விஷ்ணுபுரம்
by Samrat Ashok
கடந்த மூன்று மாதங்களாக விஷ்ணுபுரம் புதினத்தை படித்து வருகிறேன் . இன்று காலை அதை முடித்தேன் . ஒரு விதமான சோகம் என் மனதில் பரவியது . நான் தமிழ்ல் படித்த புதினங்களில் மிக முக்கியமான ஒரு பதிவு என்றே கூற வேண்டும் . இன்னும் சொல்ல போனால் ஆங்கிலத்தில் கூட இவ்வளவு தேர்ச்சியான நூலை படித்தது இல்லை . இந்த புத்தகம் விஷ்ணுபுரம் என்னும் ஒரு கற்பனை நகரத்தையும் அதன் மனிதர்களையும் பற்றியது . அந்த நகரத்தின் வரலாற்றின் வாயிலாக ஜெயமோகன் இந்திய ஞான மரபின் பல்வேறு கருத்தகளை முன் வைக்கிறார் . இந்த புத்தகத்தின் அடி நாதமாக விளங்குவது மனிதர்களின் தேடல் . மனிதன் தன்னை சுற்றி இருக்கும் இந்த பெருவெளியை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டே இருக்கிறான் . இந்த அடிப்படையில் உண்டானதே பல்வேறு சிந்தனைகளும் / சித்தாந்தங்களும் / மதங்களும் . இந்த முயற்சிகளால் அவன் இந்த அர்த்தமற்ற வாழ்கையின் வெறுமையை வெல்ல முயலுகிறான். அவனுடைய ஆணவம் தன்னை இந்த பெருவெளியின் மைய கூராக என்ன வைக்கிறது . அவன் சுற்றி வரும் ஒரு கூடத்தையே இந்த உலகம் என எண்ணி கொள்கிறான் . அவனுடைய ஆணவம் கலையும் பொழுதெல்லாம் அஞ்சி ஓடுகிறான் , ஆனால் வெறுமையே அவனுக்கு என்றும் எட்டுகிறது . ஞானத்தின் தேடல் அவனை வேதனை உணர்வுடனே விட்டு விடு கிறது .
நம்மை சுற்றி இருக்கும் இந்த உலகம் ஆச்சர்யம் நிறைந்த ஒரு இடம் , அதை பற்றி நமக்கு எண்ணற்ற கேள்விகள் மனதில் எழுந்த வண்ணம் உள்ளது . அதை தேடும் பொழுது அவன் மனதில் ஒரு பெரும் பிரளயம் வெடிக்கிறது . உலகத்தின் மீது உள்ள சுயம் சார்ந்த கனவு கலைகிறது . அவன் தேடி செல்லும் ஞானம் ஒரு கானல் நீறு போல் கரைந்துவிடுகிறது . அவன் மனம் நிரந்தரமான ஒரு தவிப்பால் நிறைந்து இருக்கிறது .
இந்த புத்தகத்தின் கதை விஷ்ணுபுரத்தின் ஞான மரபை சுற்றி நடை பெறுகிறது . விஷ்ணுபுரத்தின் தலைவன் தன்னுடைய தருக்க திறமையால் ஆளுகிறான் . அவனுடைய சித்தாந்தம் பிரபஞ்சத்தின் தோற்றத்தை பற்றியும் , அதன் தோற்றத்தின் காரணத்தையும் விளக்கவேண்டும் .