விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்

விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்

ஜெயமோகன்

திண்ணை

விஷ்ணுபுரம் குறித்து கோ ராஜாராம் எழுதியிருந்ததில் இரு விஷயங்களுக்கு விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளேன்.

******

விஷ்ணுபுரத்தின் புகழுக்கு காரணம் விவாதங்கள் என்ற கருத்து தகவல் ரீதியாக சரியல்ல.அந்நாவல் வெளிவந்த போது சிற்றிதழ்களில் பரவலாக விமரிசனம் ஏதும் வரவில்லை.வந்த விமரிசனங்கள் அனேகமாக எல்லாமே சிறு சிறு தகவல் பிழைகளை சுட்டிகாட்டி அந்நாவலை எழுதுவதற்கு எனக்குள்ள தகுதியை மறுத்து கூற முற்படுபவை மட்ட்டுமே .அனேகமாக அப்படிச் சொல்லப்பட்ட எந்தப் பிழையும் சரியானது அல்ல.சொல்பவர்களின் அறியாமையையே அவை காட்டின.அவற்றுக்கு தொடர்ந்து விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தேன்.பிறகு விட்டுவிட்டேன் .இந்தியா டுடே இதழிலும் ஹிந்து விலும் மட்டுமே சாதகமான விமரிசனங்கள் வந்தன.காலச்சுவடு இதழ் நடத்திய ஒரு நூல் வெளியீட்டு விழாவில் சர்வ சாதாரணமான இரு நூல்களுடன் இதை இணைத்து பேசப்பட்டது. அந்நூல்கள் மிக மேலானவை என்றும் இது மோசமான நூல் என்றும் அங்கு பொதுவாகக் கருத்து தெரிவிக்கப் பட்டது, விதிவிலக்கு தேவதேவன். அவை பிரசுரிக்கப் பட்டன . மற்றபடி எந்த விவாதமும் ஆராய்ச்சியும் இங்கு சிற்றிதழ்ச் சூழலில் நடக்கவில்லை

Continue reading

விஷ்ணுபுரம்- ஜெயமோகன்

விஷ்ணுபுரம்- ஜெயமோகன்

by பாண்டியன் அன்பழகன்

வாசகன்

தற்கால தீவிர இலக்கிய படைப்பாளி ஜெயமோகனின் மிகப்பெரிய முயற்சியில் உருவான கணமான நாவல் (847 பக்கம்). அடிக்கடி பல இலக்கிய சர்ச்சைகளில் சிக்கி வலைப்பதிவுகளில் அதிகம் பேசப்படும் ஜெயமோகனின் நாவல் எதையும் இதற்கு முன் நான் வாசித்ததில்லை. ஒரு சில சிறுகதைகள், கட்டுரைகளை வாசித்ததுண்டு.
இந்நாவலை வாசிக்க நான் ஒரு மாதம் எடுத்துக்கொண்டேன். இது ஒரு சரித்திர நாவலுக்குறிய பாணியில் அமைந்திருக்கிற நவீன இலக்கியம். சிலர் இதை சரித்திர நாவல் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பழங்காலத்தில் நடந்ததாக  நம்பகத்தன்மையோடு  ஒரு கற்பனை கதையை ஆசிரியர் கூறுகிறார். இதில் வரும் ஊர் கற்பனை, காலம் கற்பனை, கதை மாந்தர்கள் கற்பனை, வரலாற்று பின்னனி நிகழ்வுகளும் கற்பனை…ஆனால் இதில் மையப்படுத்தப்படும் சமய தத்துவ விசாரனைகள் மட்டும் மெய். அதேசமயம் கதை ஓட்டத்தை பாதிக்கும் அளவுக்கு சலிப்பேற்படுத்திய பகுதியும் இதுதான்.

