உருவமும் அருவமும்

உருவமும் அருவமும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

nitya

[குரு நித்ய சைதன்ய யதி அவர்களுடன் ஆசிரியர்]

உருவம் இல்லாதவற்றுக்கு உருவம் தருவதுதான் புராதனமான இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படும் தனித்தன்மை. ஆனால் வேதகாலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் முற்றிலும் மாறுபட்ட வகையில் தங்கள் கற்பனையைச் செலுத்தியிருந்தார்கள். நாம் ஆராய வேண்டியது இதைத்தான்.

ரிக் வேதத்தின் முதல் குறிப்பு அக்கினியைப் பற்றியதாகும். கண்முன் எரியும் அக்னி உரு யதார்த்தம். ஆனால் வேதங்களில் உள்ள அக்னி முற்றிலும் அருவமானது. அதாவது உருவத்திலிருந்து உருவின்மைக்கு, பருண்மையிலிருந்து சூட்சுமத்திற்குப் போவதற்கான யத்தனத்தை நாம் வேதங்களில் காண்கிறோம்.

அக்னியிலிருந்து அக்னித்துவத்திற்கு நகர்கிறது அக்கற்பனை.

நித்ய சைதன்ய யதியின் எழுத்துக்களுக்காக நண்பர் சீனிவாசன் நடத்திவரும் இணையதளம்

http://gurunitya.wordpress.com

புராணமயமாதல்

புராணமயமாதல்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

Narayana_Guru

[நாராயண குரு]

ஜெயமோஹன சார்,

ஒரு சந்தேகம். நாராயண குரு குறித்து ஒரு புத்தகம் படித்தேன் ( கிழக்கு பதிப்பகம், ஒரு சிறிய அறிதலுக்கு மட்டுமே பயன்படும்). அதில நாரயண குருவை ஒரு கடவுள் மட்டத்திற்குக் கொண்டு சென்றிருந்தார் ஆசிரியர் (சில அற்புதங்கள் புரிந்தார் என்று). இவரைப் போல் பலர்..

என்னைப் பொறுத்த அளவில் குரு என்பவர் நிச்சயமாக மதிக்கப் பட வேண்டியவர். என்னை விட மேலானவர். உதாரணமாகத் தமிழ் இலக்கியத்தில் எனக்கிருந்த ஒரு சுவையை மறுபடியும் உங்கள் தளம் மூலம்தான் பெற்றேன். அவ்விஷய்த்தில் உங்களை குருவாக நான் மதிப்பேன். ஆனால் நீங்களும் ஒரு மனிதர்,, விருப்பு வெறுப்பு நிறைந்தவர் என்ற ஒரு கோணமும் என்னிடம் இருக்கும். Continue reading

ஏன் நாம் அறிவதில்லை? [தொடர்ச்சி]

ஏன் நாம் அறிவதில்லை? [தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

07092012443

[நமீபியா பயணத்தின் போது]

நான் நெடுங்காலம் நம் உயர்தொழில்நுட்பக் கல்விக்கூடங்கள் அப்படிப்பட்டவை என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் இன்று என் வாசகர்களில் பலர் ஐஐடிகளிலும் ஐஐஎம்களிலும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அங்கும் இதே வகையான தகவல்திணிப்புக்கல்வியே உள்ளது என்கிறார்கள். இன்னும் அதி உக்கிர தகவல்திணிப்பு, அவ்வளவுதான் வேறுபாடு. சிறுவயதிலேயே தகவல்களைத் திணித்துக்கொள்ளப் பழக்கப்படுத்தப்பட்ட மூளைகளே அவற்றுக்குள் நுழைய முடியும். அதிகமான தகவல்களைத் திணித்துக்கொண்டவர்கள் முதன்மைபெற்று அறியாமை மட்டுமே அளிக்கும் அபாரமான சுயபெருமிதத்துடன் வெளியே செல்கிறார்கள். Continue reading

ஏன் நாம் அறிவதில்லை?

ஏன் நாம் அறிவதில்லை?

