அடிமைகளும் கலையும்
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[தஞ்சை பெரிய கோயில்]
அன்புள்ள ஆசிரியருக்கு,
‘அருகர்களின் பாதை’ – வரலாறும் ஆன்மீகமும் கலையும் இலக்கியமான வர்ணனைகளும் கலந்த உன்னதமான அனுபவத்தில் தினமும் திளைத்தேன். உங்களைப் போன்றே ஆன்மஉணர்ச்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர்களால் இந்தியிலும் மற்ற மொழிகளிலும் மாற்றப்பட்டு மேலும் பல கோடி பேர் அனுபவிக்க வேண்டும் என்று ஆசையாகஇருக்கிறது !
அற்புதமான கோயில் கலைகளைப் பார்க்கையில் மனதோரம் களிம்பு போல ஒருசந்தேகம் ஒட்டிக் கொள்கிறது. (நீங்கள் சொல்லும் மனிதச் சிறுமையின்அடையாளமா என்று தெரியவில்லை). தங்கள் விளக்கம் என் பார்வையை விசாலமாக்கும் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்…
எகிப்து பிரமிடுகளைப் பற்றிய ஒரு காணொளியில் சில எலும்பு அகழ்வாராய்ச்சிகளைக் காட்டினார்கள் – குடும்பம் குடும்பமாக வருடக்கணக்கில் பிரமிடுக்கருகே வாழ்ந்து, டன் கணக்கில் கல் சுமந்து முதுகெலும்பு வளைந்தே போன பெயரற்ற அடிமைகளின் எலும்புகள்.
இதே போல இந்தியக் கோயில்களைக் கட்டவும் அடிமைகள் பயன்படுத்தப்பட்டார்களா? எனக்கு ராஜராஜன் மேல் இந்த விஷயத்தில் நம்பிக்கை இல்லை – ஆனால் குமாரபாலரும் ஆற்றிமாப்பியும் கட்டிய சமண ஆலயங்களிலும் இதே ரத்தக்கறை இருக்கிறதா ? அப்படி இருந்தால் அவற்றின் ஆன்மீகம் சற்று ஒளியிழக்கிறதா ?
நன்றி
மது Continue reading