Continue reading

ஒரு பாடினியின் பரவசம்

ஒரு பாடினியின் பரவசம் – ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு பார்வை

by கிருத்திகா

வடிகால்

ஒரு பாடினியாய் இருந்திருக்கலாம்.  இசையும், கலையும், கவிதையும், கதையுமாய் காலம் கடத்தியிருக்கலாம். வியாபாரம், வணிகம், அயல்நாடு, உள்நாடு தொழில்விருத்தி இது ஏதுமற்று வாழ்வின் உன்னதங்களை சுகித்திருந்திருக்கலாம், ஊர் ஊராய், குழுக்களாய் பயணித்திருந்திருக்கலாம்,

இப்படி எத்தனையோ “லாம்”களை என்னுள் எப்போதும் விழித்திருக்கச்செய்திருக்கும் உணர்வுகள், ஒரு சமயம் கவிஞர் விக்ரமாதித்யனை எஸ்.ரா. தன் எழுத்துக்களில் பெருநகரப் பாணன் என்று விளித்திருந்த போது அந்த வார்த்தையின் வசீகரம் என்னுள் அவ்வுணர்வுகளை மீண்டுமொருமுறை கிளர்ந்தெழுந்து ஒர் பேயாட்டம் போடச்செய்தது.

இத்தகைய பாணர்களின் வாயிலாக கதை சொல்லல் தொடங்கப்படுகிறது பின் என்றும் எத்தனையோ கதைசொல்லிகளின் வாயிலாக இன்றும் விஷ்ணுபுரத்துக்கதைகள் சொல்லப்பட்டுகொண்டேயிருக்கிறது என்று அந்தப்புத்தகத்தின் முடிவில் நம்மால் தீர்க்கமாய் நம்பமுடிகிறது . இந்த கதைசொல்லிகளின் வரிசையில் நானும் ஒரு பாடினியாய் இங்குஜெயமோகனின் விஷ்ணுபுரம் பற்றி …..

Continue reading

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம்

from “ஒன்றுமில்லை

அந்த புத்தகம் அதன் பல பக்கங்களை புரட்டி கொண்டு இருந்தது. சில பக்கங்கள் மிக வேகமாகவும், சில பக்கங்கள் பல நாட்கள் புரட்டபடாமலும் இருந்தன. புத்தகமே அதற்கு காரணம். புத்தகத்தின் இயக்கம் புலப்பட நாள் பிடித்ததால் பேருந்தின் சன்னல் வழி பார்வை மட்டுமே கொண்டு வாசிக்க முடிந்தது.

*************
அந்த நகரத்தில் மதம் கொண்ட யானைக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு கொண்டிருந்தது. யானை ஒரே குழப்பத்தில் இருந்தது. யானையிலும் குலம் எதும் இருந்திருந்தால் தான் பிழைத்திருக்க வாய்ப்பிருக்குமா எனற ஐயம் கொண்டது. உயர் குல தண்டனைகள் மயிலிறகால் வருடுவதாகவும், தாழ்த்தப்பட்ட குல தண்டனைகள் கழுத்தறுப்பதாகவும் இருந்ததால் அது உயர் குலமாக மாறமுடியுமா என யோசிக்கலாயிற்று.

**************

அஜிதனுக்கும் பவதத்தருக்கும் இடையேயான ஞானசபை போராட்டத்தின் ஊடே வெவ்வேறு மதங்களான மீசாம்சம், சைவம், சமணமும் மற்றும் பௌத்த உட்பிரிவுகளும் தர்க்கமாய் வந்தன. விஷ்ணுபுர கோவிலில் கர்ப்பகிரகத்தின் கதவுகளால் அடைக்கப்பட்டவன் கூச்சல் தாளாது காதுகளை மூடிக் கொள்ள முடிவு செய்தான். செந்தலை பட்டனால் சிறையுண்டவன் இன்னும் கோபமாகதான் இருந்தான்.

Continue reading

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் -1

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் -1

By Dr. Suneel Krishnan

எதுவுமே தப்பில்ல

மானுடன் ஞானத்தை நோக்கி பயணம் செய்யும் தருணம் எது ? மானுட வாழ்வின் பொருளென்ன ? பிறப்பதும் மரிப்பதும் ஏன் ? உறவுகளின் பொருளென்ன ? துக்கமும் சுகமும் ஏன் ? காலம் என்பது என்ன ?  புலன்களுக்கு புலப்படாத ஒரு மிக பெரிய பகடை ஆட்டத்தின் காய்களா? வீழ்வதும் ,பிழைத்து இருப்பதும் மட்டுமே சாத்தியமான கோடானகோடி உயிரின் அர்த்தமற்ற சாகரத்தின் ஒரு சிறு துளி மட்டும் தானோ ?

