யோகத்தின் பரிணாமம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

யோகத்தின் பரிணாமம்

[ஊட்டி இலக்கிய முகாம். நடைப்பயணத்தில் வாசக நண்பர்களுடன்]

யோக முறைகளுக்கு எத்தனை கால வரலாறு இருக்கும் என்று எவரும் கூறிவிட முடியாது. மிகத் தொடக்க கால ஆதிமனிதர்கள் கூட யோகப் பயிற்சிகளை செய்திருக்கலாம். காரணம், தன்னைக் கூர்ந்து கவனிக்கும் வல்லமை உடைய ஒரு மனம், இயல்பாகவே கண்டடையக் கூடிய வழிமுறை இதுவாகும்.

கடோபநிஷத் இவ்வாறு  கூறுகிறது: ‘ஐம்புலன்களும் மனமும் செயலற்றிருக்க, அறிவு நிலைத்து நிற்கும் நிலையே யோகம்’ (11-3). அறிவின் சிக்கல்களையும் மனத்தின் சஞ்சலங்களையும் கடந்து சென்று மெய்ஞானத்தை அறிவதற்கான ஒரு வழிமுறையே யோகம்’ என்று ஸ்வேதாஸ்வேதா உபநிஷத் கூறுகிறது. Continue reading

தூய்மையான அறிதல் முறை: யோகம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தூய்மையான அறிதல் முறை: யோகம்

[ டோரொண்டோ, கனடா பயணத்தின் போது. ஆயிரம் தீவுகள் ]

சாங்கியத்தின் கிளையாகவே யோகம் வளர்ந்து வந்தது. யோகம் சாங்கியத்தின் மூன்று அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டது. ஒன்று: பிரபஞ்சம் பருப்பொருளால் ஆனது. பிரபஞ்சத்தின் மூலகாரணமும் பருப்பொருளேயாகும். இரண்டு: முக்குணங்களின் சமநிலை உடைய ஆதி இயற்கை, அந்த சமநிலை குலைந்ததனால் உருமாறி நாம் காணும் பிரபஞ்சமாக ஆயிற்று. மூன்று: இயற்கையிலிருந்து மகத்தும், தன் மாத்திரைகளும் அவற்றிலிருந்து புலனறிவும் பிறந்தன.

யோகம் உருவாக என்ன முகாந்திரம்? சாங்கிய மரபில் உருவான புருஷ தத்துவமே அதற்கு வழி வகுத்தது என்று பல அறிஞர்கள் நம்புகிறார்கள். ‘புருஷன்’ தன் தூய நிலையில் இருக்கும்போது இயற்கையும் தன் ஆதி தூய நிலையில் இருக்கிறது இல்லையா? பிரபஞ்சம் முக்குணங்களின் ஆலடரங்காக மாறிப் பரவியப் பிரம்மாண்டமான சிக்கலான தோற்றம் கொண்டுவிட்ட பிறகு புருஷனும் அதற்கேற்ப மாறுவது இயல்பே. புருஷனின் சகஜநிலை சிதறுண்ட நிலைதான். இயற்கையின் சகஜ நிலை என்பது முக்குணங்களின் சமநிலை இல்லாத நிலைதான். Continue reading

24.சாங்கியமும் பகவத் கீதையும்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

சாங்கியமும் பகவத் கீதையும்

[இலக்கிய முகாம், ஊட்டி நாராயண குருகுலம்.  நண்பர் ”விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்” அரங்கசாமியுடன்]

இன்றைய சூழலில் சாங்கியத் தரிசனத்தின் மிக விரிவான சித்திரத்தை தரும் பொதுநூல் பகவத் கீதையேயாகும் ஆகும். இன்னும் கூறப்போனால் சாங்கியம் எனும் போதே கீதையின் ‘சாங்கியோகம்’ பகுதிதான் பரவலாக நினைவு கூறப்படும். கீதையில் சாங்கியத்தரிசனம் சற்று உருமாறிய நிலையில் விரிவாகவே பேசப்படுகிறது. Continue reading

23. சாங்கியமும் லோகாயதமும்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

சாங்கியமும் லோகாயதமும்

[ஊட்டி இலக்கிய முகாம். ஒரு மாலை நடைப்பயணத்தில் வாசக நண்பர்களுடன்]

