உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 3

உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 3

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கோதை]

கர்மமும் ஞானமும் (சாங்கர – ராமானுஜ விவாதம்)

சாங்கிய யோகம் பற்றிய இவ்விவாதத்தில் கீதையின் இப்பகுதியை முன்வைத்த உரையாசிரியர்களுக்குள் நடந்த ஒரு விவாதத்தைக் குறிப்பிட்டுவிட்டு முன்செல்வது உதவியாக இருக்கும். இது சற்று சிக்கலானது, கீதையின் இப்பகுதியுடன் நேரடி தொடர்பில்லாதது. ஆனாலும் இதை நாம் புரிந்ந்துகொள்வது இந்துமெய்ஞான மரபை அறிய மிக உதவிகரமானது Continue reading

உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 2

உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கோதை]

மாணவபாவனை

இதைத் தொடர்ந்து அர்ஜுனன் கூறும் சொற்களை பொதுவாக பல உரையாசிரியர்கள் கூர்ந்து அவதானிக்கும் படி கூறுவதுண்டு. அர்ஜுனன் ஒரு மனத்தடுமாற்றத்தில் இருந்து ஒருவகை உறுதிப்பாட்டை அடைவதை ஏழு எட்டாம் பாடல்களில் காண்கிறோம். தன் தரப்பை வலுவாகக் கூறியவன் அதற்கு மறுதரப்பு ஒன்று கிருஷ்ணனிடம் இருக்கக்கூடும் என்று உணர்கிறான். அதை அறிய ஆவல் கொண்டு தன்னை ஒரு மாணவனின் இடத்தில் வைத்துக் கொள்கிறான். Continue reading

உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 1

உலகாற்றும் நெறி (ஸாங்கிய யோகம்) – 1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கோதை]

‘அர்ஜுன விஷாத யோகம்’ பகுதியில் வெளிப்பட்ட அர்ஜுனனின் ஆழமான மனத்தடுமாற்றத்திற்கான உடனடி பதிலாக கிருஷ்ணன் கூறும் பகுதி இது. கீதையின் தத்துவ விவாதத்தின் முகப்பு. அதாவது கீதையின் தரிசனத்தில் மிக அதிகமாக ‘மண்ணில்’ தொட்டபடி நிற்பது இதுவே. நடைமுறை யதார்த்தம் சார்ந்த தத்துவ விளக்கம் என்பதே ‘ஸாங்கிய’ என்ற சொல் மூலம் சுட்டப்படுகிறது. இப்பகுதியில் அர்ஜுனன் போர் புரிந்தாக வேண்டும் என்பதற்கான நடைமுறை நியாயங்கள் முதலில் கூறப்படுகின்றன.

இதில் அன்றாட வாழ்வின் கடமைகளை மிக வெற்றிகரமாக ஆற்றுவதற்கு இன்றியமையாத புலனடக்கம் மற்றும் மன ஒருமையை விவரித்த பிறகு கிருஷ்ணன் நம் அன்றாடச் செயலையே யோகமாக ஆக்குவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அதாவது லெளகீகத்திற்குள் வைத்து அர்ஜுனனின் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது ஒரு தத்துவ ஞானி என்ன கூறுவானோ அதுவே இப்பகுதியில் உள்ளது.

Continue reading

கீதை தத்துவநூலா?:கடிதங்கள்

கீதை தத்துவநூலா?:கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கும்பமேளா பயணத்தில்]

அன்புள்ள ஜெயமோகன்

ராம் அவர்கள் குறள் மற்றும் கீதைபற்றிய கடிதம்  கீதை கடிதங்கள்,விளக்கங்கள் படித்தேன். வேற்றுமொழிக்காரர் குறள் பற்றி கேட்டபோது நானும் எப்படி அதன் சிறப்பை கூறுவது எனத்தெரியாமல் தவித்தேன். அதன் இலக்கிய அழகை அவருக்கு ஒருவாறு கூறினேன் என்றாலும் அதன் தத்துவ விளக்கத்தை என்னால் கூறமுடியவில்லை. அதற்கான உங்கள் விளக்கத்தை படிக்க நானும் காத்திருக்கிறேன். கீதைக்கான தங்கள் பதிலுரை எனக்கு மிகவும் ஏற்புடையதாக இருந்தது.

