர் சீனிவாசன் நடத்திவரும் இணையதளம்

http://gurunitya.wordpress.com

இந்திய ஞானமரபும் காந்தியும் [தொடர்ச்சி]

இந்திய ஞானமரபும் காந்தியும் [தொடர்ச்சி]

[08-09-10 அன்று பினாங்கு [மலேசியா] தண்ணீர் மலை காந்தி மண்டபத்தில் ஆற்றிய உரை]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

2mcy25e

[ஒரு புத்தகக்கடையில். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அருகில்]

காந்தி அவரது சாத்வீகப்போராட்டமுறையை சமண முனிவர்களிடமிருந்தே கற்றுக்கொண்டார். அவரது ஆயுதம் தியாகம். அவரது அதிகாரம் அறத்தாலானது. தான் நம்பும் ஒன்றுக்காக உயிர்துறக்க எப்போதும் அவர் தயாராக இருந்தார். அந்த தியாகமே அவரை வெல்ல முடியாதவராக ஆக்கியது. அவரது உண்ணாநோன்பும் சத்யாக்கிரகமும் சமணத்தின் வடக்கிருத்தல் அன்றி வேறல்ல என்பதை நாம் உணரலாம். காந்தியின் தோற்றம் கூட வெள்ளுடை அணிந்த ஒரு ஸ்வேதாம்பர சமணமுனிவரின் தோற்றமேயாகும். Continue reading

இந்திய ஞானமரபும் காந்தியும்

இந்திய ஞானமரபும் காந்தியும்

[08-09-10 அன்று பினாங்கு [மலேசியா] தண்ணீர் மலை காந்தி மண்டபத்தில் ஆற்றிய உரை]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[ஒரு விவசாயி. கும்பமேளா பயணத்தின்போது]

காந்தியின் சுயசரிதையான எனது சத்தியசோதனையில் ஓர் இடம் வருகிறது. மராட்டிய மாநிலத்தில் இருக்கையில் ஒருமுறை அவருக்கு உடம்பு சரியில்லாமலாகிறது. அஜீரணமும், காய்ச்சலுமாக துன்பப் படுகிறார். அலோபதி மருத்துவம் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. இந்நிலையில் அப்பகுதியில் யோகி என்று புகழ் பெற்றவரான ஒரு சாமியாரை அவருக்கு மருத்துவம் பார்க்க அழைத்து வருகிறார்கள். அவர் சில மர்மமான வழிமுறைகளை பயன்படுத்தி சிகிழ்ச்சை அளிப்பதாக சொல்லப் படுகிறது
Continue reading

கடவுள்நம்பிக்கை உண்டா?

கடவுள்நம்பிக்கை உண்டா?

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[பூடான். வடகிழக்கு பயணத்தின் போது]

அன்புள்ள ஜெ,

இந்து ஞான மரபு, தத்துவங்கள், பகவத் கீதை, உபநிடதங்கள் மற்றும் பல இதர நூல்களை விரிவாக, ஆழமாகக் கற்று உணர்ந்த நீங்கள், கோயில்களின் சூட்சுமங்களைப் பற்றிப் பேசும் நீங்கள், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாமல் இருப்பது பெரும் ஆச்சரியம் அளிக்கிறது.

மாபெரும் கோயில்களை, நூல்களை உருவாக்கியவர்களைச் செலுத்தியது கடவுள் நம்பிக்கை தான். கோயில்களில் பல மிக நுட்பமான, எளிதில் புரிந்து கொள்ள முடியாத சூட்சமங்கள் நிறைய உள்ளன. மூலவர் சிவலிங்கதிற்கு அடியில் சில ‘எந்திரங்களை’ப் (மந்திரிக்கப்பட்ட தகடுகள்) புதைத்திருக்கும் சூட்சமம் உள்ளது. ஆத்மார்த்தமாக வழிபடுபவர்களுக்கு ஏதோ ஒன்று கிடைக்கிறது.

