விஷ்ணுபுரம் – ஒரு துவக்க விமரிசனம்.by சுரேஷ்

விஷ்ணுபுரம் – ஒரு துவக்க விமரிசனம்.

 by சுரேஷ்

 சுமார் பத்து வருடங்களுக்குமுன் முதன்முறையாக விஷ்ணுபுரம் வாசித்ததில் விஷ்ணுபுரம் அதன் பிரம்மாண்டத்தாலும் வீச்சாலும் பெரும் திகைப்பை ஏற்படுத்தியது. . அது அள்ளி வழங்கும் தகவல்கள்.-சிற்ப சாஸ்திரம், தத்துவம், விலங்குகளின் அங்க லட்சணங்கள்,  அவற்றுக்குச் சூட்டப்படும் அணிகலன்கள், ஆண்களும் பெண்களுமாய் மனிதர்கள் அணியும் ஆபரணங்கள், கோயிலின் விவரிப்பு, அதில் சொல்லப்படும் ஏராளமான மூர்த்திகள், யட்சர்கள், யட்சிகள் – இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொள்ளவே ஒரு வாசிப்பு சரியாய்ப் போய் விடுகிறது.பின்னர் விஷ்ணுபுரம் பற்றிய விதவிதமான வரலாறுகள் – நாமதேவரின் கோணம்,மகாவைதீகரின் கோணம், நிஷாதர்களின்  கோணம், ஸ்ரீபாதமார்க்கிகளின் கோணம் என்று பற்பலக் கோணங்களில் விஷ்ணுபுரம் விரிகிறது.

Continue reading