எதன் மீது நிற்கிறோமோ ,எதை சாஸ்வதம் என்கிறோமோ அவை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டால் ,பின்பு எதன் மீது நிற்பது ,எதை பற்றி கடப்பது ? அப்படி ஏதேனும் ஒன்றை பற்றி தான் ஆகவேண்டுமா ? அக இருட்டில் தொலைந்து விடுவோம் , மனிதன் தனியன் .அவனுக்கு ஆக பெரிய பயம் அவனது மனம் தான் ,ஆம் அதை அவன் நெருங்குவதில்லை ,பாவனைகளால் விளக்கி அதை தர்க்க சட்டகத்தில் அடைத்து சொற்களால் பூசி ஒரு மாய மாளிகையை எழுப்புகிறான் .மனதை சந்திக்கும் திராணி மனிதனுக்கு இருப்பதில்லை ,உண்மைக்காக தேடல்களும் ,விவாதங்களும் ,தரிசனங்களும் ,இலக்கியங்களும் ,காப்பியங்களும் ,காவியங்களும் இன்னும் அனைத்தும்- சொற்களின் பிரவாகங்கள் நிரப்பி தன்னை தானே நம்ப வைக்கும் முயற்சி தானோ ? வாழ்க்கைக்கு பொருள் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் உரக்க சொல்வது தன் மனதை நம்ப வைக்கும் வெற்று உத்தியோ ?

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம்

by Samrat Ashok

Scratches in my grey matter

கடந்த மூன்று மாதங்களாக விஷ்ணுபுரம் புதினத்தை படித்து வருகிறேன் . இன்று காலை அதை முடித்தேன் . ஒரு விதமான சோகம் என் மனதில் பரவியது . நான் தமிழ்ல் படித்த புதினங்களில் மிக முக்கியமான  ஒரு பதிவு என்றே கூற  வேண்டும் . இன்னும் சொல்ல போனால் ஆங்கிலத்தில் கூட இவ்வளவு  தேர்ச்சியான நூலை படித்தது  இல்லை . இந்த புத்தகம் விஷ்ணுபுரம் என்னும் ஒரு கற்பனை நகரத்தையும் அதன் மனிதர்களையும்  பற்றியது . அந்த நகரத்தின் வரலாற்றின் வாயிலாக ஜெயமோகன் இந்திய ஞான மரபின் பல்வேறு கருத்தகளை முன் வைக்கிறார் . இந்த புத்தகத்தின் அடி நாதமாக விளங்குவது மனிதர்களின் தேடல் . மனிதன் தன்னை  சுற்றி இருக்கும் இந்த பெருவெளியை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டே இருக்கிறான் . இந்த அடிப்படையில் உண்டானதே பல்வேறு சிந்தனைகளும் / சித்தாந்தங்களும்  / மதங்களும் . இந்த முயற்சிகளால் அவன் இந்த அர்த்தமற்ற வாழ்கையின் வெறுமையை வெல்ல முயலுகிறான். அவனுடைய  ஆணவம் தன்னை இந்த பெருவெளியின் மைய கூராக என்ன வைக்கிறது  . அவன் சுற்றி வரும் ஒரு கூடத்தையே   இந்த உலகம் என எண்ணி கொள்கிறான் . அவனுடைய ஆணவம் கலையும்  பொழுதெல்லாம் அஞ்சி ஓடுகிறான் , ஆனால் வெறுமையே  அவனுக்கு  என்றும் எட்டுகிறது . ஞானத்தின்  தேடல் அவனை வேதனை உணர்வுடனே விட்டு விடு கிறது .

நம்மை சுற்றி இருக்கும் இந்த உலகம் ஆச்சர்யம் நிறைந்த ஒரு இடம் , அதை பற்றி நமக்கு எண்ணற்ற கேள்விகள்   மனதில் எழுந்த வண்ணம் உள்ளது . அதை தேடும் பொழுது அவன் மனதில் ஒரு பெரும் பிரளயம் வெடிக்கிறது . உலகத்தின் மீது உள்ள சுயம்   சார்ந்த கனவு கலைகிறது . அவன் தேடி செல்லும் ஞானம் ஒரு கானல் நீறு போல் கரைந்துவிடுகிறது . அவன் மனம் நிரந்தரமான  ஒரு  தவிப்பால் நிறைந்து இருக்கிறது .

