நடன மகளுக்கு
“ஓய்ந்த என் கால்கள் ஆடி முடிக்காத
அந்த நடனத்தை நீ ஆடத் தொடங்கு”
– சூத்ரதாரி
by அர்விந்த் கருணாகரன்
விஷ்ணுபுரம் நாவலில் பாவகன் ஒரு இடத்தில் சொல்வான். “மகாகாவியங்கள் தொலைதூரத்து மலைகளைப் போல. நம் மனதின் வடிவ கற்பனைகளுக்குள் அவற்றின் வடிவம் அடங்காது. ஒரு பகுதியைப் பார்க்கும்போது அதன் மறுபகுதி மறைந்திருக்கும். நாம் நிற்கும் இடத்திற்கு ஏற்பவும், நம் மனதின் கற்பனைக்கு ஏற்பவும் அது மாறிமாறித் தோற்றம் தரும். எப்போது நமது மனஉருவகங்களை அவற்றின் மீது போட ஆரம்பிக்கிறோமோ, அந்தக் கணத்தில் காவிய தரிசனம் முடிவடைகிறது. பிறகு நாம் பெறுவது வெறும் அகங்கார தரிசனம்தான்” என்று.