3.நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!

நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக!

ஜெயமோகன்.இன் ல் இருந்து

சிலநாட்களுக்கு முன்னர் திருவையாறு  ஐயாறப்பன் ஆலயத்தில் சென்றுகோண்டிருந்தபோது வழிபாட்டுணர்வுடன் சென்றுகோண்டிருந்த மக்களைப் பார்த்துவிட்டு மலையாள இலக்கியத்திறனாய்வாளர் கல்பற்றா நாராயணன் என்னிடம் சொன்னார் ”பக்தியில் மட்டும்தான் ஒரு சிறப்பு உள்ளது, அதில் மூழ்கி மூழ்கிச் செல்வதற்கான இடம் இருக்கிறது”

நான் சொன்னேன் ”பக்தி என்பது உண்மையில் ஒற்றைப்படையான ஓர் உணர்வே…பக்தியை இந்திய பக்தி இயக்கங்கள்தான் மூழ்கிச்செல்லவேண்டிய கடலாக மாற்றின. பக்தியை முழு வாழ்க்கையளவுக்கே பெரிதாக்கிக் கொண்டன அவை. பக்தியில் வாழ்க்கையின் எல்லா கூறுகளையும் கொண்டுவந்துசேர்த்துக் கொண்டன. நம்முடைய பக்தியில் தத்துவம் இருக்கிறது, இலக்கியமும் இசையும் இருக்கிறது. எல்லா கலைகளும் பக்தியே. சுவையான சமையல், கட்டிடக்கலை ஆகியவையும் பக்தி சார்ந்தவையே. நம்முடைய களியாட்டங்கள் கொண்டாடங்கள் ஆகியவையும் பக்திசார்ந்தவையே. நம் வாழ்க்கையில் பக்தி ஊடுருவாத எந்த வெற்றிடமும் இல்லை என்ற நிலையை உருவாக்கினார்கள் முன்னோர்” Continue reading

2.மறைந்து கிடப்பது என்ன?

மறைந்து கிடப்பது என்ன?

ஜெயமோகன்.இன் ல் இருந்து

சாந்தோக்ய உபநிடதத்தில் ஆருணியாகிய உத்தாலகன் தன் மகன் ஸ்வேதகேதுவுக்குச் சொல்கிறான், மண்ணில் ஓடும் நதிகளெல்லாம் கடலையே அடைகின்றன. மாறுபட்ட சிந்தனைகளும் தரிசனங்களுமெல்லாம் இறுதியில் பிரம்மத்தையே சென்றடைகின்றன.

ஐநூறுவருடத்துக்கு மேல் காலப்பழக்கமுள்ள  ஏதாவது ஒரு மதத்தில், ஒரு தத்துவசிந்தனைமரபில் இதற்கிணையான ஒரு முழுமைநோக்கு பதிவாகியிருக்கின்றதா? உலகசிந்தனைகளை இன்று நாம் இணையம் மூலம் எளிதாக தொட்டுச்செல்லமுடிகிறது. நீங்களே இதற்கான விடையைத்தேடிக்கொள்ளலாம். Continue reading

இந்திய சிந்தனை:கடிதங்கள்

இந்திய சிந்தனை:கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெயமோகன்;

வணக்கம் தங்களுடைய இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் புத்தகம் படித்தேன்.

அதிலே முதலாவதாக நீங்கள் சொல்லியிருந்தீர்கள் இந்த விளக்கங்களை எளிதாக அமைப்பதற்கே என்னுடைய மொழித்திறனை பயன்படுத்துகிறேனென்று முற்றிலும் உண்மை. காரணம் இன்றைக்கு நீங்களே குறிப்பிடிருப்பதை போன்று இவற்றை பற்றியே தகவல்களை எல்லாம் வேதாந்த  நூல்களிலிருந்தே பெற முடிகிறது ஒன்று இரண்டாவாதாக அங்கே வெறும் மொழித்திறன் மாத்திரமே பயன்படுத்தப்படுவதால் கடுமையான பொருள் மயக்கம் ஏற்படுகிறது. விளைவு அதை படிக்கிற விருப்பமே அகன்று விடுகிறது.காரணம் சந்திர கிரகணத்தை பற்றிய விளக்கம்  அந்த நிகழ்வை விளக்க வேண்டுமே அன்றி சந்திரனுடைய அழகை விளக்க வேண்டிய அவசியமென்ன?