ஜெயமோகன்.இன் ல் இருந்து

06092012327

[நமீபியா பயணத்தின் போது]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 2011 ஆம் வருடம் இயற்பியலுக்காக நோபெல் பரிசு சால் பெர்ல்முட்டேர்,ப்ரைன் மற்றும் ஆடம்ஸ் கிடைத்திருகிறது. அவர்கள் ” Discovery of theaccelerating expansion of the universe through observation of distantsupernovae ” என்ற தலைப்பில் செய்த ஆராய்ச்சியில் அவர்கள் சென்று சேர்ந்தகருத்து இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அதுவும்accelerating mode phase . அவர்கள் இதைத் தொடங்கியது பிரபஞ்சம் விரிவடைதல்decelarting phase என்று நிரூபிப்பதற்காக. அப்படியே 180 degree turn ஜெயமோகன். அபோது அவர்களுக்கு என்ன மனநிலை இருந்திருக்கும் என்று
நினைத்துப் பாருங்கள். ஜெ கீழே இணைத்துள்ள வீடியோ வையும் பாருங்கள். Continue reading

அறமெனப்படுவது – கடிதங்கள்

அறமெனப்படுவது – கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

new_3432

[நாஞ்சில் மற்றும் வாசக நண்பர்களுடன் குவைத்தில்]

அன்பின் ஜெயமோகன் ,

மானுட அறமே மேலான அறம் என்ற உங்கள் கட்டுரை அருமை, அறுதியிட்டுக் கூறுவதே அறம் எனப்பட்டதா? குடும்ப அறம் காக்க முயலாமல், குல அறமும் காக்க முயலாமல், மானுட அறத்தைக் காத்ததினாலேயே கண்ணகி தெய்வம் ஆகி நின்றாளோ ??

நன்றி

சிவகுமார்

அன்புள்ள சிவகுமார்,

ஆம், அதனால்தான் கண்ணகி அறச்செல்வி என்று ஆசிரியராலேயே சுட்டப்படுகிறாள்.

Continue reading

அறமெனப்படுவது யாதெனின்…

அறமெனப்படுவது யாதெனின்…

ஜெயமோகன்.இன் ல் இருந்து

IMG_08251

[குவைத் விமான நிலையத்தில் வாசக நண்பர்களுடன்]

அன்புள்ள நண்பர்களே,

இன்று ‘அறமெனப்படுவது’ என்னும் தலைப்பில் பேச என்னை அழைத்திருக்கிறார்கள். அடிப்படையான வினா இது. எவை வாழ்க்கையின் ஆதாரமான தத்துவநிலைப்பாடுகளை விளக்க முயல்கின்றனவோ அவையே அடிப்படைக் கேள்விகள். இதைப்போன்ற அடிப்படை வினாக்கள் எழும்போதெல்லாம் நாம் நம் ஆசிரியர்களை இயல்பாக நினைவுகூர்கிறோம். நான் நித்ய சைதன்ய யதியை நினைத்துக்கொள்கிறேன். ஏனென்றால் நம் ஆசிரியர்கள் நம்மிடம் அடிப்படை விஷயங்களைப் பற்றியே உரையாடுகிறார்கள். இல்லை, அவர்கள் எதைப்பற்றி உரையாடினாலும் அதெல்லாம் அடிப்படை விஷயங்களாக இருக்கின்றன. Continue reading

நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்

நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

sanskrit-literature

அன்புள்ள ஜெ,

வணக்கம். உங்களின் வலைத்தளத்தில் “நான் இந்துவா?” என்ற கேள்விக்கான பதிலைப் படித்தேன். உணர்ச்சிவசப்பட வைத்தது. முக்கியமாக “உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப்பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா?” என்ற வரிகள் ஓங்கி மண்டையில் அடித்தாற் போல இருந்தது

