விஷ்ணுபுரம் சில விளக்கங்கள்

விஷ்ணுபுரம் சில விளக்கங்கள்

இளைய ஜீவா

திண்ணை

விஷ்ணுபுரம் நாவல் குறித்து தமிழகத்தில் அது வெளிவந்த போது எழுந்த பல சந்தேகங்கள் இப்போதுதான் இணைய விவாதங்களில் எழுவதை காணமுடிகிறது.இவை குறித்து இங்கு பலவாறாக பேசி ஒரு தெளிவு ஏற்பட்டுவிட்டது.மதுரையிலும் தஞ்சையிலும் நடந்த விவாத கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன்.இது பற்றிய கட்டுரைகளையும் படித்தேன்.சில விசயங்களை என் தரப்பாக சொல்லலாம் என்று பட்டது.

1] விஷ்ணுபுரம் ஏன் தமிழ் பண்பாடு பற்றி அதிகம் பேசவில்லை ?

விஷ்ணுபுரத்தின் கரு என்ன ?அது விஷ்ணுபுரத்தை பற்றிய நாவல். விஷ்ணுபுரம் வடக்கிலிருந்து வந்த மஹாவைதிகனான அக்னிதத்தன் அவனது சொல்லை நிலைநிறுத்தும் பொருட்டு அச்சொல்லை கல் வடிவமாக மாற்றியதனால் உருவானது என்று நாவலில் பல இடங்களில் சொல்லப்படுகிறது.அதாவது இந்நாவல் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி பேச வரவில்லை இதன் இலக்கு தமிழ் நாட்டின் மீதான வைதிகப் பண்பாட்டு ஆக்கிரமிப்பு மட்டுமேயாகும்.அதனுடன் தொடர்புள்ள அளவில் மட்டுமே இது மற்ற விஷயங்களை பற்றி பேசுகிறது.ஆகவே தமிழ் பண்பாட்டின் ஒட்டுமொத்த காட்சி இதிலில்லை என்பது பொருந்தாகூற்று மட்டுமேயாகும்.

Continue reading