விஷ்ணுபுரமும் பிராமணர்களும்

விஷ்ணுபுரமும் பிராமணர்களும்

கேள்வி பதில் ஜெயமோகன்.இன் இல் இருந்து

அன்புள்ள ஜெயமோகன்,

நன்றி. இப்போது படித்து முடித்து ஒரு முழுமை மனதில் வந்து படிகிறது.

அலுவலகப் பணியில் கொஞ்சம் ஓய்வு கிடைத்ததால் விஷ்ணுபுரம் கௌஸ்துபம் முடிந்து மணிமுடியில் வந்து தங்கிவிட்டேன்.

சுடுகாட்டு சித்தன் மீண்டும் வருவாரா என்ற ஏக்கத்துடன் படிக்கிறேன் . அதற்குள் பிரளயம் வந்து விட்டதே.

எனக்கென்னவோ விஷ்ணுபுரம் இன்னும் கூட எழுதலாம் என்றே தோன்றுகிறது. ஸ்ரீ பாதத்தில் இருந்த வக்கணை கௌஸ்துபத்தில் இல்லை. ஆனால் தர்க்கங்கள் தத்துவ விசாரங்கள் நேரடியாக இருந்தது பிடித்திருந்தது. ஆனால் நீளம் போதவில்லை என்றே தோன்றுகிறது. தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதே மெய் ஞானம் எனும் போது அப்பாடா என்ற நிம்மதி வருகிறது (அதனால் தர்க்கம் வீண் என்று நான் பொருள் கொள்ளவில்லை. அதன் எல்லைகள் நான் புரிந்தது போலவே அமைந்தது மன நிறைவைக் கொடுக்கிறது). Continue reading

கடவுளை நேரில் காணுதல்

கடவுளை நேரில் காணுதல்

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

[“தேசத்தின் முகம்” ஷிண்டே, மஹாராஷ்டிர மாநிலம் நானேகட் அருகில் காட்கர் கிராமம். இந்திய நெடும்பயணத்தின் போது]

அன்புள்ள ஜெமோ,

வணக்கம். எனக்கு வெகு நாட்களாக உள்ள ஒரு சந்தேகம் , சில சமயம் அபத்தமாகவும் உள்ளது, சில சமயம் சுவாரஸ்யமாகவும் உள்ளது. அதாவது இந்து புராணங்களில் திரும்ப திரும்ப வருவது ‘தவம் செய்தான் , கடவுள் தரிசனம் தந்தார்’ என்ற காட்சி. புத்தரின் சரித்திரத்தில் அவர் நிர்வாண நிலை அடைவதற்கு முன்பு 5 பேருடன் சேர்ந்து உக்கிரமான தவத்தில் ஈடுபட்டார் என்றும் , மிகக்குறைந்த உணவினால் ஏறக்குறைய சாகும் நிலைக்கு வந்து பிறகு வேறு பாதைக்கு மாறினார் என்றும் படித்தேன். புராணங்களில் இப்படி இருக்கிறது என்றால் , அதற்கு முன்பே இது போலக் கடவுளை நேரில் கண்ட தொனமங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

இது போன்ற தொனமங்கள் தோன்றுவதற்கு அடிப்படை அதீதக் கற்பனையா,இல்லை உண்மையிலேயே தியானத்தில் / ஒரே சிந்தனையில் பல நாள் இருந்ததினால் ‘கடவுளை’ காண முடிந்த ஒரு பிரம்மையா அல்லது தவத்தை முடிக்க வேண்டிய கட்டாயமா அல்லது ஒருவித மனத்திருப்தியா அல்லது ஒருவிதமான illusion or hallucination or delusion தோன்றி இருக்குமா?

இது பற்றி நீங்கள் எழுதி உள்ளீர்களா என்று தேடினேன் , கிடைக்கவில்லை.இது பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். புராணங்கள் எப்போதோ நடந்தவை என்ற என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கேள்வி இல்லை, மாறாக அப்படி எழுத/கற்பிக்கத் தூண்டிய psychological feature பற்றியே எனது ஆவல்.