இந்த புத்தகத்தின் கதை விஷ்ணுபுரத்தின் ஞான மரபை சுற்றி நடை பெறுகிறது  . விஷ்ணுபுரத்தின் தலைவன் தன்னுடைய தருக்க திறமையால் ஆளுகிறான் . அவனுடைய சித்தாந்தம் பிரபஞ்சத்தின் தோற்றத்தை பற்றியும் , அதன் தோற்றத்தின் காரணத்தையும் விளக்கவேண்டும்  .

இந்த  நகரம் தொடர்ந்து உருவாக்கவும் / அழிக்கவும் படுகின்றது . அந்த நகரம் காலத்தின் போக்கில் பல்வேறு தர்மங்களால் ஆள படுகிறது .  புத்தகத்தில் பல்வேறு  புனைகதைகள் உள்ளன , அவை அங்கு வாழும் மனிதர்களின் நம்பிக்கைவாயிலாக பல்வேறு சித்தாந்தங்களை ஆராய்கின்றன . இந்த கதை ஒரு விதமான non-linear  முறையில் எழுதப்பட்டு இருக்கிறது . இந்த கதையை படிக்கும் பொழுது , காலம் ஒரு சக்கரம் போல் திரும்பி வருவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது . கதை ஒரு பிரளயத்தில் முடிகிறது , கதையின் போக்கில் விஷ்ணுபுரம் ஒரு செழிப்பான நகரமாக  இருந்து அழிவில் போய் முடிகிறது . பிரளயத்தின் பொழுது விஷ்ணு திரும்பி படுக்கிறார் என்றும்  , அப்பொழுது மறுபடியும் பஞ்ச பூதங்களும் , உயிர்களும் தோன்றுகின்றன . மனிதனின் ஞான தேடலும் அவன் வளர்ச்சியும் மறுபடியும் தொடர்வதாக கதை நிறைவு பெறுகிறது  .தமிழில் இல்லகிய ஆர்வம் உள்ள அனைவரும் வாங்கி  படிக்க வேண்டிய ஒரு முக்கியமான நூல் இந்த விஷ்ணுபுரம் . ஜெயமோகனுக்கு என் வாழ்த்துக்கள் , அவரின் தமிழ்க்கும் , இந்திய ஞான மரபின் மீது அவருக்கு இருக்கும் ஆளுமைக்கும் என்  வணக்கங்கள் .

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் – 1

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் – 1

From Eternal Sunshine of the Spotless mind!

 

புத்தகத்தை வாங்கி வைத்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.இடைவிடாத வாசிப்பு இருக்க வேண்டுமெனவும், அதற்கான நேரம் வர வேண்டுமெனவும், தினமும் அதை பார்த்துவிட்டு கண்ணில் ஒற்றிக்கொள்வதுண்டு.கடந்த வாரம், ஒரு நாள், மனதின் குழப்ப தேவதை கனவில் வந்து தொடங்கலாம் என ஆசி தந்த பிறகு வாசிக்க எடுத்தேன். வாசிப்பை நிறுத்த முடியவில்லை.ஆனால், உள்வாங்கி அசைபோடுதற்கான இடைவெளி மிகவும் அவசியமானது.ஒரு காவியம் தொட்டு செல்லும் கவிகணங்கள்தான் எத்தனை! ஒரு விவரணையில் ஒரு செயலில் ஒரு கவிதையை விட்டு செல்கிறார். இந்த படிமத்திற்காக, எத்தனை தவமிருந்து அதை ஒரு சிறு துளியென சேர்த்துக்கொண்டிருக்கிறேன் என்று யோசித்தால், போதும் இந்த அற்ப பிரயாசை என்று தோன்றிவிடுகிறது.மனக்கண்கள் விழிப்பாக இல்லையென்றால், விஷ்ணுபுரத்தினுள் நுழைவது பிரயாசையாகத்தான் இருக்கும். விஷ்ணுபுரம் காட்டப்படுகிறது, நம்மால், அதன் நதிக்கரை காற்றை உணரமுடியுமளவு. காட்சி அடுக்குகளாகவே கதை எடுத்துசெல்லப்படுகிறது. ஒவ்வொரு காட்சியும் சொல்லப்படாத ஒன்றின் மௌனத்துடன் மறைகிறது. மீண்டும் வேறு காட்சிகளில் அதன் முடிவு சொல்லப்பட்டு நீள்கிறது. நம் கண்முன் நெய்யப்படும் கம்பளம் போல விரிகிறது.ஒருவகையில், இலக்கியத்தின் எல்லைகளை மீறி சினிமாவாகவும், சினிமாவால் என்றைக்குமே முழுமையாக சுவீகரிக்க முடியாத இலக்கியமாகவும். உயிரூட்டமான ஒரு காட்சியில் நீளும் மனபிரவாகமென.

