விஷ்ணுபுரம் by ”ஈரோடு” கிருஷ்ணன்

 விஷ்ணுபுரம் by ”ஈரோடு” கிருஷ்ணன்

அதிக பட்சமாக ஒரு படைப்பு நம்மை என்ன செய்யும் ? படிக்கும் நாட்களில் எப்போதாவது நமது பணிகளுக்கிடையே நினைவுக்கு வரும், படிக்கும் பொழுது நமது வாழ்வனுபவங்கள் நினைவுக்கு வரும். சில பகுதிகள் மனதில் தங்கும் , காலக் காற்று தேய்த்து தேய்த்து அவை சில வரிகளாக சுருங்கும் , பின் ஆண்டுகள் கடந்தபின் ஒரு தொலை தூர ஞாபகமாக அதன் விளிம்புகள் மட்டும் எஞ்சும் . எவ்வளவு தான் உற்சாகத்துடன் ஒரு ஆக்கத்தைப் படித்தாலும் அடுத்த புத்தகங்கள் வரிசையாக காத்துநிற்கும் புதுமையின் கவர்ச்சியில் அந்த ஆக்கம் இன்னொரு வாசிப்பை பெறுவது இல்லை . எண்ணிப் பார்க்கையில் நாமாக ஒரு படைப்பை மீண்டும் படிப்பதில்லை , நமக்கு  ஒரு நெருக்கடியின் ஆணை தேவை.

Continue reading