குருகுலமும் கல்வியும் – 3

குருகுலமும் கல்வியும் – 3 [நிறைவுப்பகுதி]

[எனி இன்டியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘குருவும் சீடனும், ஞானத்தேடலின் கதை’ -தமிழாக்கம் ப.சாந்தி -என்ற நூலுக்கான முன்னுரை]

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கவிஞர் தேவதேவன் கவிதையரங்கு. திப்பரப்பு. குமரி மாவட்டம்]

மூன்று

நாராயண குருவின் குருகுல உரையாடல்கள் பற்றி ஓரளவே எழுதப்பட்டுள்ளது. மூர்க்கோத்து குஞ்சப்பா, குமாரன் ஆசான், ச்கோதரன் அய்யப்பன் போன்றோர் எழுதிய குறிப்புகள் முக்கியமானவை. நடராஜ குருவின் வகுப்புகளைப்பற்றி நித்யாவைப்போலவே சிதம்பரானந்த சுவாமி எழுதியிருக்கிறார். உண்மையில் அந்நூல் இந்த நூலைவிட சுவாரஸியமானது. அதையும் தமிழாக்கம்செய்யும் என்ணம் உள்ளது

ஆக்கப்பூர்வமான குருகுலம் எப்படி இருக்கும் என்பதற்கான விரிவான சித்தரிப்பை அளிக்கிறது நித்ய சைதன்ய யதி அவரது சிறுவயதில் எழுதிய இந்நூல்.இந்நூலை எழுதும்போது அவருக்கு முப்பத்தைந்து வயதுதான். அவர் பிற்காலத்தில் எழுதிய பெரும் தத்துவ நூல்களின் தொடக்கப்புள்ளிகள் இந்நூலில் உள்ளன.குருவும் சீடனும் சேர்ந்து பயணம் செய்கிறார்கள்.குரு பேசிக்கொண்டே இருக்கிறார். வேடிக்கையாக. திடீரென்று சினம் கொண்டவராக. பெரும்பாலான சமயங்களில் ஆழ்ந்த தத்துவ நோக்கு கொண்டவராக. எல்லா தருணங்களிலும் பிரபஞ்சக்கூரை வேய்ந்த வகுப்பறை ஒன்றில்தான் இருவரும் உள்ளனர். Continue reading

குருகுலமும் கல்வியும் – 2

குருகுலமும் கல்வியும் – 2

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[குரு நித்யா காவிய முகாமின் போது  வாசக நண்பர்களுடன்.

நாராயணகுருகுலம், பெர்ன் ஹில், ஊட்டி ]

இரண்டு

நம் சமகால இந்தியாவில் தொடர்ச்சியாக நான்காவது தலைமுறையை எட்டியிருக்கும் ஒரு தத்துவ சிந்தனை மரபு என்று நாராயணகுருவின் சீடபாம்பரையைச் சொல்லலாம். தமிழ் சித்தர் மரபு இந்திய நவீனமயமாதலுக்கு அளித்த பங்களிப்புகள் என்று நாராயணகுரு , ராமலிங்க வள்ளலார் இருவரையும் கூற இயலும். கேரளத்தில் 1854 ல் செம்பழஞ்சி என்ற சிற்றூரில் கள் இறக்கும் ஈழவர் என்னும் சாதியில் பிறந்தவர் நாராயணகுரு. தந்தை மாடன் ஆசான். தாய் குட்டியம்மா. அச்சாதி அன்று தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டது. சிறுவயதிலேயே தமிழ் கற்று நூல்களை வாசிக்க ஆரம்பித்த நாராயணகுரு அன்று திருவனந்தபுரம் சாலைத்தெருவில் இருந்த தைக்காடு அய்யாவு ஆசான் என்ற ஹடயோகியிடம் யோகம் கற்றார். பின்னர் இருபத்து மூன்றாம் வயதில் ஊரைவிட்டு கிளம்பி துறவு பூண்டு தமிழகத்தில் அலைந்தார். இக்காலகட்டத்தில் பல சித்தர்களை இவர் கண்டதாக ஊகிக்க முடிகிறது. பிற்காலத்தில் கேரள அறிவுத்துறையின் தலைமைப்பேரறிஞராக நாராயணகுருவை நிலைநாட்டிய சாஸ்திரக்கல்வி இக்கலத்தில் அவர் பெற்றதேயாகும். வேதங்கள் , உபநிடதங்கள், புராணங்கள், அறுவகை மதங்கள், பௌத்த சமண மரபுகள், மூவகை வேதாந்தங்கள் ஆகியவற்றில் நிகரற்ற கல்வி அவருக்கு இருந்தது. தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பெரும்புலமை பெற்றார். Continue reading

குருகுலமும் கல்வியும் – 1

குருகுலமும் கல்வியும் – 1

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கவிஞர் தேவதேவன் கவியரங்கு. திப்பரப்பு. குமரி மாவட்டம்]