உங்களின் பல கட்டுரைகளில் பதில்களில் “தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா” என்று அடிக்கடி கேட்கிறீர்கள். உங்களுடைய இந்தக் கேள்வி என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. தெரிந்து கொள்ளத் தூண்டுகிறது. நாற்பத்திரண்டு வயதில்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆர்வம் பிறப்பதை நினைத்து வெட்கமாக இருக்கிறது. ஆனால் இப்போதாவது ஆர்வம் வருகிறதே என்று ஒருபக்கம் சந்தோஷமாக உள்ளது. எனக்குள் தேடலைத் தூண்டியது நீங்கள் தான். என் மனமார்ந்த நன்றி. உங்களை நேரில் சந்தித்துப் பேசியபோது ஏதேதோ வீணாகப் பேசி வாய்ப்பைத் தவற விட்டு விட்டோமே எனத் தோன்றுகிறது. Continue reading

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3 [தொடர்ச்சி]

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3[தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் முதல் நம்முடைய வரலாறு நவீன நோக்கில் எழுதப்படும் பணி தொடங்கியது. அவ்வாறு வரலாறு தொகுது நவீனப்படுத்தி எழுதப்பட்டபோது அதன் விளைவாக நம்முடைய ஆன்மீகமும் மறுஆக்கம் செய்யப்பட்டது.சைவம் வைணவம் போன்றவற்றில் நிகழ்ந்த மறுமலர்ச்சி என்பது இதுதான். அதாவது அவற்றின் ஆன்மீகமானது மறுவரலாற்றுவிளக்கம் பெற்றது.

ஏறத்தாழ இதேகாலகட்டத்தில்தான் பௌத்தமும் மறுவிளக்கம் பெற்றது. ஆல்காட், ரைஸ் விலியம்ஸ், பால் காரஸ் போண்ற மேலைநாட்டறிஞர்களாலும் அநாகரிக தம்மபால போன்ற கீழை அறிஞர்களாலும். சைவமும் வைணவமும் எப்படி நவீனகாலகட்ட்டதுக்காக மறு ஆக்கம் செய்யபப்ட்டனவோ அதேபோலவே பௌத்தமும் மறு ஆக்கம்செய்யப்பட்டது. Continue reading

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

அயோத்திதாசர் உருவாக்கிய வரலாற்றெழுத்தின் அடிப்படையான கூறுகள் என்னென்ன? அவற்றை என் அவதானிப்பில் நான் இவ்வாறு வகுத்துக்கொள்வேன்.

அயோத்திதாசர் அவர்களின் இந்திரர்தேசத்து சரித்திரத்தில் நாம் காணும் முதன்மையான அம்சம் அதன் மாற்று வரலாற்றுத் தரிசனம். அதை எழுதப்பட்ட வரலாற்றின் தலைகீழாக்கம் என்று ராஜ்கௌதமன் போன்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த தலைகீழாக்கம் அயோத்திதாசர் அவர்களால் கண்டடையப்பட்ட ஒன்றல்ல. அது ஏற்கனவே இங்கே இருப்பதன் நவீன வடிவம்தான். தலைகீழாக்கம் எப்போதுமே நம் மரபில் இருந்துகொண்டிருக்கிறது.

Continue reading

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-2[தொடர்ச்சி]

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-2[தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

அயோத்திதாசர் பற்றிய தன்னுடைய சிறிய நூலில் பேராசிரியர் ராஜ்கௌதமன் அயோத்திதாசரின் ‘முறையான வரலாற்றுநோக்கு இல்லாமை’யை அவரது முக்கியமான குறையாகச் சுட்டிக்காட்டுவதைக் காணலாம். கல்வித்துறைசார்ந்த இலக்கிய- வரலாற்று அணுகுமுறைக்குச் சிறந்த உதாரணமான ராஜ்கௌதமன் அப்படிச்சொல்வது இயல்பே. அயோத்திதாசரின் நோக்கம் சாதியற்ற சமகாலத்தை உருவாக்குவது. அதற்காக அவர் இறந்தகாலத்தைப்பற்றி தனக்குச் சாதகமான முறையில் புனைந்துகொள்கிறார் என்கிறார் ராஜ்கௌதமன்[ க.அயோத்திதாசர் ஆய்வுகள், காலச்சுவடு பிரசுரம்] அயோத்திதாசரின் இந்திரர்லோகசரித்திரம் முதலிய நூல்களையும் பல வரலாற்றுக்கருத்துக்களையும் எதிர்மறைப்பொருளில் புனைவு என்று சொல்கிறார் Continue reading