விஜயபாரதமும் விஷ்ணுபுரமும்
பொ. வேல்சாமி
பெப்ரவரி 24, 2008 — Valarmathi
குறிப்பு:
ஜெயமோகனின் அரசியல் வெளிப்படையாகத் தெரிவது. ஆனால், அவரது இலக்கிய முயற்சிகளின்பால் பெரும்பான்மையான வாசகர்களுக்கு ஒரு பிரமிப்பு உள்ளது. முதலாவதாக அந்தப் பிரமிப்பு எப்படி உருவாக்கப்பட்டது, பொதுக்கருத்தியலுக்கும் அதற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து எழுதப்பட வேண்டும். பிறகு அவரது எழுத்துக்களை குறிப்பாக எடுத்துக் கொண்டு அணுகிப் பார்க்க வேண்டும். இரண்டிற்குமே பொறுமையும் கால அவகாசமும் தேவை.
என்னால் ஜெ – வைப் போல பேசுவதையெல்லாம் எழுதிவிட முடியாது. அதில் எனக்கு விருப்பமும் கிடையாது. நண்பர்களுடன் விரிவாகப் பேசுவது எனக்கு, சில கருத்தமைவுகளுக்கு என்ன எதிர்வினை கிடைக்கிறது, சிலவற்றை எந்த அளவிற்கு எளிமையாகச் சொல்ல வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்காகவே. பேசியதையெல்லாம் எழுதியிருந்தால் பல தலையணைகள் விழுந்திருக்கும். ஜெயமோகனைப் போல ஒரு பெருத்த வாயாடி என்ற பெயரையும் ஈன்றிருக்கலாம்தான். அதைவிட “சோம்பேறி” என்ற பெயரே பரவாயில்லை.
அது கிடக்கட்டும். எனது விரிவான விமர்சனங்களை கால அவகாசம் எடுத்துக் கொண்டு நிதானமாக எழுத நாள் பிடிக்கும். அதற்கு முன்பாக, ஜெ – வின் “விஷ்ணுபுரம்” நாவல் குறித்த பொ. வேல்சாமியின் இந்த சுவாரசியமான review உங்கள் வாசிப்பிற்கு. அவரிடம் ஒரு வார்த்தை கேட்ட பிறகே இதை இங்கு பதிவிலிடுகிறேன்.
இதில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லையெனினும், தமிழக வரலாற்றுக்கும் இந்நாவலுக்கும் இடையிலான உறவுப் புள்ளிகளாக அவர் சுட்டும் விஷயங்கள், புனைவெழுத்தில் கற்பனைக்கு உள்ள உறவு என்ன என்ற கேள்வியுடன் தொடர்புடையவை. அது குறித்த உரையாடலைத் தொடங்க இது ஒரு தொடக்கப் புள்ளியாக அமையலாம்.
Continue reading