புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 3

புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 3

jayamohan1_thumb4

[சந்திப்பு : மணா படங்கள் : ஸ்நேகிதன்.  நன்றி: தீராநதி ]

நன்றி: அழியாச்சுடர்கள் தளம்

கே : துறவு நிலைக்கான தேடுதல் மனநிலை உங்களுக்கு இருப்பதை முதலில் தெரிவித்திருந்தீர்கள். துறவு நிலைக்கான அந்த தூண்டுதலும், வேகமும் படைப்பு நீதியாக நீங்கள் இயங்க ஆரம்பித்த பிறகு சமப்படுத்தப்பட்டிருக்கிறதா?”

ஜெயமோகன் : விஷ்ணுபுரம், எழுதுகிற நேரத்தில் ரொம்ப காலம் என்னை அலைக்கழித்த அடிப்படையான கேள்விகளையெல்லாம் அந்த நாவல் வழியாகப் பதிவு பண்ணிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அதன் கதா பாத்திரங்கள் எல்லாம் என்னுடைய கிளைகள் தான். நான் அலைந்து திரிந்த காலமெல்லாம் அதில் இன்னொரு விதத்தில் பதிவாகியிருக்கிறது. என்னுடைய படைப்புகள் எல்லாமே என்னுடைய விசாரணையும், என்னுடைய துக்கங்களும்தான். ஏதோ இலக்கியம் படைக்க வேண்டும் என்பதெல்லாம் என் நோக்கம் அல்ல. திரும்பத்திரும்ப நான் சொல்வது இதைத்தான். புத்தருக்குத் தியானம் எப்படியோ அப்படி எனக்கு எழுத்து. Continue reading

புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 2

புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 2

jayamohan1_thumb4

[சந்திப்பு : மணா படங்கள் : ஸ்நேகிதன்.  நன்றி: தீராநதி ]

நன்றி: அழியாச்சுடர்கள் தளம்

கே : அப்போதிருந்த உங்களது மனநிலைக்கு நாவல் ஒத்திருந்ததா.

ஜெயமோகன் : ஆமாம். உதாரணமாக, `குடிக்கிறேன்-அதுவும் தற்காலிகத் தற்கொலைதான்’ என்று அந்த நாவலில் வரும் வாக்கியம் என்னை உலுக்கியெடுத்துவிட்டது. நான் உணர்கிற உலகத்திற்கு நெருக்கமானதாக அந்த நாவல் இருந்தது. சுந்தர ராமசாமியை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். ரொம்பவும் சகிப்புத் தன்மையுடன் இருந்தார் அவர். நான்தான் அதிகம் பேசுவேன். “உங்களிடம் ஒரு கலை இருக்கிறது. நீங்கள் எழுதவேண்டும். `ஆர்டிவெய்ங்’ என்கிற சைக்கியாட்ரிஸ்ட் “வேலை செய்வதுதான் மனநெருக்கடிக்குப் பெரிய சிகிச்சை’ன்னு சொல்றார். அதனால் எழுதுங்கள்” என்று சொன்னார். உடனே அவருக்குக் கத்தை கத்தையாகக் கடிதங்கள், சிறு கதைகள், குறுநாவல்கள் எழுதி அனுப்பினேன். இதில் ஒரு கவிதை அப்போது வெளிவந்து கொண்டிருந்த `கொல்லிப்பாவை’ என்கிற சிறு பத்திரிகையில் வெளியானது. மறுபடியும் எழுத்துலக பிரவேசம் ஆரம்பித்துவிட்டது.” Continue reading

புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன் – 1

புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன்

jayamohan1_thumb4

[சந்திப்பு : மணா படங்கள் : ஸ்நேகிதன்.  நன்றி: தீராநதி ]

நன்றி: அழியாச்சுடர்கள் தளம்

பத்து வருஷங்களுக்கு முன் வெளிவந்த `ரப்பர்’ நாவலிலிருந்து சமீபத்தில் வெளிவந்த `கன்னியாகுமரி’ நாவல் வரை தமிழ் இலக்கிய உலகில் அதிகச் சர்ச்சைகளைச் சந்தித்துக் கொண்டிருப்பவர் ஜெயமோகன். 1991ல் `கதா’ விருதும், 1993ல் சமஸ்கிருதசம்மான் என்கிற தேசீய விருதும் ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது.

 கதை, நாவல், விமர்சனம் என்று இதுவரை பதினொரு தொகுப்புகளைத் தமிழில் தந்திருக்கிற ஜெயமோகனது தாய்மொழி மலையாளம். நாகர்கோவிலுக்கு அருகில் தக்கலை என்னும் ஊரில்   தொலைபேசித் துறையில் வேலை செய்துவருகிறார். Continue reading