விசிஷ்டாத்வைதம்

விசிஷ்டாத்வைதம்

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

[ஊட்டி இலக்கிய முகாம். ஒரு மாலை நடைப்பயணத்தில் வாசக நண்பர்களுடன்]

அன்புள்ள ஜெ,

தமிழில் அத்வைதம்- விசிஷ்டாத்வைதம் சம்பந்தமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இங்கே என்னுடைய சிக்கல் என்னவென்றால் தமிழில் அத்வைதம் பற்றி நல்ல நூல்களே அனேகமாக இல்லை. விசிஷ்டாத்வைதம் பற்றி நிறைய நூல்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாமே வைணவ பக்தி நோக்கிலே எழுதப்பட்டுள்ளன. விஷ்ணுவிடம் சரணாகதி அடைவதுதான் விசிஷ்டாத்வைதம் என்ற அளவில்தான் அவை பெரும்பாலும் காணப்படுகின்றன.தத்துவார்த்தமாக தூயநிலையில் நாம் அதை அறியவே முடிவதில்லை. வைணவனாக நின்றுதான் அறியமுடிகிறது. அந்நூல்களில் சங்கரரின் தத்துவங்கள் சாதாரண தளத்தில் நின்று கண்டிக்கப்படுகின்றன. பெரும்பாலான நூல்களில் சங்கரருக்கும் விசிஷ்டாத்வைதத்துக்கும் உறவே இல்லை என்ற அளவில்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் சாதாரண வாசகனாக நான் வாசிக்கும்போது ஒரே தத்துவதரிசனத்தின் இரு பார்வைகள் அவை என்ற எண்ணமே ஏற்படுகிறது. இந்த தத்துவங்களை நான் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு என் மனதில் வரையறைசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் இவற்றை எங்காவது வரையறை செய்து எழுதியிருக்கிறீர்களா?

ஆர். வெள்ளியங்கிரி Continue reading

இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி

இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி

[சொல்புதிது குழுமவிவாதத்தில் இருந்து ஜெயமோகன்.இன் ல் வெளியானது]

அன்புள்ள ஜெ,

நீண்ட நாட்களாய் எனக்குள் இருந்த ஒரு சந்தேகத்தைக் கேட்கிறேன்.நீங்கள் அடிக்கடி இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றிப் பேசுகிறீர்கள்.இது எவ்விதம் சாத்தியம் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.நாரயண குருவும் அரவிந்தரும் கென் வில்பரும் இது பற்றி எழுதியதைப் படித்திருக்கிறேன்.ஆனாலும் இதை நேர்வாழ்வில் பாவிப்பதன் சாத்தியங்கள் பற்றி எனக்குச் சந்தேகம் இருந்துகொண்டேதான் உள்ளது.

இலக்கியமும்,தத்துவமும் இரண்டு எதிர்நிலைகள் அல்லவா..ஒன்று எல்லாவற்றையும் தொலைவிலிருந்து பார்க்கும் பருந்துப் பார்வை எனில் இன்னொன்று எல்லாவற்றையும் மிக நெருங்கி உருப்பெருக்கி மூலம் கூர்ந்து பார்ப்பது அல்லவா.ஒன்று எல்லாவற்றையும் மிகு உணர்ச்சியுடன் அணுகுவது.ஒன்று மிகு தர்க்கத்துடன் அணுகுவது.ஒருவரால் எப்படி இரண்டு பார்வைகளையும் ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளமுடியும்..நான் படித்த வரையில் இலக்கியவாதிகளின் தத்துவமோ தத்துவவாதிகளின் இலக்கியமோ அத்துணை பூரணமாய் இல்லை.[அரவிந்தரின் சாவித்திரி போல.].

என்னால்இந்த இருமைகளைத் தாண்டிப் போக முடிந்ததே இல்லை.ஒன்றை நோக்கி நான் இழுக்கப் படும்போது மற்றது சுமையாக என்னைப் பின்னோக்கி இழுப்பதை உணர்ந்திருக்கிறேன்.நீங்கள் கூட உங்கள் திரிதல் பருவத்தில் ஒரு மடத்தில் ‘எழுதுவதே உன் அறம்”என்று ஒருவர் மடை மாற்றியதைப் பற்றி சொல்லி இருந்தீர்கள்.இப்போது இந்தப் பிளவு உங்களைத் தொந்தரவு செய்வதில்லையா?இரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்யும் என நீங்கள் சொல்வீர்கள் என நினைக்கிறேன்.எதிரெதிர்த் திசைகளில் செல்லும் இரண்டு பாதைகள் எங்கே எவ்விதம் சேர்கின்றன?

போகன்

***

போகன்:

விஷ்ணுபுரத்திலேயே இந்த விவாதம் ஆரம்பம் முதல் இருந்தது. மானுட அறிதல்,மானுட அனுபவம் ஒன்றே. புலன்களும் அறிதல்முறையுமே அதைப் பலவாக்குகின்றன.

நடராஜகுரு ‘அறிவியலைப் பாடலாமா?’ என ஒரு நல்ல கட்டுரை எழுதியிருகிறார்.Can a science be sung? அவரது விஸ்டம் என்ற தொகைநூலில் உள்ள இக்கட்டுரை சொல்புதிதில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது.

[நடராஜகுரு]

நடராஜ குரு இவ்விஷயத்தில் ஹென்றி பெர்க்ஸன், ஏ என் வைட்ஹெட், ரஸல் , விட்கென்ஸ்டைன்ஆகியோரை எடுத்துக்கொண்டு மேலே சிந்தித்துச்செல்கிறார். Continue reading