ஞானத்தின் பேரிருப்பு, விஷ்ணுபுரம் – சில குறிப்புகள் by வேணு தயாநிதி

ஞானத்தின் பேரிருப்பு

விஷ்ணுபுரம் – சில குறிப்புகள்

by வேணு தயாநிதி

Venu

2006-ஆம் ஆண்டு மதுரை புத்தகத்திருவிழாவில் தான் ஜெ.யை அறிமுகம் செய்துகொண்டேன். அவரின் சில சிறுகதைகள் சிற்றிதழ்களில் வெளிவந்த விவாதங்கள், கட்டுரைகள், நேர்முகங்கள் மற்றும் கன்னியாகுமரி நாவல் இவை மட்டுமே அப்போது படித்திருந்தேன்.

கன்னியாகுமரி நாவல் பற்றி பாராட்டு சொல்லிவிட்டு அதை ஃபெலினியின் 81/2 படத்துடன்2 ஒப்பிட்டுச் சொல்வதற்காக எண்ணங்களளைத் திரட்டிக்கொண்டிருந்தபோது, ”விஷ்ணுபுரம் படித்தீர்களா?” என்றார். “இல்லை” என்றதும் “அது படிக்க கொஞ்சம் கஷ்டமான புத்தகம் தான்” என்றார். விஷ்ணுபுரம் நூலை அப்போது நான் உண்மையிலேயே வாசித்திருக்கவில்லை என்பதால் என்னிடம் சொல்ல ஏதும் இருக்கவில்லை. ஆனால் அவரே அப்படிச்சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு வேறு விஷயங்களை விவாதித்தோம்.

Continue reading