கீதை தத்துவநூலா என அவர் வினவியுள்ளார். கலை கலைக்காகவே என்பதைப்போல் தத்துவம் தத்துவதிற்காக மட்டுமே எனக்கூறினால் அது தத்துவ நூலன்றுதான். நடைமுறைப்படுத்தாத தத்துவம் எதற்காக? தத்துவம் அன்றாட வாழ்வில் செய் அல்லது செய்யாதே என வழிகாட்டுதலை கூறக்கூடாது என்றால் தத்துவத்தின் பயன் தான் என்ன? மனிதன் தத்துவத்தின் பக்கம் செல்வதே எதைச் செய்யவேண்டும் எனத்தெரியாமல் போய்விடும் போதுதான். ஒரு நல்ல தத்துவ நூல் நேரடியாக சொல்லாமல் ஒவ்வொரு தருணத்திற்குமான முடிவை அவனே குழப்பமின்றி  எடுக்கும் அளவிற்கு அவனுக்கு மனத்தெளிவை அளிக்கவேண்டும். கீதையில் தன் மனக்குழப்பத்தை விவரமாக விளக்கி அர்ச்சுனன் தான் என்ன செய்யவேண்டும் எனக்கேட்கும்போது கண்ணன் முதலில்  நேரடியாக  போர் செய் என்றுதான் கூறுகிறான். ஆனால் அர்ச்சுனன் அதை ஏற்காமல் போகவே கீதை விளக்கம் தேவைப்படுகிறது.  கீதை ‘பத்து கட்டளைகள்’(Ten commandments) போன்றது அல்ல. ஆனாலும் ஒருவன் தனக்கான ‘கட்டளை களை’ தானே நேரத்திற்கேற்ப அமைத்துக்கொள்ளும் தெளிவையும் தகுதியையும் பெற  கீதை உதவுகிறது. Continue reading

கீதை கடிதங்கள்,விளக்கங்கள்

கீதை கடிதங்கள்,விளக்கங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கும்பமேளா பயணத்தில்]

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம்

தங்களுடைய கீதை தொடர்பான கட்டுரைகள் மிகவும் ஆர்வமூட்டுபவை அது மட்டுமல்லாது நகைச்சுவை பகுதி மிகவும் சிறப்பானமுறையில் எழுதபட்டிருக்கிறது. தங்களுடைய கீதை தொடர்பான கட்டுரையில் சுவாமி சித்பாவனந்தர் மற்றும் வினோபாவே அவர்களின் கீதை தொகுதியை படிக்கும்படியும் தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.

குறிப்பாக இவை இரண்டும் தத்துவ பயிற்சியை பெற விரும்புபவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியது என்றும் சொல்லி இருந்தீர்கள். அந்த நூல்களோடு ஓரள்வு தொடர்பு இருக்கிறது என்ற முறையில் அவற்றை என்னால்  ஏற்க முடிகிறது என்றாலும் சுவாமி சித்பாவனந்தர் மற்றும் வினோபாவே இருவரின் உரையிலும் குறிப்பாக வினோபாவே அவர்கள் பாவனை பக்தி ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறார் என்றே நான் கருதுகிறேன் குறிப்பாக புண்டலீகன் பற்றி அவர் அதிகமும் கூறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் இரண்டாவதாக பாவனை செய்து தான் பாரேன் என்கிற இந்த வரிகள் திரும்ப திரும்ப வருவதை தாங்கள் கவனித்திருப்பிர்கள்.
Continue reading

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 4 [நிறைவுப்பகுதி]

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 4 [நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கும்பமேளா பயணத்தின்போது]