பணிவன்புடன்
கோகுல் Continue reading

பதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்

பதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்

[ஜெயமோகன்.இன் ல் இருந்து]

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் பதஞ்சலி யோகம் கட்டுரை படிக்கும் சூழல் ஏற்பட்டது. மிக அருமையான விளக்கம். ஒரு எழுத்தார்வலர் பதஞ்சலியை படிப்பது என்பது அரிதான ஒன்று.பதஞ்சலி யோக சூத்திரம் என்பது மதம், இனம் மற்றும் ஆன்மிகம் கடந்த விஷயம் என நீங்கள் விளக்கியதிலிருந்து உங்கள் புரிதல் மற்றும் அதன் ஆழம் உணர முடிகிறது.

கட்டுரையில் சில முரண்பட்ட தகவல்களை காண முடிந்தது. பாராட்ட விருப்பம் கொண்ட எனக்கு இதை சுட்டிக்காட்டவும் உரிமை உண்டு என நினைக்கிறேன்.

“பகவத் கீதை இயற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதை ஆன்மீக மரபுகள் எடுத்தாள ஆரம்பித்தன” என்று கூறுவது எதன் அடிப்படையில்?

ஐந்தாம் நூற்றாண்டில்தான் என்பதற்கு ஆதாரம் என்ன? Continue reading

ஆன்மீகம் தேவையா?

ஆன்மீகம் தேவையா?

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

அன்பின் ஜெ,

தங்களின் ஆன்மீகம், கடவுள், மதம் பதிவைப் படித்தவுடன் எழுதுகிறேன். என்னைப்போன்ற பலரின் நிலைப்பாட்டை எளிய வரிவடிவில் கண்டேன். மிக்க நன்றி.

இருப்பினும் எனக்கு சில குழப்பங்கள் உள்ளன:

எனக்கு மனத்தில் தோன்றும் எண்ணங்களைக் கோர்வையாக எழுத்தில் கொண்டுவரமுடியவில்லை. இருப்பினும் இக்கேள்விகள் ஒரளவு என் மனநிலையை உணர்த்தும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன். உங்களை ஒரு குரு என்று நினைத்து இவைகளைக் கேட்கவில்லை. ஒரு நல்ல நண்பராக மட்டுமே நினைத்து எழுதுகிறேன்.

1. ஆன்மீகமே தேவைதானா? கடவுள் என்ற கருதுகோள் அல்லது நம்பிக்கை அளிக்கும் நன்மைகளுடன் நின்றுவிட்டால் என்ன?

2. ஆன்மீகத்திற்கு நம்பிக்கை பலமா அல்லது தடையா? சில சமயங்களில் இது மிகப்பெரும் தடையாக எனக்குத் தோன்றுகிறது.

3. ஆன்மீகத் தேடல் (தேடலா?) – இதற்கு ஒரு குரு தேவையா?

4. ஒரு நல்ல குருவை எப்படி அடைவது? அவர் எப்படிப் பட்டவராயிருந்தாலும் அவர் மீது நம்பிக்கை வேண்டுமா? இந்த நம்பிக்கையுடன் நமது தேடலைக் கோர்த்தால் அதனால் ஏற்படக்கூடும் சங்கடங்கள் அல்லது இடையூறுகளை என்ன செய்வது?

5. சாஸ்திர ஞானம் ஆன்மீகத்திற்கு பலமா அல்லது தடையா? ஆதிசங்கரர் ஒருகட்டத்தில் தடையென்றே கூறுகிறார்.

6. ஆன்மீகத்திற்கு முறையான பயிற்சிகள் தேவையா? பலமுறை வெறும் மனப்பாய்ச்சல்கள் மட்டுமே ஏற்படுகிறது.