ஒன்று

உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு தெய்வத்துக்கு அடுத்தபடியில் குருவையே வைக்கிறது. அதாவது மானுடரில் உயர்ந்தவர் குருவே. குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகாதேவன் என்ற பிரபலமான மந்திரம் குருவை ‘ஆக்கிக்காத்தழிக்கும்’ முத்தெயவ்ங்களும் ஒன்றானவன் என்கிறது. இதற்கு இணையான முக்கியத்துவம் ஜென் மரபிலும் குருவுக்கு இருப்பதைக் காணலாம். நாமறிந்த பெரும்பாலான ஜென் கதைகள் குருசீட உறவு குறித்தவை. Continue reading

வைசேஷிகமும் பெளதீகவாதமும்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

வைசேஷிகமும் பெளதீகவாதமும்

[கோதாவரிப் பயணத்தின் போது]

வைசேஷிகம் ஒரு ஆதி பெளதிகவாத ஞானதரிசனம் என்று ஏன் கூறுகிறோம்? ஒரு வரியில் இதை வகுத்துக் கூறிவிடலாம். எந்த பெளதிகவாத மரபினையும் போல வைசேஷிகமும் பருப்பொருளையே பிரபஞ்சத்தின் ஆதியாகக் காண்கிறது. இந்த அடிப்படையிலிருந்து அது பெரும்பாலும் தடம் மாறவில்லை. Continue reading

வேதாந்தமும் வைசேஷிகமும்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

வேதாந்தமும் வைசேஷிகமும்

[கோதாவரிப் பயணத்தின் போது]

இவ்விளக்க நூலில் தொடங்கத்தில் கூறிய ஒரு மனவரைபடத்தினை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. தரிசனங்கள் அடிப்படையில் மூன்று என்றால் சாங்கியம் ஒர் எல்லை. வேதாந்தம் மறு எல்லை. நடுவில் வைசேஷிகம். வைசேஷிகத்திற்கும் சாங்கிய வேதாந்த மரபுகளுக்கும் இடையேயான தூரத்தினை, உறவினை வகுத்துக்கொள்ளுவது அதைப் புரிந்துகொள்ள உதவிகரமானது. Continue reading

முழுமையறிவும் கென் வில்பரும்

முழுமையறிவும் கென் வில்பரும்

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

[மேக மலையில் நண்பர்களுடன்]

பலவருடங்களுக்கு முன்னர்  சி.பி.ஸ்நோ எழுதிய கட்டுரை ஒன்றை நான் மொழியாக்கம் செய்தேன். அதில் அவர் அறிவியலையும், கலைகளையும் ஏதேனும் ஒருவகையில் இணைப்பதைப்பற்றிப் பேசியிருந்தார். அந்த எண்ணம் என் மனதை அப்போது வெகுவாக ஆட்கொண்டு பலகாலம் கூடவே வந்திருக்கிறது.

அறிவியல் தர்க்கத்தை அடிப்படை அலகாகக் கொண்டது. கலைகள் கற்பனையை அடிப்படை அலகாகக் கொண்டவை. அவை உலகையும் வாழ்க்கையையும் தங்கள் நோக்கில் காண்கின்றன. அவ்விரு நோக்குகளும் தங்கள் அளவில் வளர்ந்து பல எல்லைகளைத் தொட்டிருக்கின்றன. இந்த நூற்றாண்டில் மானுட அறிவு  துறைகள் சார்ந்து பிரிந்து அதி நுண்மைகளை நோக்கி வெகுவாகச் சென்றுவிட்டிருக்கிறது. ஒரு துறையின் அதி நுண்ணிய உண்மைகளை தொட்டு அறியும் வல்லமை கொண்ட ஒருவர் பிறிதொரு துறையின் அடிப்படைகளையே அறியமுடியாமல் இருக்கும் நிலை  உருவாயிற்று. இதன்மூலம் மானுட அறிவானது பயன்கருதி ஒரு புள்ளியில் தொகுக்கப்பட முடியாத நிலை உருவாகி விட்டிருக்கிறது என்கிறார் ஸ்நோ. இந்த காலகட்டத்தின் ஆகப்பெரிய அறிவார்ந்த நெருக்கடி இதுவே என்கிறார். Continue reading

கடவுளை நேரில் காணுதல்

கடவுளை நேரில் காணுதல்

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

[“தேசத்தின் முகம்” ஷிண்டே, மஹாராஷ்டிர மாநிலம் நானேகட் அருகில் காட்கர் கிராமம். இந்திய நெடும்பயணத்தின் போது]

அன்புள்ள ஜெமோ,

வணக்கம். எனக்கு வெகு நாட்களாக உள்ள ஒரு சந்தேகம் , சில சமயம் அபத்தமாகவும் உள்ளது, சில சமயம் சுவாரஸ்யமாகவும் உள்ளது. அதாவது இந்து புராணங்களில் திரும்ப திரும்ப வருவது ‘தவம் செய்தான் , கடவுள் தரிசனம் தந்தார்’ என்ற காட்சி. புத்தரின் சரித்திரத்தில் அவர் நிர்வாண நிலை அடைவதற்கு முன்பு 5 பேருடன் சேர்ந்து உக்கிரமான தவத்தில் ஈடுபட்டார் என்றும் , மிகக்குறைந்த உணவினால் ஏறக்குறைய சாகும் நிலைக்கு வந்து பிறகு வேறு பாதைக்கு மாறினார் என்றும் படித்தேன். புராணங்களில் இப்படி இருக்கிறது என்றால் , அதற்கு முன்பே இது போலக் கடவுளை நேரில் கண்ட தொனமங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

