அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும்

அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அயன் ராண்ட் குறித்த என்னுடைய கட்டுரைக்கு வந்த ஒரு  கடிதம் என்னை மிகவும் சிந்திக்கச் செய்தது. இப்போது அமெரிக்காவில்,நியூயார்க்கில்,  இருக்கிறேன். ஊரில் இருந்திருந்தால் இக்கடிதத்தை பொருட்படுத்தியிருக்க மாட்டேன். நானல்ல,  எந்த ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் பொருட்படுத்தி பதில் சொல்லத்தக்க கடிதம் அல்ல இது. ஆனால் இங்கே அமெரிக்க கல்விமுறை பற்றி மேலும் மேலும் உற்சாகமாக இங்குள்ள நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். மேலும் இக்கடிதம் வந்தநாளில் நான்  எம் ஐ டி – ஹாவார்ட் சென்றிருந்தேன்.

Continue reading

அயன் ரான்ட்,மேலும் கடிதங்கள்

அயன் ரான்ட்,மேலும் கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

ஜெயமோகன்,

“இந்நிலையில் நம் சூழலில் எப்போதும் நிகழும் ஒன்று உண்டு. தகவல்பிழைகளைக் கண்டடைந்து அதன் அடிப்படையில் விவாதத்தை முன்னெடுப்பது. ஒரு கட்டுரையை கூர்ந்து கவ,னித்து தகவல்பிழை ஒன்றை கண்டுபிடித்து ‘இதைக்கூட தெரியாமல் எழுதிய இவனெல்லாம் பேசலாமா’ என்ற தோரணையில் எழுதப்படும் கட்டுரைகளை நாம் சர்வசாதாரணமாக தமிழில் காணலாம். சமயங்களில் அது தட்டச்சுப்பிழையாகவோ அல்லது வாசகரின் புரிதல்பிழையாகவோ இருக்கும். ஒரு கட்டுரையின் தகவல்பிழை ஒருபோதும் அதன் மையமான வாதத்தை நிராகரிக்க காரணமாகாது என்பது எல்லா விவாதங்களிலும் உள்ள அடிப்படைவிதி” மேற்கண்ட கருத்தை சொல்லிய நீங்களே “யாருடைய காலில் வேண்டுமானாலும் விழும் தமிழர்கள்” என்ற அரவிந்தன் கண்ணையனின் கருத்தை திரித்து “காலில் விழும் தமிழ்க்குணத்தைப் பற்றிய நக்கல் அயன் ராண்டின் ரசிகருக்கு உகந்ததே. காலில் விழுவதென்பது இந்தியப்பண்பாட்டின் மிக மிக உயர்ந்த ஒரு ஆசாரம்.” என்று கூறியிருக்கிறீர்கள். அவர் எந்த காலில் விழும் கலாச்சாரத்தை குறிப்பிடுகிறார் என்பது எனக்குப்புரியும்போது தங்களுக்கு புரியாமலா இருக்கும். உன்னதனமான காலில் விழும் கலாச்சாரம், தற்போதைய சந்தர்ப்பவாத தமிழினத்தினால் எந்தளவுக்கு கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தாங்கள் அறியாததா?

மணிவண்ணன் Continue reading

அயன் ரான்ட் கடிதங்கள்

அயன் ரான்ட் கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெ,

அயன் ராண்டின் சிந்தனைகள் அவ்வளவு எளிமையானவை அல்ல. சுயநலத்தை பற்றிய அவரது கருத்துக்கள் மிக தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளன். மனிதநேயத்தையும், தர்ம‌ சிந்தனையையும் அவர் மறுக்கவில்லை / வெறுக்கவில்லை. ஆனால் மனிதனேயம் ‘மட்டுமே’ அறம் என்பதை அவ்ர் ஏற்பதில்லை. உற்பத்தியை பெருக்கும், தொழில் முனைவோரின் அடிப்படை அறங்களே உலகில் மிக மிக முக்கியமான அறம் என்பதே அவர் கோட்பாடு. தொழில் முனைவோர்களின் ஊக்கம், உழைப்பு மற்றும் லாபநோக்கங்களே நம் உலகை மாற்றி, வறுமையை பல மடங்கு குறைத்து, வாழ்க்கை தரத்தை மிக மிக உயர்த்தி உள்ளது. Continue reading

அயன் ராண்ட் 1

அயன் ராண்ட் 1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[அயன் ராண்ட்]

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்,நலம்தானே. அயன் ராண்டின் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவரது ·பௌண்டன் ஹெட் [Fountainhead]மற்றும் அட்லஸ் ஷ்ரக்ட் [Atlas shrugged]  பற்றி பேசினீர்களென்றால் நன்றாக இருக்கும்.