7. ஆன்மீகத்தின் குறிக்கோள் முழு மன அமைதியா? அப்படியென்றால சமநிலை அவ்வப்பொழுது முயலாமலே ஏற்படுகிறதே. அது தான் குறிக்கோளா? பல சமயங்களில் எவ்வளவு முயற்சித்தும் மனம் சமநிலையுடன் இருக்க மறுக்கிறதே. உண்மையில் இதுவே முதல் கேள்வியாயிருந்திருக்க வேண்டும்.

நன்றியுடன்,

சந்திரசேகர். Continue reading

ஆன்மீகம்,கடவுள், மதம்

ஆன்மீகம்,கடவுள், மதம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கவி,கேரளா]

திரு ஜே அவர்களுக்கு,

வணக்கம். நான் இதுவரையிலும் தங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. இதுதான் முதல் முறை.

நான் இலக்கியத் துறையில் புது வாசகன். இப்பொழுதுதான் சில புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன். தங்களுடய புத்தகம் ’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’, ’வாழ்விலே ஒரு முறை’, ’நிகழ்தல்’, ’உலோகம்’, ’புல்வேளிதேசம்’, ’சிலுவையின் பெயரால்’ மேலும் சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். தற்பொழுது ‘கொற்றவை’ என்ற புதுக்காப்பியம் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்கத் தொடங்கவில்லை. ஏனென்றால் ஒரான் பாமுக் எழுதிய ‘என் பெயர் சிவப்பு’ என்ற நாவலையும் ராபர்ட் கலைச்சோ எழுதிய ‘க’ என்ற நாவலையும் தற்பொழுது படித்து வருகிறேன். இவைகள் முடிந்த பிறகு கொற்றவை படிக்கலாம் என நினைக்கிறேன்.

தங்களுடய வலைத்தளத்தையும் ஓரிரு மாதங்களாகப் படித்து வருகிறேன். தங்களை கோவை புத்தகக்கண்காட்சியில் சந்தித்திருக்கிறேன். கை குலுக்கியிருகிறேன். எனது ஊர் குமரிமாவட்டம். Continue reading

அறிதல்-அறிதலுக்கு அப்பால்

அறிதல்-அறிதலுக்கு அப்பால்

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கவி, கேரளா]

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களுடைய கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்களுடைய பணி தமிழில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. உங்களுடைய ஒரு கருத்துடன் நான் மாறுபாடுகிறேன். இந்திய மதங்களில் தத்துவமே அதி கடைசி எல்லையாக அல்லது தத்துவமே அதனுடைய இறுதி லட்சியமாக முன்வைக்கப்படுகிறதாகத் தாங்கள் எழுதுவது (அல்லது நான் அப்படிப் புரிந்துகொள்கிறேனா என்று தெரியவில்லை) மிகவும் முரணாகத் தெரிகிறது.

இந்திய மதங்களின் சாரமே தத்துவத்தின் எல்லையை எப்படி மீறுவது என்பதே. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதே பிரமம் என்பதே இந்து சிந்தனையின் உச்சம். மகாபாரதத்தில் தருமத்தின் மறுஉருவாகச் சித்தரிக்கபடும் விதுரர் தன்னுடைய கடைசி காலத்தில் வார்த்தைகள் அற்ற மௌனத்தில் மறைந்துவிடுவதாகக் குறிக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணனும் “ரகசியங்களுள் நான் மௌனம்” என்று சொல்லுகிறார். தத்துவம் வார்த்தைகளின் விளையாட்டு, சத்தியத்தைத் தேடுபவர்கள் அந்த விளையாட்டில் ஈடுபடுவதில்லை. ரமணர் அவர்களும் “கற்றதெல்லாம் ஒருநாள் மறக்க வேண்டிவரும்” என்று சொல்லி இருக்கிறார். தத்துவம் மிக முக்கியமானதுதான், ஆனால் கீழை மரபில் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட சூனியத்தில் அல்லது பிரமத்தில் அல்லது பக்தியில் கரைந்து ஒன்றுவதே ஒரே லட்சியம். Continue reading