சாங்கியம் வேதகாலம் முதல் இருந்து வந்த லோகாயத மரபின் தர்க்கப்பூர்வமான மேலடுத்த நீட்சி என்று குறிப்பிடப்படுகிறது. இதைப்பற்றி இன்று அதிகாரப்பூர்வமாக விவாதிப்பது சாத்தியமில்லை. காரணம், லோகாயத நூல்களில் பெரும்பாலானவை அக்காலத்திலேயே அழிந்துவிட்டன. பிற பிற்காலத்தில் அழிந்தன. லோகாயதத் தரிசனம் இன்று பற்பல நூல்களாகச் சிதறிக் கிடக்கும் மேற்கோள்களில் இருந்தும், அதன் எதிரிகள் கூறும் மறுப்புகளில் இருந்தும் ஊகித்தறியப்படுகிறது. லோகாயத் தரிசனத்தை மீட்டதில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவிற்குப் பெரும்பங்கு உண்டு. Continue reading

22.வேதாந்தத்தின் அறைகூவல்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

சாங்கியம் – வேதாந்தத்தின் அறைகூவல்

[டோரொண்டோ, கனடா அருங்காட்சியகத்தில் பிரம்மாண்டமான அடிமரம் முன்பு.]

பிற்கால வேதாந்தம், குறிப்பாக, சங்கரரின் அத்வைத தரிசன மரபு சாங்கியத்தை மிகக் கடுமையாக மறுத்து தருக்க பூர்வமாக நிராகரித்தது. இன்றைய சூழலில் இந்திய மரபு குறித்துப் பயிலும் ஒருவர் சங்கரர் கூறிய எதிர்க்கருத்துக்களை அறிந்த பிறகுதான் சாங்கிய மரபு குறித்து அறியப்புகுவார். Continue reading

விசிஷ்டாத்வைதம்

விசிஷ்டாத்வைதம்

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

[ஊட்டி இலக்கிய முகாம். ஒரு மாலை நடைப்பயணத்தில் வாசக நண்பர்களுடன்]

அன்புள்ள ஜெ,

தமிழில் அத்வைதம்- விசிஷ்டாத்வைதம் சம்பந்தமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இங்கே என்னுடைய சிக்கல் என்னவென்றால் தமிழில் அத்வைதம் பற்றி நல்ல நூல்களே அனேகமாக இல்லை. விசிஷ்டாத்வைதம் பற்றி நிறைய நூல்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாமே வைணவ பக்தி நோக்கிலே எழுதப்பட்டுள்ளன. விஷ்ணுவிடம் சரணாகதி அடைவதுதான் விசிஷ்டாத்வைதம் என்ற அளவில்தான் அவை பெரும்பாலும் காணப்படுகின்றன.தத்துவார்த்தமாக தூயநிலையில் நாம் அதை அறியவே முடிவதில்லை. வைணவனாக நின்றுதான் அறியமுடிகிறது. அந்நூல்களில் சங்கரரின் தத்துவங்கள் சாதாரண தளத்தில் நின்று கண்டிக்கப்படுகின்றன. பெரும்பாலான நூல்களில் சங்கரருக்கும் விசிஷ்டாத்வைதத்துக்கும் உறவே இல்லை என்ற அளவில்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் சாதாரண வாசகனாக நான் வாசிக்கும்போது ஒரே தத்துவதரிசனத்தின் இரு பார்வைகள் அவை என்ற எண்ணமே ஏற்படுகிறது. இந்த தத்துவங்களை நான் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு என் மனதில் வரையறைசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் இவற்றை எங்காவது வரையறை செய்து எழுதியிருக்கிறீர்களா?

ஆர். வெள்ளியங்கிரி Continue reading

21. சாங்கியம் : புருஷன் – பரிபூர்ண சாட்சி

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

புருஷன் – பரிபூர்ண சாட்சி

[அருகர்களின் பாதை நெடும் இந்தியப்பயணத்தின் போது நண்பர்களுடன். ”சாம் மணல் திட்டு”. ஜெய்சாலமர் அருகில். தார் பாலைவனம். ராஜஸ்தான்]

புருஷன் என்று சாங்கியமரபு கூறுவதை இப்படிப்புரிந்து கொள்ளலாம். பிரபஞ்சத்தை அறிவது யார்? நான்! நான்கள் கூடினால் நாம். நான் என்றால் ‘அறியும் மனம்’ இல்லையா? பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அறியும் மனங்களையும் ஒன்றாகச் சேர்த்தால் வரும் ஒற்றை மனம் எதுவோ அதுவே புருஷன். இதைப் ‘பிரபஞ்ச மனம்’ என்று கூறலாம்.