சாங்கிய-வேதாந்த இணைப்பு

இப்பகுதியில் உள்ள 28 ஆவது பாடலை சில பதிப்புகளில் சற்று எளிமையாக மொழியாக்கம் செய்திருப்பார்கள். அவியக்தாதீனி என்பதை ‘மாயையில் இருந்து உருவாவது’ என்றே நாம் வாசிக்க நேரும். ஆனால் ‘அவியக்தம்’ என்பது சாங்கிய சிந்தனையின் அடிப்படையான கோட்பாடாகும். நாம் காணும் இப்பிரபஞ்சமானது முழுமுதல் இயற்கை (ஆதிப்பிரகிருதி)யில் இருந்து உருவாகி வந்தது என்று சாங்கியம் கூறுகிறது. இந்த பிரபஞ்சமானது மூன்று அடிப்படைக் குணங்கள் உடையது. தமோகுணம், ரஜோ குணம், சத்வ குணம். இவற்றை முறையே நிலைக்கும் தன்மை, செயலூக்கத்தன்மை, சமநிலைத்தன்மை என்று விளக்கலாம். இக்குணங்களின் கோடானு கோடி இணைவுகள் மூலமே பிரபஞ்சத்தின் எண்ணற்ற வடிவங்கள் முடிவின்மை வரை உருவாகி விரிந்துள்ளன என்பது சாங்கியங்களில் கூற்றாகும். Continue reading

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 3

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 3

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கோவை இலக்கிய சந்திப்பு]

இரண்டு மேலைக்கோட்பாடுகள்

கீதையின் தன்னறம் என்ற கருத்துக்கு சமானமான இரு மேலைக்கோட்பாடுகளை நாம் இங்கே கவனிக்கலாம். ஒன்று அரிஸ்டாடில் முன்வைக்கும் நிகோமாகிய அறக்கோட்பாடு. இன்னொன்று இமானுவேல்காண்ட் முன்வைக்கும் தன்னியல்பூக்கம் (Catagorical Imperative)

நிகோமாகிய அறக்கோட்பாடு அரிஸ்டாடில் அவரது பிற்கால அறவியல் சிந்தனைகளின் போது முன்வைக்கப்பட்டது. மனித இயல்பு என்பது அறம் மற்றும் ஒழுக்கம் குறித்த எந்தச் சிந்தனைக்கும் அடிப்படையாக அமைவது என்று அரிஸ்டாடில் கூறுகிறார். ஒரு மனிதனின் இயல்புகள் அவனில் தொடர் செயல்பாடுகளாக மாறி மெல்ல பழக்கங்கள் ஆகின்றன. பழக்கம் மூலம் அவனுடைய ஆளுமை உருவாகிறது. ஒருவனுடைய இயல்பை எவ்வாறு அறிவது? 1. அவனுடைய ரசனை என்ன? 2. அவனுடைய தெரிவுகள் என்ன? என்ற இரு வினாக்களின் அடிப்படையில்தான். Continue reading

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 2

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[ கும்பமேளா பயணத்தின் போது]

தன்னறமும் பிறப்பும்

இதில் 31ஆவது பாடலில் வரும் வார்த்தையான ‘ஸ்வதர்ம’ என்பதை ‘தன்னறம்’ என்று நேரடியாக தமிழாக்கம் செய்துள்ளேன். பல மொழிபெயர்ப்புகளில் குலதர்மம், குலநெறி என்ற மொழிபெயர்ப்பு உள்ளது. ‘ஸ்வ’ அதாவது ‘சுய’ என்றால் அது குலத்தைக்குறிக்கக்கூடியதல்ல.  அறம் என்ற சொல்லுக்கு ‘வாழ்க்கை நெறி’ என்ற பொருள் உண்டு. துறவறம் இல்லறம் ஆகியவற்றில் பின்னொட்டாக உள்ள அறம் இது.