மொழியை  இவ்வளவு திட்டவட்டமாகவும் துல்லியமாகவும் நீங்கள் பயன்படுத்தியதே இந்த புத்தகத்தை இவ்வளவு தூரம் புரிந்து கொள்ள உதவியது. உயிர்மையில் சமீபத்திய பேட்டியில் சந்தைப்படுத்துதலை பற்றிய உங்கள் கருத்து எனல்லும் உடன்பாடானதே. இருப்பினும் இவ்வளவு முக்கியமான புத்தகம் மறுபதிப்பு செய்யப்படாதது ஒரு வாசகனின் மனநிலையிலிருந்து மிகவும் துரதிர்ஷ்டமானது. உங்கள் பார்வையில் எங்களையும் ஒரு அங்கமாக கொல்லலாம். இந்த புத்தகத்திற்கான தனி பிரதி எனக்கு எங்கும் கிடைக்கவில்லை.காடு நாவல் குறித்து தனியாக ஒரு கடிதம் எழுத வேண்டும்.

அன்புடன்
சந்தோஷ் Continue reading

கீதை,சம்ஸ்கிருதம்,ஸ்மிருதிகள்

கீதை,சம்ஸ்கிருதம்,ஸ்மிருதிகள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[ஊட்டி இலக்கிய சந்திப்பில் வாசக நண்பர்கள்]

அன்புள்ள ஜெ,

கீதை குறித்தக் கட்டுரையைப் படித்தேன். ஒரு புறம் மகிழ்ச்சியும், மறுபுறம் வேதனையும் வந்தது. என்னுடைய காலம் காலமான நம்பிக்கைகளை, மற்றும் புரிதல்களையும்,  தத்துவார்த்தமாக எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியது மகிழ்ச்சி. ஆனால்,  மாபெரும் முதிர்வுத் தத்துவங்களுக்கு அரிச்சுவடி நிலையில் இருந்து ஆரம்பித்து மறுப்பு தெரிவிக்கும் எழுத்துக்களுக்கு எல்லாம் நீங்கள் விளக்கம் கொடுக்க நேர்ந்தது வேதனை.

எந்த ஒரு அதீதமான நுகர்ச்சியையும் நம் நாட்டில் ‘apologetic’  ஆகவே கருதுவதை நான் சிறு வயதில் இருந்தே பார்க்கிறேன். நவீன வாதம் என்பது இதற்கு எதிரானது- இந்த மாதிரி சுய அடக்கம் எல்லாம் தேவையில்லை என்று யாராவது வாதிட்டால், பதட்டத்தில் என் நாக்கு அடங்கி விடும். பதிலே வராது. சமீபத்தில் ந்யூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஞாயிறு மலரில் மன நல அறிவுரை (கவுன்சிலிங்)  ஒன்றில் ஒரு பெண் மருத்துவர், அடிக்கடி சுய இன்பம் அனுபவிக்க அந்த கேட்டப் பெண்ணுக்கு அறிவுரை கூறினார். தாழ்வு மனப்பான்மையை இது தகர்க்கும என்று வேறு சொன்னார்.

ஆசை ஒரு பெருந்தீனிக்காரன் என்று கண்ணன் சொன்னதை நாம் எந்த தளத்தில் இருந்து விளக்க முடியும்?  “இல்லையே ! அதோ பார் வெள்ளையர் சமுகத்தை. அவர்கள் தீனி, குடி, பெண் என்று அனைத்திலும் பெரும் நாட்டம் உடையவராக இருந்தும் அவர்கள் நிம்மதியாய்த் தானே உள்ளனர்?” என்று பதில் கேள்வி வந்தால் நம் பதில்கள் சப்பையாகவேப் போய் விடும்.

இந்த நிலையில் உங்களது கட்டுரை ஒரு கலங்கரை விளக்கம். தமிழில் இது போல நிறையத் தேவை.

வேங்கடசுப்ரமணியன் Continue reading

கீதை-கடிதங்கள்

கீதை-கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெ,

வணக்கம். கிருஷ்ணர் கற்பனையல்ல, வரலாற்று நாயகனே என்று தொல்லியல், நாட்டார் வாய்மொழி வரலாறு, இலக்கியம், வானியல் மூலம் அறிவியல் பூர்வமாக இலண்டனில் பணியாற்றும் Dr. மணிஷ் பண்டிட் (Nuclear Medicine) என்பவர் ஆராய்ச்சி செய்து முடிவை ஒரு ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

வானியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் கணிப்பொறி மென்பொருளைப் பயன்படுத்தி, மஹாபாரதத்தில் குறிப்பிட்டுள்ள 140க்கும் மேற்பட்ட வானியல் சார்ந்த குறிப்புக்களைக் (முக்கியமாக உத்யோக பர்வம், பீஷ்ம பர்வம், பலராமனின் தீர்த்த யாத்திரை தொடங்கிய திதி, நட்சத்திரம்) கொண்டு Dr. நரஹர் ஆச்சார் (Department of Physics, University of Memphis,Tennessee) குருக்ஷேத்திர யுத்தம் ஆரம்பித்த நாள் கி.மு. 22 நவம்பர் 3067 என்றும் கிருஷ்ணர் பிறந்த வருடம் கி.மு. 3112 என்று கண்டு பிடித்ததை அடிப்படையாகக் கொண்டும், Dr. ராவின் புகழ்பெற்ற துவாரகை கடல் அகழ்வாராய்ச்சி முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

கிருஷ்ணரே நேரில் வந்து சத்தியம் செய்தாலும் இந்தப் போலி மதசார்பிண்மைவாதிகள், முற்போக்கு பகுத்தறிவாளர்கள், மார்க்சிய வரலாற்றாய்வாளர்கள் ஒத்துக்கொள்ள அடம்பிடிப்பார்களே!

நன்றி.

பிரகாஷ், தென்கரை.

Continue reading

கீதையைச் சுருக்கலாமா?

கீதையைச் சுருக்கலாமா?

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[இந்திய நெடும்பயணத்தில் பூனா அருகில் கார்லே குகை]

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களுடைய கீதை உரையை நான் திரு.அரங்கசாமி அவர்களின் உதவியோடு முழுமையாகப் படித்திருக்கிறேன்.  அதில் நீங்கள் கர்மயோகத்தை விளக்குவதற்காக எழுதிய பல பக்கங்கள் எனக்குப் புரியவைக்காத  அந்த ஒட்டுமொத்தப் பார்வையை, உங்களின் உலோகம் நாவலில் வரும் ஒரு சிறு பகுதி புரியவைத்தது.

ஒரு இயந்திரம் ஆயிரக்கணக்கான உறுப்புகளாலான நூற்றுக்கணக்கான தனிக்கருவிகளாக வடிவமைக்கப்பட்டு ஒரு தருணத்தில் ஒன்றிணைக்கப்பட்டு மின்சாரம் அளிக்கப்பட்டதும் சரசரவென செயல்பட ஆரம்பிப்பதைப்போல எத்தனையோ பேர் என்ன நடக்கிறதென்றே அறியாமல் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆணைகளை நிறைவேற்ற ஒவ்வொன்றும் அதற்குரிய பங்களிப்பாற்ற அது நிகழ்ந்தது. என்ன நடந்தது என்று அறிந்தவர்கள் அதை வடிவமைத்தவர்கள் மட்டுமே.

கர்மயோகத்தின் அந்த ஒட்டுமொத்தப் பார்வைக்குரிய மிக்சச்சிறந்த உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாமா?

என் புரிதல் சரிதானே?

பூபதி Continue reading

கீதை எதற்காக?

கீதை எதற்காக?

ஜெயமோகன்.இன் இல் இருந்து தொகுத்தது

[ஊட்டி இலக்கிய சந்திப்பில் வாசக நண்பர்கள்]

கீதையை ஏன் பயில வேண்டும்? ஒரு மதநூலாக அதைப் பயின்றாக வேண்டிய கட்டாயம் இந்துவுக்கு சற்றும் இல்லை. இந்துமதம் அப்படி எந்தக் கட்டாயத்தையும் விதிக்கவில்லை. வழிபாட்டு நூலகவும் அது இன்றியமையாதது அல்ல. வேதங்கள், திருமுறைகள், திருவாய்மொழிகள் போன்றவையே அவ்வகையில் முக்கியமானவை.

கீதை ஒரு தத்துவ நூல், ஞான நூல் என்ற இருவகையிலும்தான் அதை வாசிக்க வேண்டிய தேவை எழுகிறது. இந்திய தத்துவமரபை கற்க விரும்புகிறவர்களுக்கு அது தவிர்க்க இயலாத நூலாகும். இந்து மெய்ஞான மரபை அறிய விரும்புகிறவர்களுக்கும் அது இன்றியமையாதது. இந்து மரபு சார்ந்து ஞானத்தேடலில் இருப்பவர்களுக்கு அது முக்கியமான முதல்நூல்.