எனது வாழ்வில், சில நம்ப முடியாத miracle like திருப்பங்களை, மாற்றங்களை பக்தியின் மூலம், கோயில்கள் மூலம் அடைந்திருக்கிறேன். ஜோதிடம் கற்றதும் இந்தப் பின்னணியில் தான். அசைவ உணவை அறவே விட்டு விட்டேன்.ராமாயணத்தின் ஒரு பகுதியான சுந்தர காண்ட பாராயணம் செய்து, பெரும்நற்பலனை அடைந்திருக்கிறேன். Medical miracle என்ற வகையில் !ஒரு பெரியாரிய குடும்பத்தில் பிறந்து, நாத்திகனாக வளர்ந்து, இன்று இப்படிமாற்றம் ! Continue reading

ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்

ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்

[ நவம்பர் 26, 2006 அன்று வர்க்கலை நாராயணகுருகுலத்தில் ஆற்றிய உரை]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

35mqqkh

[குரு நித்யா]

அன்புக்கும் வணக்கத்திற்கும் உரிய ஆசிரியர்களே, தோழர்களே,

அஜிதனை சின்னக்குழந்தையாக கையில் தூக்கிக்கொண்டு அலைந்த நாட்கள் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவை. அப்போது எனக்கு இரண்டு தலைகள். இரண்டு முகங்கள். ஒன்றுக்கு முப்பத்திரண்டுவயது. ஒன்றுக்கு ஒருவயது. ஒன்றில் இருந்து முப்பத்திரண்டுவரை நீண்டுபரந்த ஒரு மனம். ஆச்சரியமான ஓர் இணைவு. தெருவில் நான் செல்லும்போது என்னை ஒருவர் பின் தொடர்ந்து வந்தால் எனக்கு ஒருவயதா இல்லை முப்பத்திரண்டு வயதா என்ற சந்தேகம் எழும். அந்த உற்சாகத்தை அடைந்தபின் இன்றுவரை நான் அந்த ஒருவயதுக்குழந்தையை கீழே இறங்கவிடவில்லை.

Continue reading

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? [தொடர்ச்சி]

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? [தொடர்ச்சி]

[16–1–07 அன்று பாளையங்கோடை தூய சவேரியார் கல்லூரி தமிழ்துறை சார்பில் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[வட கிழக்குப் பயணத்தின் போது. சிக்கிம் ]

சார்த்ரும் காம்யூவும் இருத்தலியத்தின் பிதாமகர்கள். முன்னர் நான் சொன்ன சொற்றொடர்கள் இருத்தலியத்தின் மூலவரிகள் போன்றவை. முன்னர் நான் சொன்ன படைப்பாளிகலின் வரிசையை ஒட்டுமொத்தமாக நவீனத்துவர்கள் என்று அடையாளம் காட்டலாம்.

நான் வாசிக்க வந்த காலத்தில் நவீனத்துவத்தின் கொடி பறந்தது. இருத்தலியமே எங்கும் முழங்கும் தத்துவமாக இருந்தது. இந்திய மொழிகளில் நம் உடனடி முன்னோர்கள் அனைவருமே நவீனத்துவர்களாக இருந்தனர். அசோகமித்திரன் சுந்தர ராமசாமி சா கந்தசாமி இந்திரா பார்த்த சாரதி … மலையாளத்தில் ஓ.வி.விஜயன், எம் டி வாசுதேவன் நாயர் ,எம் முகுந்தன் ,புனத்தில் குஞ்ஞப்துல்லா கன்னடத்தில் யு ஆர் அனந்தமூர்த்தி, பி.லங்கேஷ், வங்காளத்தில் சுனில் கங்கோபாத்யாய அதீன் பந்த்யோபாத்யாய…
Continue reading

யாதெனின் யாதெனின்…

யாதெனின் யாதெனின்…

ஜெயமோகன். இன் ல் இருந்து

100_2622

[அருகர்களின் பாதை, இந்திய நெடும்பயணத்தில். ஃபெட்சா குகைவிகாரம். பூனா அருகே]

இரண்டு நாட்களுக்கு முன்னர் கெ.பி.வினோத் என்ற நண்பர் பார்க்க அலுவலகம ்வந்திருந்தார். நல்ல வாசகர். கணிப்பொறித்துறையில் ஒரு நிறுவன மேலாளராக இருக்கிறார். ரயில் டிக்கெட் எடுப்பதற்கான என்னுடைய சிரமங்கள் பற்றிய பேச்சு வந்தது. இணையம் மூலம் பதிவுசெய்யலாமே என்றார் வினோத். அதற்கு கடன் அட்டை வேண்டுமே என்றேன். ”என்னது, கடன் அட்டை இல்லையா?” என்று பிரமித்தபின் ”சரி பரவாயில்லை. ஒரு வைப்பு அட்டை பெற்றுக்கொள்ளுங்கள். எல்லா வங்கிகளிலும் கொடுப்பார்கள்”.நான் ”அதற்கு வங்கியில் பணம் போடவேண்டுமே..”என்றேன். அவர் சற்றுநேரம் வியந்து மாய்ந்துகொண்டிருந்தார். பொதுவாக கணிப்பொறி துறையில் இருப்பவர்களிடம் பிறர் எப்படி உயிர்வாழ்கிறார்கள் என்பதை சொல்லிப் புரியவைப்பத கஷ்டம்.

