தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 4 [நிறைவுப்பகுதி]

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 4 [நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கும்பமேளா பயணத்தின்போது]

சாங்கிய-வேதாந்த இணைப்பு

இப்பகுதியில் உள்ள 28 ஆவது பாடலை சில பதிப்புகளில் சற்று எளிமையாக மொழியாக்கம் செய்திருப்பார்கள். அவியக்தாதீனி என்பதை ‘மாயையில் இருந்து உருவாவது’ என்றே நாம் வாசிக்க நேரும். ஆனால் ‘அவியக்தம்’ என்பது சாங்கிய சிந்தனையின் அடிப்படையான கோட்பாடாகும். நாம் காணும் இப்பிரபஞ்சமானது முழுமுதல் இயற்கை (ஆதிப்பிரகிருதி)யில் இருந்து உருவாகி வந்தது என்று சாங்கியம் கூறுகிறது. இந்த பிரபஞ்சமானது மூன்று அடிப்படைக் குணங்கள் உடையது. தமோகுணம், ரஜோ குணம், சத்வ குணம். இவற்றை முறையே நிலைக்கும் தன்மை, செயலூக்கத்தன்மை, சமநிலைத்தன்மை என்று விளக்கலாம். இக்குணங்களின் கோடானு கோடி இணைவுகள் மூலமே பிரபஞ்சத்தின் எண்ணற்ற வடிவங்கள் முடிவின்மை வரை உருவாகி விரிந்துள்ளன என்பது சாங்கியங்களில் கூற்றாகும். Continue reading

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 3

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 3

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கோவை இலக்கிய சந்திப்பு]

இரண்டு மேலைக்கோட்பாடுகள்

கீதையின் தன்னறம் என்ற கருத்துக்கு சமானமான இரு மேலைக்கோட்பாடுகளை நாம் இங்கே கவனிக்கலாம். ஒன்று அரிஸ்டாடில் முன்வைக்கும் நிகோமாகிய அறக்கோட்பாடு. இன்னொன்று இமானுவேல்காண்ட் முன்வைக்கும் தன்னியல்பூக்கம் (Catagorical Imperative)

நிகோமாகிய அறக்கோட்பாடு அரிஸ்டாடில் அவரது பிற்கால அறவியல் சிந்தனைகளின் போது முன்வைக்கப்பட்டது. மனித இயல்பு என்பது அறம் மற்றும் ஒழுக்கம் குறித்த எந்தச் சிந்தனைக்கும் அடிப்படையாக அமைவது என்று அரிஸ்டாடில் கூறுகிறார். ஒரு மனிதனின் இயல்புகள் அவனில் தொடர் செயல்பாடுகளாக மாறி மெல்ல பழக்கங்கள் ஆகின்றன. பழக்கம் மூலம் அவனுடைய ஆளுமை உருவாகிறது. ஒருவனுடைய இயல்பை எவ்வாறு அறிவது? 1. அவனுடைய ரசனை என்ன? 2. அவனுடைய தெரிவுகள் என்ன? என்ற இரு வினாக்களின் அடிப்படையில்தான். Continue reading

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 2

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[ கும்பமேளா பயணத்தின் போது]

தன்னறமும் பிறப்பும்

இதில் 31ஆவது பாடலில் வரும் வார்த்தையான ‘ஸ்வதர்ம’ என்பதை ‘தன்னறம்’ என்று நேரடியாக தமிழாக்கம் செய்துள்ளேன். பல மொழிபெயர்ப்புகளில் குலதர்மம், குலநெறி என்ற மொழிபெயர்ப்பு உள்ளது. ‘ஸ்வ’ அதாவது ‘சுய’ என்றால் அது குலத்தைக்குறிக்கக்கூடியதல்ல.  அறம் என்ற சொல்லுக்கு ‘வாழ்க்கை நெறி’ என்ற பொருள் உண்டு. துறவறம் இல்லறம் ஆகியவற்றில் பின்னொட்டாக உள்ள அறம் இது.

