விஷ்ணுபுரம் ஆச்சரியங்கள்

விஷ்ணுபுரம் ஆச்சரியங்களை அளிக்கத் தவறுவதே இல்லை!

எழுதியவர் R.கோபி

R.கோபி தளம்

விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் நாவல்களைப் படித்துக் கொண்டிருந்தபோது, அவற்றைப் பற்றிய பதிவுகள் எழுதியபோது எனக்குத் தோன்றிய ஒரே விஷயம் இதுதான். இது முழுமையான வாசிப்பு இல்லை. இந்த நாவல்களில் மேலும் பல விஷயங்கள் உள்ளன. காலப்போக்கில் ஒவ்வொன்றாக எனக்குப் பிடிபடலாம். இவை வாலியைப் போல வரம் வாங்கி வந்தவை. நம் பலத்தில் பாதியை எப்போதுமே எடுத்துக்கொள்பவை. எந்தக் காலக் கட்டத்திலும் நூறு சதவீதம் புரிந்துகொண்டு விட முடியாது.

வேரை மறுத்தலும் சார்ந்திருத்தலும்
சமீபத்தில் புதுக்கோட்டை சென்றுவந்தேன். அப்பாவின் சொந்த ஊர். நாங்கள் பிறக்குமுன் அப்பா கும்பகோணம் வந்துவிட்டார். பின்னர் தொடர்புகள் அற்றுப்போய் இப்போது அங்கே யார் இருக்கிறார்கள் என்பதுகூடத் தெரியாமல் இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வமான தண்டாயுதபாணி குடிகொண்டிருக்கும் குமரமலைக்குப் போய் வந்திருக்கவேண்டும். பல்வேறு நிர்ப்பந்தங்கள் காரணமாகக் கும்பகோணத்திற்கு அருகிலிருக்கும் சுவாமிமலையிலேயே எல்லா வேண்டுதல்களையும் செய்து வந்துகொண்டிருந்தோம்.

Continue reading

விஷ்ணுபுரம் – R.கோபி

விஷ்ணுபுரம்

எழுதியவர் R.கோபி

R.கோபி தளம்

ஜெமோவின் படைப்புகளைப் படிக்கச் சொல்லித் தொடர்ச்சியாக என்னை வற்புறுத்துபவரும், மணிக்கணக்கில் என்னிடம் விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் நாவல்கள் குறித்துத் தொலைபேசியில் உரையாடுபவருமான நண்பர் ஜெய் கணேஷிற்கு இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறேன்.
*
இந்தக் கட்டுரையை விஷ்ணுபுரம் நாவல் பற்றிய என்னுடைய முழுமையான வாசிப்பனுவம் என்ற வகையில் பார்க்கலாகாது. தொலைவில் தெரியும் மலைச் சிகரத்தைப் காணும்போது மனதிற்குள் அதைப் பற்றி ஒரு சித்திரம் எழும். அது நிச்சயம் முழுமையானதன்று. நுட்பமான விஷயங்கள் தூரத்திலிருந்து நிச்சயம் கண்களுக்குப் புலப்படாது. அதற்கொப்பானதுதான் இந்தக் கட்டுரை. ஒருவேளை நான்கைந்து முறை திரும்பத் திரும்ப வாசித்தால் இந்த நாவலைப் பற்றிய தெளிவு ஓரளவிற்காவது கிடைக்கும். நாவலிலேயே வருவது போல விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரம் முப்பது நிலைகளுக்கு மேல் சாமான்யர்களுக்குத் தெரிவதில்லை.

படித்த தருணத்திற்கும் அதைப் பற்றி எழுதும் தருணத்திற்கும் இடையேயுள்ள உள்ள இந்தக் குறைந்த நேரத்திலும் சித்திரம் கலைந்து புதிதாக வேறொன்று தோன்றிவிடுகிறது.
*
நாவலைப் படிக்கும்போதோ அல்லது படித்து முடித்தவுடனோ ‘பிரமாண்டம்’ என்று ஒருமுறையேனும் வாசகர் பிரமிப்படையவில்லை எனில் அந்த வாசகர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம்.

விஷ்ணுபுரம் கோவிலின் ஒரு பகுதி எப்போதுமே பாழடைந்திருக்கும் என்பதாக வருகிறது. கோவிலின் பிரமாண்டத்தை இது மறைமுகமாகச் சுட்டுகிறது. முழுக்கோவிலையும் பொலிவுடன் வைத்திருப்பது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட விஷயம்.

Continue reading