இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – கேள்வி பதில்
ஜெயமோகன்.இன் இல் இருந்து
[வட கிழக்கு பயணத்தின் போது]
“இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” என்ற தலைப்பை வைக்கும்போது, இடதுசாரிகள் “இந்திய ஞான மரபு” என்று அழைப்பதைக் குறிப்பிட்டு, அது தவறான புரிதலில் எழுந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஜவஹர்லால் நேரு, The Discovery of Indiaவில் “நமது பழைய இலக்கியங்களில் ‘ஹிந்து’ என்னும் சொல் காணப்படவில்லை. கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தந்திரிக நூலில்தான் முதன்முதலாக இந்தச் சொல் காணக்கிடைக்கிறது என்று தெரியவருகிறது. இந்த நூலில் ஒரு மதத்தினரை அல்லாமல், ஒரு மக்களைத்தான் ‘ஹிந்து’ என்னும் சொல் குறிக்கிறது” என்று எழுதியுள்ளதை திரு.சோதிப் பிரகாசம் தன் அணிந்துரையில் எடுத்துக் காட்டியிருக்கிறார். இதன் அடிப்படையில் பார்க்கும்போதும் கூட, “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” என்ற தலைப்பே பொருத்தமானது என்று எண்ணுகிறீர்களா? ஆமெனில், ஏன் என்று விளக்க முடியுமா?
– பி.கே.சிவகுமார். Continue reading