அன்புடன் ரவி

பி.கு. நான் உங்களை 2006ல் மதுரை புத்தகச்சந்தையில் சந்தித்தபின் வீட்டுக்கு வந்து பார்த்திருக்கிறேன் Continue reading

கீதை கடிதங்கள்

கீதை கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[மோயாற்றுக் கரை  பானமரப்பட்டி. தெங்குமராட்டா பயணத்தின் போது]

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். தங்களின் வலைப்பக்கங்களைத் தொடர்ந்து படித்து வருபவன் நான். பொது, மற்றும் இலக்கியம் சார்ந்த விஷயங்களைவிடத் தத்துவம் சார்ந்த விஷயங்கள்தான் தங்களிடம் அதிகம் பரிமளிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. உங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான பொழுதுகளை இந்தத் தேடலில் கழித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்த அளவுக்கான ஒப்புநோக்குப் பார்வை தங்களிடம் சாத்தியமாகிறது என்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது என்னால். கீதையைப்பற்றி அவ்வப்போது எழுதிக்கொண்டே வருகிறீர்கள். குறிப்பாக அது ஒரு தத்துவநூல் என்பதை நிறுவுவதில் தாங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். அதுதான் உண்மையும்கூட. ஆனால் அதை ஒரு மத நூலாகப் புரிந்து கொண்டிருப்பவர்கள்தான் இங்கே  அதிகம். அதை அப்படிப் புரிய வைத்திருப்பதில் ன்மீகவாதிகளுக்கு நிறையப் பங்கு உண்டு.ஆன்மீகவாதிகள் தாங்கள் அறிந்தோ, அறியாமலோ ஒருவகையான அரசியலுக்கு  ட்பட்டுப்போகிறார்கள். ஆன்மீகம் மக்களின் ஒற்றுமைக்காகவும், ஒருமித்த சிந்தனையை வளப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்பட வேண்டும். அதுதான் சரியான ஆன்மீகம் என்று கருதுகிறேன் நான். எது மக்களின் ஒருமித்த சிந்தனையை, ஒற்றுமையை, மனித நேய சிந்தனையை, மேம்படுத்துகிறதோ அதுவே சிறந்த ஆன்மீகம் என்று எனக்குத் தோன்றுகிறது. Continue reading

கீதை தத்துவநூலா?:கடிதங்கள்

கீதை தத்துவநூலா?:கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கும்பமேளா பயணத்தில்]

அன்புள்ள ஜெயமோகன்

ராம் அவர்கள் குறள் மற்றும் கீதைபற்றிய கடிதம்  கீதை கடிதங்கள்,விளக்கங்கள் படித்தேன். வேற்றுமொழிக்காரர் குறள் பற்றி கேட்டபோது நானும் எப்படி அதன் சிறப்பை கூறுவது எனத்தெரியாமல் தவித்தேன். அதன் இலக்கிய அழகை அவருக்கு ஒருவாறு கூறினேன் என்றாலும் அதன் தத்துவ விளக்கத்தை என்னால் கூறமுடியவில்லை. அதற்கான உங்கள் விளக்கத்தை படிக்க நானும் காத்திருக்கிறேன். கீதைக்கான தங்கள் பதிலுரை எனக்கு மிகவும் ஏற்புடையதாக இருந்தது.

கீதை தத்துவநூலா என அவர் வினவியுள்ளார். கலை கலைக்காகவே என்பதைப்போல் தத்துவம் தத்துவதிற்காக மட்டுமே எனக்கூறினால் அது தத்துவ நூலன்றுதான். நடைமுறைப்படுத்தாத தத்துவம் எதற்காக? தத்துவம் அன்றாட வாழ்வில் செய் அல்லது செய்யாதே என வழிகாட்டுதலை கூறக்கூடாது என்றால் தத்துவத்தின் பயன் தான் என்ன? மனிதன் தத்துவத்தின் பக்கம் செல்வதே எதைச் செய்யவேண்டும் எனத்தெரியாமல் போய்விடும் போதுதான். ஒரு நல்ல தத்துவ நூல் நேரடியாக சொல்லாமல் ஒவ்வொரு தருணத்திற்குமான முடிவை அவனே குழப்பமின்றி  எடுக்கும் அளவிற்கு அவனுக்கு மனத்தெளிவை அளிக்கவேண்டும். கீதையில் தன் மனக்குழப்பத்தை விவரமாக விளக்கி அர்ச்சுனன் தான் என்ன செய்யவேண்டும் எனக்கேட்கும்போது கண்ணன் முதலில்  நேரடியாக  போர் செய் என்றுதான் கூறுகிறான். ஆனால் அர்ச்சுனன் அதை ஏற்காமல் போகவே கீதை விளக்கம் தேவைப்படுகிறது.  கீதை ‘பத்து கட்டளைகள்’(Ten commandments) போன்றது அல்ல. ஆனாலும் ஒருவன் தனக்கான ‘கட்டளை களை’ தானே நேரத்திற்கேற்ப அமைத்துக்கொள்ளும் தெளிவையும் தகுதியையும் பெற  கீதை உதவுகிறது. Continue reading