Continue reading

துறவு-கடிதம்

துறவு-கடிதம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

Swami-Ootty

[சுவாமி வியாசப்பிரசாத்,. நித்ய சைதன்ய யதியின் மாணவர்]

அன்பு ஜெயமோஹன்,

வணக்கம். ஆன்மீகம் பற்றிய தங்கள் கேள்வி பதிலில் ஒரு பாரம்பரியம் பற்றிய அதாவது இந்திய ஆன்மீகத்தின் வழி முறைகள் மீது தங்களுக்கு உள்ள ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும்படியான ஒரு பதிவைக் கண்டேன். இது இந்த மண்ணில் பிறந்தவருள் நடக்கும் உரையாடல் என்னும் அளவில் வேண்டுமென்றால் பொருந்தும். ஆனால் ஆன்மீகம் இந்த அணுகுமுறைக்குள் அடங்காத அளவு ஆழ்ந்தது. ஆன்மீகம் ஒரு தாயின் ஒவ்வொரு குழந்தையும் தாயன்பைத் தனக்கு என்ற ஒரு அந்தரங்க, தனித்த பேறாகக் கருதி வளருவது போன்றது. எனவே எந்தப் பாரம்பரியத்தில் பிறந்திருந்தாலும் முன்னோடிகள் எத்தனை பேர் இருந்தாலும் தானே விண்டு தானே கண்டு உணர வேண்டியதே அது. புருஷார்த்தங்களான தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் நான்கும், கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்னும் மூன்றும் இந்திய மண்ணின் ஆன்மீக அணுகு முறைக்கான புரிதலுக்கு உதவும். ஆனால் ஆன்மீகம் ஐன்ஸ்டீனுக்கும் வாய்த்தது. இந்த மண்ணிலிருந்து துவங்குபவருக்கு சாத்திரங்கள் இந்தப் புரிதலுக்கு அன்னியமானவற்றையும் அடக்கியவையே. சாத்திரங்களை ஒப்பிடுகையில் உபநிடதங்களில் பகவத் கீதையும் கடோபநிஷதமும் வாதப் பிரதிவாதமாக அமைந்தமையால் புரிதலுக்கான துவக்கத்துக்கு மிக ஏற்றவை.

Continue reading

நியாய தரிசனம் : பதார்த்தங்கள்

நியாய தரிசனம் : பதார்த்தங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

P1080924

[அருகர்கள் பாதை, இந்திய நெடும்பயணத்தின் போது . ஜெய்சாலமர்.]

பிரபஞ்ச இயல்பை முழுக்க திரவியம், குணம், கருமம், சாமானியம், விசேஷம் என் வைசேஷிகம் வகுத்தது என நாம் அறிவோம். இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பிரமேயம் (அறிபடுபொருள்) என்ற பதார்த்தமாக வகுத்து விடுகிற நியாயம், பதினாறு பதார்த்தங்களைப் பற்றிப் பேசுகிறது. பிரமேயம் அதில் ஒன்று மட்டுமே. மற்ற பதினைந்து பதார்த்தங்களும் அதை அறிவதற்கான படிநிலைகளும் வழிமுறைகளும் ஆகும்.

பிரமாணம், பிரமேயம், சம்சயம்,பிரயோசனம், திருஷ்டாந்தம்,சித்தாந்தம், அவயவம், தர்க்கம், நிர்ணயம், வாதம், ஜல்பம், விதண்டம், ஹோதாபியாசம், சலம், ஜாதி,  நிக்ரஹஸ்தானம் எனப் பதார்த்தங்களை நியாயம் வகுக்கிறது. Continue reading

சமணம் வைணவம் குரு – கடிதங்கள்

சமணம் வைணவம் குரு – கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

feet

[சமணப்பாதங்கள்]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். உங்களுடைய சிறுகதைத் தொகுப்பு, விஷ்ணுபுரம் படித்திருக்கிறேன். ப்ளாக்-ஐ நான்கு வருடங்களுக்கும் மேலாகப் படித்தும் வருகிறேன். நீங்கள் அமெரிக்கா வந்தபோது உங்களை கலிபோர்னியாவில் (Fremont) சந்தித்துப் பேசிய அனுபவமும் உண்டு. உங்களுக்கு நன்றி கூறி எழுத வேண்டும் என நிறைய நாள், பல முறை யோசித்தது உண்டு, ஆனால் என் சோம்பேறித்தனமே ஒவ்வொரு முறையும் வென்றது. Continue reading