அடிமைகளும் கலையும்

அடிமைகளும் கலையும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

3652-211430-Tanjore-temple-from-side

[தஞ்சை பெரிய கோயில்]

அன்புள்ள ஆசிரியருக்கு,

‘அருகர்களின் பாதை’ – வரலாறும் ஆன்மீகமும் கலையும் இலக்கியமான வர்ணனைகளும் கலந்த உன்னதமான அனுபவத்தில் தினமும் திளைத்தேன். உங்களைப் போன்றே ஆன்மஉணர்ச்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர்களால் இந்தியிலும் மற்ற மொழிகளிலும் மாற்றப்பட்டு மேலும் பல கோடி பேர் அனுபவிக்க வேண்டும் என்று ஆசையாகஇருக்கிறது !

அற்புதமான கோயில் கலைகளைப் பார்க்கையில் மனதோரம் களிம்பு போல ஒருசந்தேகம் ஒட்டிக் கொள்கிறது. (நீங்கள் சொல்லும் மனிதச் சிறுமையின்அடையாளமா என்று தெரியவில்லை). தங்கள் விளக்கம் என் பார்வையை விசாலமாக்கும் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்…

எகிப்து பிரமிடுகளைப் பற்றிய ஒரு காணொளியில் சில எலும்பு அகழ்வாராய்ச்சிகளைக் காட்டினார்கள் – குடும்பம் குடும்பமாக வருடக்கணக்கில் பிரமிடுக்கருகே வாழ்ந்து, டன் கணக்கில் கல் சுமந்து முதுகெலும்பு வளைந்தே போன பெயரற்ற அடிமைகளின் எலும்புகள்.

இதே போல இந்தியக் கோயில்களைக் கட்டவும் அடிமைகள் பயன்படுத்தப்பட்டார்களா? எனக்கு ராஜராஜன் மேல் இந்த விஷயத்தில் நம்பிக்கை இல்லை – ஆனால் குமாரபாலரும் ஆற்றிமாப்பியும் கட்டிய சமண ஆலயங்களிலும் இதே ரத்தக்கறை இருக்கிறதா ? அப்படி இருந்தால் அவற்றின் ஆன்மீகம் சற்று ஒளியிழக்கிறதா ?

நன்றி
மது Continue reading

ஆத்மாவும் அறிவியலும்:கடிதங்கள்

ஆத்மாவும் அறிவியலும்:கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

JJ%2520171

[அறம்  நூல் வெளியீட்டு விழா. ஈரோடு]

அன்புள்ள ஜெ,

செந்தில் அவர்களுக்கு நீங்கள் எழுதிய இரு கடிதங்களும் எனக்கு நிறையவே தெளிவினை அளித்தன. நான் நெடுநாட்களாகவே இந்த மாதிரி சந்தேகங்களைக் கொண்டிருந்தேன். கீதையிலும் உபநிஷத்துக்கள் எல்லாவற்றிலும் ஆத்மாவைப்பற்றிய பேச்சு உள்ளது. ஆனால் எல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பாடாக காணப்படுகின்றது. ஆத்மா உடலை விட்டு நீங்குவதும் வானத்தில் மிதந்து கொண்டிருப்பதையும் இன்னொரு உடலை அது எடுப்பதையும் எல்லாம் நாம் ஒரு இடத்திலே காண்கின்றோம். மற்ற இடத்தில் ஆத்மா மனிதனுக்குள் இருந்து கொண்டு ஜாக்ரம் ஸ்வப்னம் துரியம் ஆகிய முந்நிலைகளில் தன்னை கண்டுகொண்டிருக்கும் ஒரு அகம் மட்டிலுமே என்ற சிந்தனை உள்ளது  என்பதைக் காண்கின்றோம். நம்முடைய நூல்கள் இரண்டையுமே மாறி மாறிச் சொல்கின்றன.