கீதை கடிதங்கள்,விளக்கங்கள்

கீதை கடிதங்கள்,விளக்கங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கும்பமேளா பயணத்தில்]

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம்

தங்களுடைய கீதை தொடர்பான கட்டுரைகள் மிகவும் ஆர்வமூட்டுபவை அது மட்டுமல்லாது நகைச்சுவை பகுதி மிகவும் சிறப்பானமுறையில் எழுதபட்டிருக்கிறது. தங்களுடைய கீதை தொடர்பான கட்டுரையில் சுவாமி சித்பாவனந்தர் மற்றும் வினோபாவே அவர்களின் கீதை தொகுதியை படிக்கும்படியும் தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.

குறிப்பாக இவை இரண்டும் தத்துவ பயிற்சியை பெற விரும்புபவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியது என்றும் சொல்லி இருந்தீர்கள். அந்த நூல்களோடு ஓரள்வு தொடர்பு இருக்கிறது என்ற முறையில் அவற்றை என்னால்  ஏற்க முடிகிறது என்றாலும் சுவாமி சித்பாவனந்தர் மற்றும் வினோபாவே இருவரின் உரையிலும் குறிப்பாக வினோபாவே அவர்கள் பாவனை பக்தி ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறார் என்றே நான் கருதுகிறேன் குறிப்பாக புண்டலீகன் பற்றி அவர் அதிகமும் கூறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் இரண்டாவதாக பாவனை செய்து தான் பாரேன் என்கிற இந்த வரிகள் திரும்ப திரும்ப வருவதை தாங்கள் கவனித்திருப்பிர்கள்.
Continue reading

அரதி

அரதி

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[மேகமலை பயணத்தின் போது]

அன்புள்ள அண்ணணுக்கு,
நான் என்னுடைய 7 ஆம் வயதில் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.11 வயதில் ஆரம்பித்தது நீல பத்மநாபன்.20 வயதில் நீங்கள்.இப்போது 32 வயதில் எதை படித்தாலும் அதில் எதுவுமே இல்லாதது போலத்தான் இருக்கிறது.எல்லோருமே ஒரே விஷயத்தை பன்னிப் பன்னி எழுதுவது போல இருக்கிறது.

உங்களுடைய எழுத்துக்கள் அதிலும் இந்தியா மற்றும் நகைச்சுவை பற்றி மட்டுமே படிக்க பிடிக்கிறது.தினமும் உங்களை படிக்கிறேன்.இப்போது நான் என்ன செய்வது?
அன்புடன் நடராஜன்

*** Continue reading

சேட்டையும் பரிணாமமும்-கடிதம்

சேட்டையும் பரிணாமமும்-கடிதம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

திரு ஜெமோ

நலமா ? சேட்டை படித்தேன் . நல்ல வலுவான பின்னணி கொண்ட கட்டுரை. இந்த சப்த மாதர் இன்னும் விரிவாக இருக்கும் என்று படுகிறது. கீதையில் பத்தாம் அத்தியாயத்தில் “கீர்திர் ஸ்ரீ வாக்ச நாரீனாம் ச்ம்ருதிர் மேதா த்ருதி க்ஷமா ” (பெண்களில் நான கீர்த்தி, வாக், ஸ்ரீ, ஸ்ம்ருதி, மேதா , த்ருதி , க்ஷமா ஆக ஆவேன் ” என்று கூறிக் கொள்கிறார். இன்னொரு கோணத்தில் அது பெண்களின் குணம் கூட. (புகழ், செல்வம், சொல் வன்மை, நினைவாற்றல், அறிவாற்றல், உறுதி, பொறுமை ) Continue reading

கேள்வி பதில்

கேள்வி பதில்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

வேதங்களையும் அவற்றின் உட்பொருளையும், கவித்துவத்தையும் காண விரும்புவோர்க்குத் தாங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) எவையாக இருக்கும்?

– பி.கே.சிவகுமார்.

வேதங்களை நான் படித்தது மலையாள மொழிபெயர்ப்புகளில். மலையாள மொழி மேற்கட்டுமானத்தில் சம்ஸ்கிருதமேதான். ஆகவே மொழிபெயர்ப்பு மிக உண்மையானதாகவும் நேர்த்தியானதாகவும் இருக்கும். மேலும் மொழிபெயர்ப்புகளைக் கேரள தேசியப் பெருங்கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனன் செய்திருக்கிறார். வேதங்கள் குறித்த அரிய ஆய்வுகளும் மலையாளத்தில் உள்ளன. Continue reading