ஸ்ரீபாத பாகம் இன்று தான் வாசித்து முடித்தேன். அதற்கிடையில், எண்ணங்களை கொஞ்சம் தொகுத்துக்கொள்ளலாம் என எழுதுகிறேன்.

முன்னுரையில் ஜெ குறிப்பிட்டிருப்பதுபோல, இந்நாவலின் எந்த ஒரு கதாபாத்திரத்தின் தரப்பும் வலியுறுத்தப்படவில்லை.ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே தொடர்ந்து செல்வோமானல், அது நம்மை தவறாகவே இட்டு செல்லும். இது, நம் அனைத்து சிந்தனைகளையும், மரபுகளையும், சித்தாந்தங்களையும் சற்று விலகி நின்று பார்ப்பதற்கான வாய்ப்பு. ஒவ்வொரு கதாபாத்திரமும் மற்றொன்றுடன் முரண்படும் போதும் மோதும்போதும் நமக்கு வாய்க்கும் கேள்விகளே, நாம் இதிலிருந்து பெற்றுக் கொள்ளக் கூடியது. உதாரணமாக, பிங்கலன் வனத்தில், புத்த ஸ்தூபியில், சந்திக்கும் புத்த பிக்கு. இயற்கையுடன் இயல்பாக வாழ்ந்துகொண்டிருப்பவர்.தினமும் அங்கு வந்து விளக்கு ஏற்றி விட்டு போவது மட்டுமே வாழ்க்கையின் நெறியாக கொண்டவர். அதில், அமைதியும் நிறைவும் காண்பவர். பிங்கலனால் நம்பமுடியாத, தாங்கவொண்ணாத வாழ்வு அது. ஆனால், அவனுடைய தேடலும் அவனை எதுவரை கொண்டு செல்லக் கூடும்? மனிதன் ஏன் பிறந்தான்? எதற்காக வாழ்கிறான்? இவையெல்லாம் விடையில்லாத கேள்விகள் என்பது தான் தேடலின் கண்டடைதலா? வேறு என்ன இருக்க முடியும்? ஆனால், அந்த பிக்குவின் அத்தகைய வாழ்க்கையும் ஒரு தேடலுடன் தானே தொடங்கியிருக்கும்? அல்லது, அப்படி தொடங்கியிருக்காவிட்டால், அதன் தரம் குறைந்துவிடுமா? “சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்று, அதனால் தான் சொல்கிறோமா? ஆனால், நம் தேடல் நம்மை அங்குதான் கொண்டு சேர்க்க முடியும் இல்லையா? நாமும் நம் விளக்கை தினமும் ஏற்றி வைக்க வேண்டும். அதை மட்டுமே செய்யவும் முடியும். அத்தனை பெரிய காவியம் படைத்த சங்கர்ஷணனே மீண்டும் தன் அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவதல்லாது வேறு கதியற்றவனாகிறான். யாருக்காக அவன் தன் காவியத்தை படைத்தான்? அவனையன்றி பிறருக்கென அவன் காவியம் படைக்கவும் தான் முடியுமா? பின், எதனால் அந்த ஏமாற்றம்? கவிஞனால் எந்த ஒரு பெண்ணிலும் நிறைவைக் காணமுடியாது என்பது போல, அவனால் எத்தகைய வாழ்விலும் நிறைவை காண முடியாது என்று தோன்றுகிறது.

