3.தரிசனங்களின் அடிப்படைகள் – மெய்ஞானமரபு என்பது என்ன?

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் அடிப்படைகள்

மெய்ஞானமரபு என்பது என்ன?

இந்து மெய்ஞான மரபு என்றால் என்ன என்னும் கேள்வியினை மிக விரிவாகவும் தெளிவாகவும் நாம் எழுப்பியாகவேண்டிய தேவை இன்று உள்ளது. இம்மரபின் உள்ளேயுள்ள விஷயங்களைப் புரிந்து கொள்ள இது அவசியம்.

முதலில் இது குறித்து நமக்கிடையே உள்ள பிழையான புரிதல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக இந்து மெய்ஞானமரபு என்று கூறும்போது இந்து மதத்தையே நாம் குறிப்பிட்டுகிறோம். சிலர் பெளத்த மதத்தையும் சமண ( ஜைன ) மதத்தையும் சேர்த்துக்கொள்வார்கள்.

இந்து மதம் என்றால் என்ன? இப்போது நாம் இந்து மதம் என்று குறிப்பிடுவது உண்மையில் சைவம், வைணவம், சாக்தேயம், கெளமாரம், காணபத்யம், செளரம் என ஆறு வழிபாட்டுமுறைகைளின் தொகுப்பு ஆகும். நமது பழைய வழக்கப்படி ஒரு மதம் என்பது ஒரு குறிப்பிட்ட இறைவனை வணங்கும் வழிபாட்டு மறபே.

இந்த பட்டியலில் சேர்க்கப்படாத ஏராளமான சிறு வழிபாட்டு முறைகளும் இந்துமதம் என்ற அமைப்புகுக்குள் காணப்படுகின்றன. பல்வேறு பிராந்திய வழிபாட்டு  முறைகள் படிப்படியாக இந்து மதத்தில் சேர்வது இப்போதும் தொடர்ந்து நடக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பழங்குடி மக்கள் மற்ற மக்களுடன் தொடர்புகொள்வது அதிகரித்தது. அவர்களுடைய வழிபாட்டு முறைகள் இந்து மதத்தில் சேர்ந்தன. இது சமீப காலத்து உதாரணம். Continue reading

2.தத்துவம் – ஒரு எளிய அறிமுகம்: பழங்கால தத்துவம் இன்றைக்கு எதற்கு?

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

பழங்கால தத்துவம் இன்றைக்கு எதற்கு?

பரவலாக கேட்கப்படும் கேள்வி இது. ’சரி, புதிய தத்துவம் என்று எதைச் சொல்கிறீர்கள்?’ என்று நான் கேட்பேன். அவர்கள் மார்க்ஸியம் என்றோ, அணுக்கொள்கை என்றோ பதில் கூறுவார்கள். இத்தத்துவங்களின் நடைமுறை சார்ந்த அம்சங்கள், சில தருக்க முறைகள் மட்டுமே புதியவை. அடிப்படைகள் முழுக்க புராதன கிரேக்க சிந்தனையில் இருந்து பெறப்பட்டவை என்று நான் விளக்குவேன்.

தத்துவம் என்பது தொழில்நுட்பம் அல்ல. புதியது வந்ததும் பழையது போய்விடாது. ஒவ்வொன்றும் பிறிதின் தொடர்ச்சியாகவே எழமுடியும். தத்துவம் என்பது தருக்கங்களின் தொகுப்பு என்றேன். அத்தருக்கங்கள் எங்கிருந்து வருகின்றன? மனித மூளை செயல்படும் விதங்களில் இருந்து அல்லவா? மனித மூளை அன்றும் இன்றும் ஒன்றுதான். புறச் சூழல்தான் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஆகவே கலையிலும் தத்துவத்திலும் அடிப்படைகள் மாறுவதே இல்லை. அவற்றை எடுத்துரைக்கும் முறையும், புரிந்து கொள்ளப்படும் சூழலும் மட்டும் மாறியபடியே இருக்கும். மிகப்புராதனமான தத்துவ சிந்தனையின் அடிப்படைகள் இன்றைய நவீனச் சிந்தனைகளில் தொடர்வதைக் காணலாம்.

ஆகவேதான் அதி நவீன சிந்தனைகள் பெருகி வந்தபடியே இருக்கும் மேற்கத்திய அறிவுச் சூழலில் கூட அதிபுரான கிரேக்க சிந்தனையாளர்கள் முதற்கொண்டு எவருமே புறக்கணிக்கப்படுவதில்லை. ஒவ்வொருவரும் திரும்பத் திரும்ப வேறு வேறு கோணங்களில் வாசிக்கப்படுகிறார்கள். மறுகண்டுபிடிப்புச் செய்யப்படுகிறார்கள். Continue reading

விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்

விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்

ஜெயமோகன்

திண்ணை

விஷ்ணுபுரம் குறித்து கோ ராஜாராம் எழுதியிருந்ததில் இரு விஷயங்களுக்கு விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளேன்.

******

விஷ்ணுபுரத்தின் புகழுக்கு காரணம் விவாதங்கள் என்ற கருத்து தகவல் ரீதியாக சரியல்ல.அந்நாவல் வெளிவந்த போது சிற்றிதழ்களில் பரவலாக விமரிசனம் ஏதும் வரவில்லை.வந்த விமரிசனங்கள் அனேகமாக எல்லாமே சிறு சிறு தகவல் பிழைகளை சுட்டிகாட்டி அந்நாவலை எழுதுவதற்கு எனக்குள்ள தகுதியை மறுத்து கூற முற்படுபவை மட்ட்டுமே .அனேகமாக அப்படிச் சொல்லப்பட்ட எந்தப் பிழையும் சரியானது அல்ல.சொல்பவர்களின் அறியாமையையே அவை காட்டின.அவற்றுக்கு தொடர்ந்து விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தேன்.பிறகு விட்டுவிட்டேன் .இந்தியா டுடே இதழிலும் ஹிந்து விலும் மட்டுமே சாதகமான விமரிசனங்கள் வந்தன.காலச்சுவடு இதழ் நடத்திய ஒரு நூல் வெளியீட்டு விழாவில் சர்வ சாதாரணமான இரு நூல்களுடன் இதை இணைத்து பேசப்பட்டது. அந்நூல்கள் மிக மேலானவை என்றும் இது மோசமான நூல் என்றும் அங்கு பொதுவாகக் கருத்து தெரிவிக்கப் பட்டது, விதிவிலக்கு தேவதேவன். அவை பிரசுரிக்கப் பட்டன . மற்றபடி எந்த விவாதமும் ஆராய்ச்சியும் இங்கு சிற்றிதழ்ச் சூழலில் நடக்கவில்லை

Continue reading