தன் உள்ளார்ந்த இயல்பால் ஒருவன் தெரிவு செய்யும் செயலே தன்னறம் என்று கூறலாம். சுயதர்மம் என்றும் இதை தமிழாக்கம் செய்யலாம். தன்னுடைய ஆளுமைக்கும் தன் அடிப்படை இச்சைகளுக்கும் ஏற்பவே ஒருவனின் மனநிலைகளும் செயல்பாடுகளும் அமைகின்றன. இதை எளிய உளவியல் தளத்தில் நின்று புரிந்து கொள்வதே போதும். எச்செயலில் தன் உள்ளார்ந்த ஆற்றல் முழுமையாக வெளிப்படுகிறது என்று ஒருவன் எண்ணுகிறானோ அதுவே அவனுடைய தன்னறம் ஆகும். அதில் ஈடுபட்டு, அதை வென்று, அதைக் கடந்து சென்றுதான் ஒருவன் தன் விடுதலையை அடைய இயலும். ஒருவன் போரை, பிறிதொருவன் வணிகத்தை, பிறிதொருவன் கல்வியை, பிறிதொருவன் தொழிலை, பிறிதொருவன் சேவையை தன்னறமாகக் கருதலாம். Continue reading

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் .1

தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கோவை வாசகர் சந்திப்பு]

‘மனிதன் நானே உயர்ந்தவன் என்று ஆணவம் கொண்டதைக் கண்ட இயற்கை வலியைப் படைத்தது. உடலை வென்ற வலி ஆணவம் கொண்டு கொக்கரித்தபோது இயற்கை தூக்கத்தைப் படைத்தது. தூக்கத்தின் ஆணவத்தை வெல்ல மரணத்தை படைத்தாகவேண்டியிருந்தது இயற்கைக்கு. மரணம் கொக்கரித்தபோது வேறுவழியில்லாமல் இயற்கை காலத்தைப் படைத்தது. காலத்த்தின் கர்வம் அடக்க கடைசியில் முடிவிலியைப் படைத்தது’ கல்பற்றா நாராயணன் ஒருமுறை அவர் வாசித்த இவ்வரிகளைச் சொன்னார்.

”பின்னர் முடிவிலியின் ஆணவத்தை அடக்க முடிவிலி என்ற சொல்லைப் படைத்தது இயற்கை”என்று நான் வேடிக்கையாகச் சொன்னேன். Continue reading

கீதை முகப்பு

கீதை முகப்பு

ஜெயமோகன்.இன் ல் இருந்து

பல்லாயிரக்கணக்கான ஓவியங்கள், நடனக்காட்சிகள், நாடகத் தருணங்கள், திரைப்படக் காட்சியுருவங்கள் வழியாக நம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது கீதையின் முகப்புக்காட்சி. கீதை என்றதுமே இக்காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நாள்காட்டி ஓவியங்களாக இக்காட்சி நம் எளிய மக்களின் இல்லங்களிலும் காணப்படுகிறது. மரபில் இக்காட்சிக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு; குறிப்பாக தமிழ்நாட்டில் பற்பல ஆலயங்களில் கிருஷ்ணனை பார்த்தசாரதியாக நிறுவி வழிபடுகிறோம்.

இந்தக் காட்சியின் நாடகீயத்தன்மையும் கவித்துவமுமே கீதையைப்போன்ற ஒரு சிக்கலான தத்துவ நூலை இத்தகைய பெரும் புகழ் பெற வைத்தது என்றால் மிகையல்ல. பைபிள், குர் ஆன் போன்ற மதநூல்கள் பெரும் புகழ் பெற்று பரவலாக வாசிக்கப்படுவது இயல்பே. காரணம் அந்த மதங்கள் அந்நூல்களின் பலத்தில் நிற்பவை. அம்மதம் செயல்படுவதே அந்நூலை பிரச்சாரம் செய்வதன் வழியாகத்தான். ஆனால் கீதை மதநூலல்ல, இந்துமதம் அதை நம்பியும் இல்லை. யோசித்துப் பார்த்தால் உலக அளவில் அதிகமாகப் புகழ் பெற்ற தத்துவநூல் கீதையாகவே இருக்க முடியும் என்று படுகிறது. பிளேட்டோவின் குடியரசுகூட அடுத்த படியாகவே இருக்கும். Continue reading