Continue reading

தென்னிந்திய திருக்கோயில்கள் – கெ.ஆர்.சீனிவாசன்

தென்னிந்திய திருக்கோயில்கள் – கெ.ஆர்.சீனிவாசன்

நூல் அறிமுகம் by ஜெயமோகன்

[ஜெயமோகன்.இன் இல் இருந்து தொகுத்தது]

[தஞ்சை பெரிய கோயில் – பிரகதீஸ்வரர் ஆலயம் ]

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது நாம் வேறு வழியில்லாமல் கோயில்களுக்கே செல்ல வேண்டியிருக்கும். காடுகள், அருவிகள், மலைகள், ஆறுகள் என நம்முடைய இயற்கை அற்புதங்கள் பல உண்டு. ஆனால் அங்கெல்லாம் அவற்றின் பகுதியாக கோயில்களும் இருக்கும். பிரம்மாண்டமான ஒரு ஆன்மிக மரபு கிளைவிட்டு கிளைவிட்டு தழைத்த நிலத்தில் இங்குள்ள கலை இலக்கியம் வாழ்க்கைமுறை அனைத்துக்கும் கோயில்களே ஆதாரமாக நிற்கின்றன. Continue reading

சுசீந்திரம் கோயில் – அ கா பெருமாள்

சுசீந்திரம் கோயில் – அ கா பெருமாள்

நூல் அறிமுகம் by ஜெயமோகன்

[ஜெயமோகன்.இன் இல் இருந்து தொகுத்தது]

பலவருடங்களுக்குமுன் என்னுடன் ஒரு நண்பர் சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோயிலைப் பார்க்க வந்திருந்தார். கோயிலுக்குள் நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது நண்ப சட்டென்று ”இந்தக் கோயில் ஒரு மாபெரும் புத்தகம் அல்லவா” என்று ஆச்சரியப்பட்டார். நான் சற்று வேடிக்கையாக ”இல்லை, ஒரு மாபெரும் பத்திரப்பதிவாளர் அலுவலகம்” என்றேன். அவர் சிரித்தார். ஆம் சுசீந்திரம் ஒரு பிரம்மாண்டமான சமூக ஆவணக்குவியல்

குமரிமாவட்டத்தின் பிரம்மாண்டமான கோயில்களில் ஒன்று சுசீந்திரம். கன்யாகுமரிப்பாதையில் இது இருப்பதனால் பொதுவாக இங்கே வந்திருக்கக் கூடியவர்கள் அதிகம். பெரும்பாலானவர்கள் பயணத்தின் நடுவே புயல் வேகமாக கோயிலைக் கடந்துசென்றிருப்பார்கள். சற்றே கூர்ந்து கவனிப்பவர்கள் தென்தமிழ்நாட்டின் வரலற்றையே இந்த ஒரு கோயிலில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.

கன்யாகுமரி-நாகர்கோயில் சாலையில் நாகர்கோயிலில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சுசீந்திரம். சுசீந்திரம் கோயில் அமைந்திருக்கும் இடம் வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் கொண்டது. கடலில் இருந்து சுசீந்திரம் வரை விரிந்து கிடக்கும் மணக்குடி காயல் ஒரு காலத்தில் சிறிய துறைமுகம் போலவே இயங்கியது. அதனருகே உள்ள கோட்டாறு பழங்காலம் முதலே முக்கியமான ஒரு சந்தைத்தலம். ஆகவே வணிகமுக்கியத்துவம் கொண்ட இடத்தில் அமைந்த பெரும் கோயில் இது.

 

தென்னாட்டின் முக்கியமான நெல்லுற்பத்தி மையமாக இருந்த நாஞ்சில்நாட்டின் நிர்வாகத்தலைமையகமாக இக்கோயில்தான் நெடுங்காலமாக இருந்துள்ளது. இக்கோயிலைச்சுற்றியிருக்கும் வேளாள ஊர்கள் 12 பிடாகைகளாக [வருவாய்ப்பகுதிகளாக] பிரிக்கபப்ட்டிருந்தன. அவர்கள் அனைவருமே தங்கள் ஆலோசானைகளை சுசீந்திரம் கோயிலில் சுப்ரமணியசாமிகோயிலின் முன்புள்ள செண்பகராமன் முற்றத்தில் கூடித்தான் தீமானிப்பது என்ற வழக்கம் இருந்தது. இது சுதந்திரம் கிடைக்கும் காலம் வரை இப்படியே நீடித்தது. Continue reading