விஷ்ணுபுரம் by கடலூர் சீனு

விஷ்ணுபுரம்

by கடலூர் சீனு

இனிய J.M,

இந்தப் பதிவினை ஓர் அறிமுக வாசகனின் எளிய பதிலாகவே முன்வைக்கிறேன். கடலின் ஆழமோ, விரிவோ, ஓய்வற்ற அலைநாவுகளின் தழலாட்டமோ, உலாடக்கிய உயிர்ச் சுழலோ இருக்காது, இது கரைமணலில் கிடக்கும் சங்கினில் அலை நிரப்பிய கடல் மட்டுமே.

உதிரத்தால் எரியும் சுடர்

தந்தை தனயன் உறவினை உள்ளார்ந்து இணைக்கும் உணர்வு எது? பிரியமா? துவேஷமா? தன் ஆளுமையை கடக்கும் மகன் மீது தந்தை கொள்ளும் பிரியம் அதன் ஆழத்தில் தன் தோல்வியின் வெறுப்பாக கனன்று கொண்டிருக்கிறதா? பவதத்தரின் விருப்பக் கனவு தானே விஷ்ணுதத்தன். ஞானத் தேட்டத்தில் பவதத்தரால் ஒருபோதும் தொடமுடியாத சிகரமல்லவா விஷ்ணுதத்தன் தொட்டது. பவதத்தர் அனுபவிக்கும் புத்திர சோகம் வரமாகி வந்த ஒன்றே சாபமாக மாறிப் போன துயரம் தானே? வேத ஞான வேள்வியில் அவிசாகிப் போனவன் விஷ்ணுதத்தனுக்காக வாழ்நாளின் இறுதிவரை வேத ஞானத்தை சிதையாக்கி எரிந்து கொண்டிருக்கிறார்

Continue reading