விசிஷ்டாத்வைதம்

விசிஷ்டாத்வைதம்

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

[ஊட்டி இலக்கிய முகாம். ஒரு மாலை நடைப்பயணத்தில் வாசக நண்பர்களுடன்]

அன்புள்ள ஜெ,

தமிழில் அத்வைதம்- விசிஷ்டாத்வைதம் சம்பந்தமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இங்கே என்னுடைய சிக்கல் என்னவென்றால் தமிழில் அத்வைதம் பற்றி நல்ல நூல்களே அனேகமாக இல்லை. விசிஷ்டாத்வைதம் பற்றி நிறைய நூல்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாமே வைணவ பக்தி நோக்கிலே எழுதப்பட்டுள்ளன. விஷ்ணுவிடம் சரணாகதி அடைவதுதான் விசிஷ்டாத்வைதம் என்ற அளவில்தான் அவை பெரும்பாலும் காணப்படுகின்றன.தத்துவார்த்தமாக தூயநிலையில் நாம் அதை அறியவே முடிவதில்லை. வைணவனாக நின்றுதான் அறியமுடிகிறது. அந்நூல்களில் சங்கரரின் தத்துவங்கள் சாதாரண தளத்தில் நின்று கண்டிக்கப்படுகின்றன. பெரும்பாலான நூல்களில் சங்கரருக்கும் விசிஷ்டாத்வைதத்துக்கும் உறவே இல்லை என்ற அளவில்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் சாதாரண வாசகனாக நான் வாசிக்கும்போது ஒரே தத்துவதரிசனத்தின் இரு பார்வைகள் அவை என்ற எண்ணமே ஏற்படுகிறது. இந்த தத்துவங்களை நான் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு என் மனதில் வரையறைசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் இவற்றை எங்காவது வரையறை செய்து எழுதியிருக்கிறீர்களா?

ஆர். வெள்ளியங்கிரி Continue reading

இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி

இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி

[சொல்புதிது குழுமவிவாதத்தில் இருந்து ஜெயமோகன்.இன் ல் வெளியானது]

அன்புள்ள ஜெ,

நீண்ட நாட்களாய் எனக்குள் இருந்த ஒரு சந்தேகத்தைக் கேட்கிறேன்.நீங்கள் அடிக்கடி இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றிப் பேசுகிறீர்கள்.இது எவ்விதம் சாத்தியம் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.நாரயண குருவும் அரவிந்தரும் கென் வில்பரும் இது பற்றி எழுதியதைப் படித்திருக்கிறேன்.ஆனாலும் இதை நேர்வாழ்வில் பாவிப்பதன் சாத்தியங்கள் பற்றி எனக்குச் சந்தேகம் இருந்துகொண்டேதான் உள்ளது.

இலக்கியமும்,தத்துவமும் இரண்டு எதிர்நிலைகள் அல்லவா..ஒன்று எல்லாவற்றையும் தொலைவிலிருந்து பார்க்கும் பருந்துப் பார்வை எனில் இன்னொன்று எல்லாவற்றையும் மிக நெருங்கி உருப்பெருக்கி மூலம் கூர்ந்து பார்ப்பது அல்லவா.ஒன்று எல்லாவற்றையும் மிகு உணர்ச்சியுடன் அணுகுவது.ஒன்று மிகு தர்க்கத்துடன் அணுகுவது.ஒருவரால் எப்படி இரண்டு பார்வைகளையும் ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளமுடியும்..நான் படித்த வரையில் இலக்கியவாதிகளின் தத்துவமோ தத்துவவாதிகளின் இலக்கியமோ அத்துணை பூரணமாய் இல்லை.[அரவிந்தரின் சாவித்திரி போல.].