தன் உள்ளார்ந்த இயல்பால் ஒருவன் தெரிவு செய்யும் செயலே தன்னறம் என்று கூறலாம். சுயதர்மம் என்றும் இதை தமிழாக்கம் செய்யலாம். தன்னுடைய ஆளுமைக்கும் தன் அடிப்படை இச்சைகளுக்கும் ஏற்பவே ஒருவனின் மனநிலைகளும் செயல்பாடுகளும் அமைகின்றன. இதை எளிய உளவியல் தளத்தில் நின்று புரிந்து கொள்வதே போதும். எச்செயலில் தன் உள்ளார்ந்த ஆற்றல் முழுமையாக வெளிப்படுகிறது என்று ஒருவன் எண்ணுகிறானோ அதுவே அவனுடைய தன்னறம் ஆகும். அதில் ஈடுபட்டு, அதை வென்று, அதைக் கடந்து சென்றுதான் ஒருவன் தன் விடுதலையை அடைய இயலும். ஒருவன் போரை, பிறிதொருவன் வணிகத்தை, பிறிதொருவன் கல்வியை, பிறிதொருவன் தொழிலை, பிறிதொருவன் சேவையை தன்னறமாகக் கருதலாம். Continue reading

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் .1

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கோவை வாசகர் சந்திப்பு]

‘மனிதன் நானே உயர்ந்தவன் என்று ஆணவம் கொண்டதைக் கண்ட இயற்கை வலியைப் படைத்தது. உடலை வென்ற வலி ஆணவம் கொண்டு கொக்கரித்தபோது இயற்கை தூக்கத்தைப் படைத்தது. தூக்கத்தின் ஆணவத்தை வெல்ல மரணத்தை படைத்தாகவேண்டியிருந்தது இயற்கைக்கு. மரணம் கொக்கரித்தபோது வேறுவழியில்லாமல் இயற்கை காலத்தைப் படைத்தது. காலத்த்தின் கர்வம் அடக்க கடைசியில் முடிவிலியைப் படைத்தது’ கல்பற்றா நாராயணன் ஒருமுறை அவர் வாசித்த இவ்வரிகளைச் சொன்னார்.

”பின்னர் முடிவிலியின் ஆணவத்தை அடக்க முடிவிலி என்ற சொல்லைப் படைத்தது இயற்கை”என்று நான் வேடிக்கையாகச் சொன்னேன். Continue reading

கீதை முகப்பு

கீதை முகப்பு

ஜெயமோகன்.இன் ல் இருந்து

பல்லாயிரக்கணக்கான ஓவியங்கள், நடனக்காட்சிகள், நாடகத் தருணங்கள், திரைப்படக் காட்சியுருவங்கள் வழியாக நம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது கீதையின் முகப்புக்காட்சி. கீதை என்றதுமே இக்காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நாள்காட்டி ஓவியங்களாக இக்காட்சி நம் எளிய மக்களின் இல்லங்களிலும் காணப்படுகிறது. மரபில் இக்காட்சிக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு; குறிப்பாக தமிழ்நாட்டில் பற்பல ஆலயங்களில் கிருஷ்ணனை பார்த்தசாரதியாக நிறுவி வழிபடுகிறோம்.

இந்தக் காட்சியின் நாடகீயத்தன்மையும் கவித்துவமுமே கீதையைப்போன்ற ஒரு சிக்கலான தத்துவ நூலை இத்தகைய பெரும் புகழ் பெற வைத்தது என்றால் மிகையல்ல. பைபிள், குர் ஆன் போன்ற மதநூல்கள் பெரும் புகழ் பெற்று பரவலாக வாசிக்கப்படுவது இயல்பே. காரணம் அந்த மதங்கள் அந்நூல்களின் பலத்தில் நிற்பவை. அம்மதம் செயல்படுவதே அந்நூலை பிரச்சாரம் செய்வதன் வழியாகத்தான். ஆனால் கீதை மதநூலல்ல, இந்துமதம் அதை நம்பியும் இல்லை. யோசித்துப் பார்த்தால் உலக அளவில் அதிகமாகப் புகழ் பெற்ற தத்துவநூல் கீதையாகவே இருக்க முடியும் என்று படுகிறது. பிளேட்டோவின் குடியரசுகூட அடுத்த படியாகவே இருக்கும். Continue reading