matrix + chaos தியரி = விஷ்ணுபுரம்

matrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்லாத தலைப்பு, வருத்தம் தராத நாவல் )

எழுதியவர் : பிச்சைக்காரன்

பிச்சைக்காரன் தளம்

மேட்ரிக்ஸ் படம் பார்த்து இருப்பீர்கள்… படம் பார்த்து இருப்பவர்களுடன் பேசினால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ரசித்து இருப்பதை பார்க்க முடியும்…

என்னை பொறுத்தவரை, அந்த படம் பார்த்து முடித்தவுடன், நாம் இருப்பது 2010 ல் தானா, உண்மையில் நாம் இருக்கிறோமா அல்லது இதெல்லாம் கற்பனை தோற்றமா , வேறு யாரவது நம்மை ப்ரோகிராம் செய்து வைத்து இருக்கிறார்களா என்றெலாம் தோன்றியது…
யோசித்து பார்த்தால், அப்படி இருக்கும் சாத்தியமும் இருக்கிறது…

அதே போன்ற உணர்வுதான், ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படித்து முடித்ததும் தோன்றியது…

நாமெல்லாம் உண்மைதானா அல்லது யாரோ ஒருவர் சொல்லி கொண்டு இருக்கும் கதையில் நாமெல்லாம் ஒரு பாத்திரம்தானா .. எல்லாமே ஒரு நாடகம்தானா என்று ஓர் உணர்வு ஏற்பட்டது…

Continue reading