மனிதனை இந்த வெறுமையிலிருந்து மீட்கவே, நம் மரபில் எத்தனை மார்க்கங்களும் இலட்சியவாதங்களும். இருந்தும் அவையெல்லாம் வெறும் சிந்தனை வெளிகளாக மட்டுமே இருந்துவிட்டன. தனி மனிதர்களின் சிந்தனைகள்.அவர்களின் தேடல்களால் உருவான சிந்தனைகள்.அவற்றால், எல்லாருக்குமான நியதியாக மாற முடியாது. அதனால்தான், நம் சமூகம் எத்தனை எத்தனை சிந்தனைகளையும் மீறி, ஒரு உன்னதமான சமூகமாக இருந்ததேயில்லை.

ஸ்ரீபாதம் மட்டுமே பார்க்க இத்தனை பிரமாண்டமாக இருக்கும்போது, விஷ்ணுபுரத்தின் முழு தரிசனம் கிடைத்ததும், சொல்ல வார்த்தைகள் இருக்குமா என தெரியவில்லை.

விஜயபாரதமும் விஷ்ணுபுரமும்

விஜயபாரதமும் விஷ்ணுபுரமும்

பொ. வேல்சாமி

வினையான தொகை தளம்

பெப்ரவரி 24, 2008 — Valarmathi

குறிப்பு:

ஜெயமோகனின் அரசியல் வெளிப்படையாகத் தெரிவது. ஆனால், அவரது இலக்கிய முயற்சிகளின்பால் பெரும்பான்மையான வாசகர்களுக்கு ஒரு பிரமிப்பு உள்ளது. முதலாவதாக அந்தப் பிரமிப்பு எப்படி உருவாக்கப்பட்டது, பொதுக்கருத்தியலுக்கும் அதற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து எழுதப்பட வேண்டும். பிறகு அவரது எழுத்துக்களை குறிப்பாக எடுத்துக் கொண்டு அணுகிப் பார்க்க வேண்டும். இரண்டிற்குமே பொறுமையும் கால அவகாசமும் தேவை.

என்னால் ஜெ – வைப் போல பேசுவதையெல்லாம் எழுதிவிட முடியாது. அதில் எனக்கு விருப்பமும் கிடையாது. நண்பர்களுடன் விரிவாகப் பேசுவது எனக்கு, சில கருத்தமைவுகளுக்கு என்ன எதிர்வினை கிடைக்கிறது, சிலவற்றை எந்த அளவிற்கு எளிமையாகச் சொல்ல வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்காகவே. பேசியதையெல்லாம் எழுதியிருந்தால் பல தலையணைகள் விழுந்திருக்கும். ஜெயமோகனைப் போல ஒரு பெருத்த வாயாடி என்ற பெயரையும் ஈன்றிருக்கலாம்தான். அதைவிட “சோம்பேறி” என்ற பெயரே பரவாயில்லை.

அது கிடக்கட்டும். எனது விரிவான விமர்சனங்களை கால அவகாசம் எடுத்துக் கொண்டு நிதானமாக எழுத நாள் பிடிக்கும். அதற்கு முன்பாக, ஜெ – வின் “விஷ்ணுபுரம்” நாவல் குறித்த பொ. வேல்சாமியின் இந்த சுவாரசியமான review உங்கள் வாசிப்பிற்கு. அவரிடம் ஒரு வார்த்தை கேட்ட பிறகே இதை இங்கு பதிவிலிடுகிறேன்.

இதில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லையெனினும், தமிழக வரலாற்றுக்கும் இந்நாவலுக்கும் இடையிலான உறவுப் புள்ளிகளாக அவர் சுட்டும் விஷயங்கள், புனைவெழுத்தில் கற்பனைக்கு உள்ள உறவு என்ன என்ற கேள்வியுடன் தொடர்புடையவை. அது குறித்த உரையாடலைத் தொடங்க இது ஒரு தொடக்கப் புள்ளியாக அமையலாம்.
Continue reading

விஷ்ணுபுரம் (1998)

விஷ்ணுபுரம் (1998)

ஜ.சிவகுமார்

கீற்று இணையதளம்

தமிழ்ப் புனைகதை உலகில் ‘விஷ்ணுபுரம்’ தனித்ததொரு நிலையில் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டது. இதற்குக் காரணம் இதன் கதையமைப்பு, மொழியமைப்பு என்பதை விடக் கதையை நிகழ்த்த ஏதுவான பரிமாணத்தை முக்கியமாகக் குறிப்பிடலாம். இந்நாவல் ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி என மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் தோற்றம் கொள்வதற்கு முன் வாழ்ந்த ஆதிமக்களின் வாழ்நிலை, விஷ்ணு புரத் தோற்றம், விஷ்ணுபுரத்திற்குள் நிகழும் உள்முரண்பாடுகள் ஆகியவற்றை முதற்கட்டமாகவும் விஷ்ணுபுரம் அழிவதற்கான காரணம், அழிவுற்ற பிறகான சமூகநிலை அதற்குப் பின்னும் சொல்லப்படுகிறது.

பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட விஷ்ணுபுரம் பார்ப்பனர்களின் செல்வாக்குமிக்க இடமாகத் தோற்றம் கொள்கிறது. விஷ்ணுபுரத் தலைவராகிய சூர்யதத்தரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே விஷ்ணுபுரம் அமைகிறது. அங்கு நிகழும் திருவிழாச் சடங்குகள், நீதி வழங்குதல் முதலானவற்றின் அடிப்படையில் இதனை அனுமானிக்க முடிகிறது. ஆனால் விஷ்ணுபுர பார்ப்பனர்களுக்கும் காளாமுகர்களுக்கும் இடையே நிகழும் உள்முரண்பாடுகள் காலச் சுழற்சியில் உச்சகட்ட மடைந்து பார்ப்பனர்களின் ஆட்சி வீழ்ச்சியடைகிறது. பார்ப்பனர்களின் ஆட்சி வீழ்ச்சியடைவது போலச் சித்திரிக்கப்பட்டாலும் ஆத்திகத்தின் வெற்றியே இந்நாவலின் உட்கருத்தாக அமைகிறது.

Continue reading

விஷ்ணுபுரத்தின் வாசலில்

விஷ்ணுபுரத்தின் வாசலில் ஒரு வாசகனாக – ஸ்ரீபாதம்

எழுதியவர் : ஜெகதீஸ்வரன்

ஜெகதீஸ்வரன் தளம்

பொம்மைகள் விற்கப்படும் மிகப் பெரிய கடையில் ஒரு குழந்தையை மட்டும் முழு சுகந்திரத்தோடு விட்டால் என்ன ஆகும். அந்தக் குழந்தை கடை முழுவதும் ஓடும், கண்ணிகளில் படும் பொம்மைகளையெல்லாம் வாரி அனைத்து விளையாடும், சிலவற்றை தேர்ந்தெடுத்து தன்னுடன் வைத்திருக்கும், சிலவற்றை மதிக்காமல் செல்லும், கைக்கெட்டாத பொம்மைகளை நினைத்து ஏங்கும்,.. விஷ்ணுபுரத்தினை பெரும் பொம்மைக் கடையாக நினைத்துக் கொண்டால், அந்த குழந்தைதான் ஜெயமோகன். ஆம் விஷ்ணுபுரம் என்ற கற்பனை நகரில் ஜெயமோகன் ஓடிக்கொண்டே இருக்கிறார். கண்களில் படுபவனப் பற்றியெல்லாம் விவரிக்கிறார். சில கதைமாந்தர்களை புறக்கணிக்கிறார், சிலரை தொடர முடியாமல் தவிக்கிறார். விஷ்ணுவின் பாதத்தின் அழகிலிருந்து இருந்து தொடங்கி, தேவதாசி யோனியின் வலி வரை எல்லாவற்றையும் தன் எழுத்துகளில் வடித்திருக்கிறார்.  ஐம்பது அத்தியாங்களை ஸ்ரீபாதம் எனும் முதல் பகுதியில் படிக்கும் வரை இப்படிதான் தோன்றியது. அடுத்த சில அத்தியாங்கள் இது வரை நினைத்தவற்றை எல்லாம் நொறுக்கி எறிந்தன. நாவலின் மிகவும் அழகிய கட்டுமானம் விளங்கியது. அதுவரை தனித்தனியாக இருந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று அட்டகாசம் என்று சொல்ல வைக்கும். ஸ்ரீபாதத்தின் கடைசி வரிகளை படித்து முடித்தபின் புத்தகத்தினை மூடிவைத்துவிட்டு சிந்தனைக்குள் ஆழ்ந்தேன்.

Continue reading