கீதா உபநிடதம்

கீதா உபநிடதம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கும்பமேளா பயணத்தின் போது]

கீதையை நான் ‘வாசித்து’ மீண்டும் சில வருடங்கள் கழித்து என் குரு நித்ய சைதன்ய யதியை ஊட்டியில் அவரது குருகுலத்தில் வைத்து சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன். ‘சந்தேக இயந்திரம்’ என்று வேடிக்கையாக அவர் அழைப்பார். இலக்கியம், உளவியல், தத்துவம் என எல்லா தளங்களிலும் அவரிடம் கேள்வி கேட்டபடியே இருந்தேன். அவ்வினாக்களின் ஒரு சிறு தொகுப்பு ஒரு பேட்டி வடிவில் காலச்சுவடு இதழில் வெளியாயிற்று.

அந்நாட்களில் ஒருமுறை மாலைநேர வகுப்பில் நித்யா சுற்றிலும் பார்த்து ‘எங்கே என் சந்தேகத் தாமஸ்?’ என்றார். நான் ஒரு விருந்தினருக்குப் பின் அமர்ந்திருந்தேன். ‘இங்கேவந்து உட்கார்’ என்று தன் அருகே ஓர் இடத்தை நித்யா காட்டினார். அங்கே நான் அமர்ந்ததும் ”அருகே அமர்தல் என்றால் என்ன என்று தெரியுமா?” என்று புன்னகையுடன் என்னிடம் கேட்டார். நான் இல்லை என்று தலையசைத்தேன். நித்யா பதில் கூறாமல் வகுப்பிற்குப் புகுந்தார். Continue reading

செயலே விடுதலை:சாங்கிய யோகம் – 2

செயலே விடுதலை:சாங்கிய யோகம் – 2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[அருகர்களின் பாதை – டோலாவீரா , நண்பர்களுடன் ]

நிரந்தரத்தன்மையின் தரிசனம்

அலைகள் கடலை மாற்றியமைப்பதில்லை. அலை கடல் என்றும் நிரந்தரத்தின் உள்ளே நிகழுபவை மட்டுமே உயிர்கள் ஆற்றும் அத்தனைச் செயல்களும், அவை ஆக்கமானாலும் சரி அழிவானாலும் சரி, பிரபஞ்சம் என்ற நிரந்தரத்தின் உள்ளே நிகழும் அலைகள் மட்டுமே. பிரபஞ்சம் என்பதை ஒரு ஒற்றைப் பெருநிகழ்வாகக் கொண்டால் இவையெல்லாம் அப்பெருநிகழ்வின் சிறு சிறு துளியே.

இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும் எனக்குள் கோடானுகோடி செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. என் செல்கள் உண்டு உயிர்த்து இயங்குகின்றன. என் மூளை நியூரான்கள் மின்னூட்டம் பெற்றும் அணைந்தும் செயல்படுகின்றன. எனக்குள் கோடானு கோடி வைரஸ்கள் பிறந்திருக்கின்றன. கோடானுகோடி பாக்டீரியாக்களுடன் வெள்ளை அணுக்கள் சமர்புரிகின்றன. அவையெல்லாம் என் இயக்கத்தில் துளியிலும் துளியினும் துளிகள். Continue reading

செயலே விடுதலை:சாங்கிய யோகம் – 1

செயலே விடுதலை:சாங்கிய யோகம் – 1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