புருஷன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன். எல்லா இடத்திலும் இருப்பவன். வடிவம் இல்லாதவன். ஆதி இயற்கையைப் போலவே அவனும் முழுமுதல் பொருள் போன்றவன். ஆதி இயற்கையும் ஆதி புருஷனும்தான் முதலில் இருந்தார்கள். இயற்கையின் எல்லா மாற்றங்களும் இந்த புருஷனின் பார்வையின்தான் நிகழ்கின்றன. இயற்கையின் இயல்புகள் எல்லாமே புருஷனின் இயல்புகளுடன் ஒப்பீட்டளவில் உருவாவதே. அதாவது சத்வகுணம் என்றால் அது புருஷனில் சத்வ விளைவுகளை உருவாக்குவது என்று பொருள். Continue reading

20. சாங்கியம் – முக்குணங்களின் அலகிலா விளையாட்டு

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

சாங்கியம்

முக்குணங்களின் அலகிலா விளையாட்டு

[கவி, கேரளா. மழைப்பயணத்தின் போது]

ஆதி இயற்கை முக்குணங்களின் சம நிலையை மீட்க முயன்று அதன் மூலம் பிரபஞ்சம் பிறக்கிறது என்று சாங்கியம் கூறுகிறது என்பது முன்பே விளக்கப்பட்டது. சத்துவம், தமஸ், ரஜஸ் என்ற மூன்று குணங்களைப் பற்றியும் சாங்கிய காரிகை மிக விரிவாகவே பேசுகிறது.

சத்துவகுணம் சுககரமானது அழகும் ஒளியும் உடையது. ஞானம், சிரத்தை, செயலூக்கம் முதலிய இயல்புகள் கொண்டது. நல்ல விளைவுகளை உண்டுபண்னுவது. மேற்கத்திய தத்துவ உருவகத்தைப் பயன்படுத்திக் கூறினால் இது நேர் நிலை இயக்கம் (Positive Movement)  எனலாம். Continue reading

19. சத்காரியவாதமும், வேதாந்தமும் – தொடர்ச்சி

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

சாங்கியம் – சத்காரியவாதமும், வேதாந்தமும் – தொடர்ச்சி

[மேகமலை பயணத்தின் போது]

சாங்கிய தரிசனத்தை புரிந்துகொள்வதில் இடறல் ஏற்படக்கூடிய இடம் இது. அது குணபேதங்கள் இல்லாத பருப்பொருளையே முதலில் ஆதி இயற்கை என்கிறது. முக்குணங்களின் சமன் குலைந்ததும் உருவாகும்’மகத்’ என்பது ஒரு கருத்து நிலை அல்லது ஓர் இயல்பு! அதாவது , பருப்பொருள் திடீரென்று கருத்து வடிவமாக, பிரக்ஞை வடிவமாக மாறுகிறது.

தத்துவ விவாதத்தில் எப்போதுமுள்ள பிரச்சினை உயிரற்ற ஜடப்பொருட்களில் இருந்து தான் உயிரும் பிரக்ஞையும் எப்படி உருவாயின என்பதுதான். இதை மேற்குறிப்பிட்ட விதத்தில் சாங்கியம் எதிர் கொண்டது. இந்தப் புள்ளிக்குப் பிறகு சாங்கியத்தின் தருக்கம் கருத்து முதல்வாதத்தை நோக்கி (அதாவது தலைகீழாகத்) திரும்பியிருப்பதைக் காணலாம். மகத் என்ற பிரக்ஞை விதையில் இருந்து தன்னுணர்வு உருவாகிறது. இதுவும் ஒரு கருத்து வடிவமே. அதிலிருந்து அனுபவங்கள். அனுபவத்திலிருந்து புலன்கள். புலங்களிலிருந்து உருப்புகள். இவற்றின் விளைவாக ஐந்து பரு வடிவங்கள் உருவாயினவாம். அதாவது பஞ்ச பூதங்கள் என்பவை நம் ஐந்து புலன்களின் விளைவாக வெளியே தெரிபவை மட்டுமே! Continue reading

18. சாங்கியம் – சத்காரியவாதமும், வேதாந்தமும்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

ஆறு தரிசனங்கள்

சாங்கியம் – சத்காரியவாதமும், வேதாந்தமும்

[மழைப்பயணம்.கவி, கேரளா]

சத்காரிய வாதத்தை சாங்கிய அறிஞர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள் என்று அறிய அவர்கள் எப்படித் தங்கள் முக்கிய எதிர்த்தரப்பான வேதாந்தததை எதிர்கொண்டனர் என்று பார்ப்பது உதவிகரமானதாகும்.

பிரம்மம் மட்டுமே ‘சத்’ அல்லது ‘இருப்பு உடையது’ என்கிறது வேதாந்தம்.பிரபஞ்சம் ‘அசத்’ அதாவது ‘இருப்பு அற்றது’ (அல்லது மாயத்தோற்றம் அல்லது மனமயக்க நிலை); சத் வடிவமான பிரம்மதிலிருந்தே அசத் வடிவமான பிரபஞ்சத்தோற்றம் உருவாயிற்று என்று அது கூறியது. Continue reading