இது போன்ற தொனமங்கள் தோன்றுவதற்கு அடிப்படை அதீதக் கற்பனையா,இல்லை உண்மையிலேயே தியானத்தில் / ஒரே சிந்தனையில் பல நாள் இருந்ததினால் ‘கடவுளை’ காண முடிந்த ஒரு பிரம்மையா அல்லது தவத்தை முடிக்க வேண்டிய கட்டாயமா அல்லது ஒருவித மனத்திருப்தியா அல்லது ஒருவிதமான illusion or hallucination or delusion தோன்றி இருக்குமா?

இது பற்றி நீங்கள் எழுதி உள்ளீர்களா என்று தேடினேன் , கிடைக்கவில்லை.இது பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். புராணங்கள் எப்போதோ நடந்தவை என்ற என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கேள்வி இல்லை, மாறாக அப்படி எழுத/கற்பிக்கத் தூண்டிய psychological feature பற்றியே எனது ஆவல்.

பணிவன்புடன்
கோகுல் Continue reading

முடிவின்மையின் தொடர்பு : கார்ல் சகன், ‘தொடர்பு’

முடிவின்மையின் தொடர்பு

[ஜெயமொகன்.இன் இல் இருந்து தொகுத்தது]

[கார்ல் சகன்]

‘எல்லி அரோவே’ யின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. மிக இளம் வயதிலேயே அவளுக்குள் பிரபஞ்சம் எப்படி எதனால் செயல்படுகிறது என்ற வினா குழந்தைக்கே உரிய தீவிரத்துடன் எழுந்துவிட்டது. அந்த அடிப்படையான தேடலை அறிவியலாளரான அவள் தந்தை கணிதத்தையும் அறவியலையும் நோக்கித் திருப்பினார். தந்தையுடன் அவளுக்கிருந்த உணர்வுப்பூர்வமான நுட்பமான உறவு அந்த தேடல் வலுப்பெற்று அதை மட்டுமே மையமானதாகக் கொண்டு அவளது ஆளுமை உருவாகக் காரணமாக அமைந்தது. இளமையின் சபலங்களுக்கோ உலகியல் ஆர்வங்களுக்கோ அவள் ஆளாகவில்லை. அவளது தேடல் அவளை வானவியல் ஆய்வாளராக ஆக்கியது.

Continue reading

வைசேஷிகத்தின் தத்துவம் – தொடர்ச்சி

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

வைசேஷிகத்தின் தத்துவம் – தொடர்ச்சி

[இந்திய நெடும்பயணத்தில் டோலாவீரா, குஜராத். செல்லும் வழியில் ஒரு உப்பு ஏரி]

பிற திரவியங்களின் சிறப்பியல்புகளைக் கணாதர் கூறுகிறார். காலமும் இடமும் பருப்பொருட்களைப் போலவே புறவயமானவை என்பது வைசேஷிகத்தின் நம்பிக்கை. ஆனால் அவை பிற பருப்பொருட்களை நம்பி மட்டுமே இருக்க முடியும்.

ஒரு திரவியத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட குணங்கள் இருக்கலாம். கணாதரே கூறுகிறார்: “மண்ணுக்குச் சுவை, மணம், வடிவம், தொடுகை ஆகிய குணங்கள் உள்ளன. அக்னிக்கு வடிவம், தொடுகை ஆகியவை உள்ளன. வாயுவுக்கு தொடுகை மட்டுமே” Continue reading

வைசேஷிகத்தின் தத்துவம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

வைசேஷிகத்தின் தத்துவம்

[2011 கோவை புத்தகக் கண்காட்ச்சியில் வாசகர்களுடன்]

’இனி நாம் தர்மத்தை விலக்க முயல்வோம்’ என்று கூறியபடி வைசேஷிகச் சூத்திரங்கள் ஆரம்பிக்கின்றன. தர்மம் என்றால் என்ன? எதிலிருந்து எல்லா விஷயங்களும் உருவாகி வருகின்றனவோ அதுவே தர்மம்; எது எல்லாவற்றுக்கும்அடிப்படையாக அமைகிறதோ அதுவே தட்மம். இப்பார்வை பிறகு பெளத்த ஞானமரபில் பெரிதாக வளர்ந்தது.

மனிதனைச் சாராமல் தன் சொந்தத் தனித்தன்மையால் நிலையாகவும் நிரந்தரமாகவும் இருந்துகொண்டிருக்கும் பிரபஞ்சம் உண்டு என்று கணாதர் நம்பினார். அது எந்த விதிகளின்படி இயங்கிக்கொண்டிருக்கிறது எனப் பாரபட்சமற்ற ஆய்வின் மூலம் மனிதன் அறிய முடியும். அவ்விதியே தர்மம். அதை அறிவது மனிதனைத் தன் அறியாமையின் துயர்களிலிருந்து விடுதலை செய்யும். Continue reading