 [ பன்னஹல்க அஜய்குமார். ஆசிரியரின் இந்தியப்பயணத்தின் போது ]

ஒரு வேதாந்திக்கு வேதாந்தநூல்களுடன் உள்ள உறவென்பது ஏறிச்சென்றவனுக்கு ஏணி மீது உள்ள உறவுதான். படிபப்டியாக மிதித்துமேலேறி முற்றிலும் பிந்தள்ளி அவன் சென்றுவிடுகிறான். அப்படியானால் அவனுக்கு வேதங்களுடன் உள்ள உறவென்ன? அந்த ஏணிக்கு மூங்கில்களை அளித்த அந்தக் மூங்கில்காட்டுடன் உள்ள உறவுதான்.

வேதங்களுக்கு படிப்படியாக ஒரு முதன்மை இந்துமதக்கட்டமைப்பில் உருவாகி வந்தது. அதற்கான வரலாற்றுக்காரணங்கள் பல உள்ளன. முக்கியமான இரு காரணங்களைச் சொல்லலாம். இந்துஞான மரபை ஒரு மதமாக கட்டமைத்த சடங்கு- நம்பிக்கை அமைப்பானது வைதீகர்களால் உருவாக்கபப்ட்டது. அந்த உருவாக்கத்திற்கு வேதம் பெரும் பங்களிப்பை ஆற்றியிருக்கிறது.னாந்த கட்டமைப்புக்கு எதிரான குரல்களாக அவைதீக மதங்களான பௌத்தமும் வைணவமும் உருவாகி வந்தன. அவை அளித்த நூற்றாண்டுக்கால எதிர்ப்பு காரணமாக இந்து மதம் வேதங்களை தன் அச்சுத்தண்டாக நிறுவிக்கொண்டது. Continue reading

கீதை இடைச்செருகலா? மூலநூலா?

கீதை இடைச்செருகலா? மூலநூலா?

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[வாசக நண்பர்களுடன்]

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் மகாபாரதம் பற்றிய பதிலில் கீதை அதில் இடைச்செருகலாகச் சேர்க்கபப்ட்டது என்று சொல்லியிருக்கிறீர்கள். இது ராகுல சாங்கிருத்தியாயன், டி.டி.கோஸாம்பி முதலிய மார்க்ஸிஸ்டுகளால் சொல்லபப்ட்டு வரும் வாதம். பெரும்பாலான இந்துக்கள் இதை ஏற்க மாட்டார்கள்… நீங்கள் சொல்லும் பதில் என்ன?

நாராணஸ்வாமி

அன்புள்ள நாராயணஸ்வாமி அவர்களுக்கு,

நான் கிருஷ்ண பக்தனல்ல. தத்துவ மாணவன் மட்டுமே. இந்தக்கோணத்தில் என் பதிலை புரிந்துகொள்ள கோருகிறேன் Continue reading

கீதைத்தருணம்

கீதைத்தருணம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[வீட்டு  நூலகம்]

அன்புள்ள ஜெயமோகன்,கீதையைப்பற்றி எழுதியிருந்த கட்டுரைகளை விரும்பிப்படித்தேன். நான் சிறுவயதிலிருந்தே கீதையை பாராயணம் செய்திருக்கிறேன். அவ்வப்போது படித்ததும் உண்டு. கீதை ஓர் அழகிய நூல் என்று தோன்றியிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் முக்கியத்துவம் மனதில் பட்டதில்லை. நீங்கள் எந்தக் கோணத்தில் கீதையை படிக்கிறீர்கள் என்ற ர்வம் எனக்கு உள்ளது.

ஆர்.சங்கர நாராயணன், மும்பை

அன்புள்ள சங்கர நாராயணன்,

கீதையை வாசிப்பதற்கு உரிய தருணத்தை கீதையே உருவாக்கும் என்ற நம்பிக்கை நம் மரபில் உண்டு. அதையே ‘கீதா முகூர்த்தம்’ என்கிறார்கள். Continue reading