Continue reading

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – கேள்வி பதில்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – கேள்வி பதில்

ஜெயமோகன்.இன் இல் இருந்து

[வட கிழக்கு பயணத்தின் போது]

“இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” என்ற தலைப்பை வைக்கும்போது, இடதுசாரிகள் “இந்திய ஞான மரபு” என்று அழைப்பதைக் குறிப்பிட்டு, அது தவறான புரிதலில் எழுந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஜவஹர்லால் நேரு, The Discovery of Indiaவில் “நமது பழைய இலக்கியங்களில் ‘ஹிந்து’ என்னும் சொல் காணப்படவில்லை. கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தந்திரிக நூலில்தான் முதன்முதலாக இந்தச் சொல் காணக்கிடைக்கிறது என்று தெரியவருகிறது. இந்த நூலில் ஒரு மதத்தினரை அல்லாமல், ஒரு மக்களைத்தான் ‘ஹிந்து’ என்னும் சொல் குறிக்கிறது” என்று எழுதியுள்ளதை திரு.சோதிப் பிரகாசம் தன் அணிந்துரையில் எடுத்துக் காட்டியிருக்கிறார். இதன் அடிப்படையில் பார்க்கும்போதும் கூட, “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” என்ற தலைப்பே பொருத்தமானது என்று எண்ணுகிறீர்களா? ஆமெனில், ஏன் என்று விளக்க முடியுமா?

– பி.கே.சிவகுமார். Continue reading

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 6 [நிறைவுப்பகுதி]

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 6 [ நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கோதாவரி நதி]

கீதை ஏன் செயலாற்றுதலை முக்கியப்படுத்த வேண்டும்?

கீதை செயலாற்றுவதை முன்வைப்பதாக உள்ளமைக்கு ஒரு விரிவான தத்துவப் பின்புலம் உள்ளது. அது முத்தத்துவ அமைப்பில் இறுதியானது என்றேன். பிற தத்துவங்களான உபநிடதங்களும் சரி, பிரம்ம சூத்திரமும் சரி வேதாந்தத்தை முன்வைப்பவை. வேதாந்தம் உயர்தத்துவத்தின் சிறப்புண்மையை முன்வைப்பது. ஒட்டுமொத்தமாகப் பிரபஞ்ச இயக்கத்தின் சாரம் நோக்கி கண்திறக்கும் உயர்தத்துவம் எதுவானாலும் அது உடனடியாக நம்மில் நிகழ்த்தும் விளைவு அன்றாட உலகியல் வாழ்வின் சவால்களில் போட்டிகளில் அவநம்பிக்கையை உருவாக்குவதேயாகும். ஆகவே உண்மையை சிறப்புண்மை, பொதுஉண்மை என இரண்டாகப் பிரிப்பது அவசியமாகிறது. உண்மையில் ஆதி உபநிடதங்களில் இப்பிரிவினை தெளிவாக நிகழ்த்தப்படவில்லை. அதைச் செய்தவர்கள் பெளத்தர்கள். குறிப்பாக நாகார்ச்சுனர். விசேஷசத்யம், சாமான்யசத்யம் அல்லது வியவகாரிக சத்யம் பரமார்த்திக சத்யம் என இது குறிப்பிடப்படுகிறது. Continue reading

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 5

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 5

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கோதையின் மடியில்]

கீதை கொலையை நியாயப்படுத்தும் நூலா?

உலக இலக்கியத்தில் இன்றுவரை எழுதப்பட்ட மாபெரும் படைப்புகளில் பெரும்பாலானவற்றை கொலையை வலியுறுத்துபவை என்று நிராகரிிக்க முடியுமென்றால்தான் இக்கேள்வியை சாதாரணமாகக் கூட கேட்க இயலும். வீரம் என்றுமே பண்டையவாழ்வின் மாபெரும் விழுமியமாக இருந்துவந்துள்ளது. ஒரு மனிதனின் உச்சகட்ட சாத்தியம் வெளிப்படுவது வீரத்திலேயே என்பதனால்தான் அது அத்தனை முக்கியப்படுத்தப்பட்டுள்ளது. தாந்தேயின் ‘டிவைன் காமெடி ‘யை நினைவுகூருங்கள். துறக்கத்தையும் நரகத்தையும் ஆழக்காணச் செல்வது முற்றும் துறந்த ஞானி அல்ல, கையில் வாளும் நெஞ்சில் தீரமும் கொண்ட பெளராணிக வீரனான யுலிஸஸ்தான். இன்று வீரம் என்பதன் பொருள் மாறுபடக் கூடும். கீதையின் முதல்தளம் அக்கால விழுமியங்களில் வேரூன்றி நிற்கிறது. அது ‘எக்காலத்துக்கும் உரிய வரிகள் மட்டுமே கொண்ட’ மதநூல் அல்ல. Continue reading