விஷ்ணுபுரம்
from “ஒன்றுமில்லை”
அந்த புத்தகம் அதன் பல பக்கங்களை புரட்டி கொண்டு இருந்தது. சில பக்கங்கள் மிக வேகமாகவும், சில பக்கங்கள் பல நாட்கள் புரட்டபடாமலும் இருந்தன. புத்தகமே அதற்கு காரணம். புத்தகத்தின் இயக்கம் புலப்பட நாள் பிடித்ததால் பேருந்தின் சன்னல் வழி பார்வை மட்டுமே கொண்டு வாசிக்க முடிந்தது.
*************
அந்த நகரத்தில் மதம் கொண்ட யானைக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு கொண்டிருந்தது. யானை ஒரே குழப்பத்தில் இருந்தது. யானையிலும் குலம் எதும் இருந்திருந்தால் தான் பிழைத்திருக்க வாய்ப்பிருக்குமா எனற ஐயம் கொண்டது. உயர் குல தண்டனைகள் மயிலிறகால் வருடுவதாகவும், தாழ்த்தப்பட்ட குல தண்டனைகள் கழுத்தறுப்பதாகவும் இருந்ததால் அது உயர் குலமாக மாறமுடியுமா என யோசிக்கலாயிற்று.
**************
அஜிதனுக்கும் பவதத்தருக்கும் இடையேயான ஞானசபை போராட்டத்தின் ஊடே வெவ்வேறு மதங்களான மீசாம்சம், சைவம், சமணமும் மற்றும் பௌத்த உட்பிரிவுகளும் தர்க்கமாய் வந்தன. விஷ்ணுபுர கோவிலில் கர்ப்பகிரகத்தின் கதவுகளால் அடைக்கப்பட்டவன் கூச்சல் தாளாது காதுகளை மூடிக் கொள்ள முடிவு செய்தான். செந்தலை பட்டனால் சிறையுண்டவன் இன்னும் கோபமாகதான் இருந்தான்.