என்னால்இந்த இருமைகளைத் தாண்டிப் போக முடிந்ததே இல்லை.ஒன்றை நோக்கி நான் இழுக்கப் படும்போது மற்றது சுமையாக என்னைப் பின்னோக்கி இழுப்பதை உணர்ந்திருக்கிறேன்.நீங்கள் கூட உங்கள் திரிதல் பருவத்தில் ஒரு மடத்தில் ‘எழுதுவதே உன் அறம்”என்று ஒருவர் மடை மாற்றியதைப் பற்றி சொல்லி இருந்தீர்கள்.இப்போது இந்தப் பிளவு உங்களைத் தொந்தரவு செய்வதில்லையா?இரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்யும் என நீங்கள் சொல்வீர்கள் என நினைக்கிறேன்.எதிரெதிர்த் திசைகளில் செல்லும் இரண்டு பாதைகள் எங்கே எவ்விதம் சேர்கின்றன?

போகன்

***

போகன்:

விஷ்ணுபுரத்திலேயே இந்த விவாதம் ஆரம்பம் முதல் இருந்தது. மானுட அறிதல்,மானுட அனுபவம் ஒன்றே. புலன்களும் அறிதல்முறையுமே அதைப் பலவாக்குகின்றன.

நடராஜகுரு ‘அறிவியலைப் பாடலாமா?’ என ஒரு நல்ல கட்டுரை எழுதியிருகிறார்.Can a science be sung? அவரது விஸ்டம் என்ற தொகைநூலில் உள்ள இக்கட்டுரை சொல்புதிதில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது.

[நடராஜகுரு]

நடராஜ குரு இவ்விஷயத்தில் ஹென்றி பெர்க்ஸன், ஏ என் வைட்ஹெட், ரஸல் , விட்கென்ஸ்டைன்ஆகியோரை எடுத்துக்கொண்டு மேலே சிந்தித்துச்செல்கிறார். Continue reading

மனிதாபிமானமும் தத்துவமும்

மனிதாபிமானமும் தத்துவமும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[நண்பர்களுடன். இலக்கிய முகாம், ஊட்டி நாராயண குருகுலம்]

அன்புள்ள ஜெ

மீண்டும் ஒரு கேள்வி. இதெல்லாமே என்னுடைய மன உறுத்தல்கள்தானே ஒழிய உங்களை சீண்டுவதற்காகவோ வெட்டி சர்ச்சைக்காகவோ கேட்கவில்லை. இந்தமாதிரி பிரபஞ்ச உண்மைகளைப்பற்றி பேசுவதனால் மனிதனுக்கு என்ன பயன்? மனித வாழ்க்கையை அது மேம்படுத்துகிறதா என்ன? இந்தப் பேச்சுகள் மூலம் கண்ணெதிரே உள்ள வாழ்க்கையை நாம் நிராகரிக்க நேரும் அல்லவா? இது நம்மை மனிதாபிமானம் இல்லாதவர்களாக ஆக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. உங்கள் கருத்தை கோருகிறேன்.

சிவகுமார் பொன்னம்பலம்

அன்புள்ள சிவக்குமார்,

கார்ல் சகனின் ’புரோக்காவின் மூளை’ [ [Broca’s Brain, Carl Sagan] என்ற நூலை வாசித்துக்கொண்டிருக்கும்போது ஒருவரி மனதில் தடுக்கியது. ’பிரபஞ்சவெளியின் முடிவில்லாத தூசிப்பரப்பில் அதன் ஒரு பருக்கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு தற்காலிக நிகழ்வுதான் உயிர் என்பது. அதில் ஒரு சிறுகூறுதான் மானுடம். மனிதனுக்கு சிறப்புக்கவனம் கொடுக்கும் படைப்புசக்தியோ காக்கும்சக்தியோ ஏதுமில்லை. அது மனிதவாழ்வில் தலையிடுவதும் இல்லை.நவீன அறிவியல் மானுடமைய ஆன்மீகத்தை முழுமையாகவே ரத்து செய்துவிட்டது’ Continue reading

தூய அத்வைதம்

தூய அத்வைதம்

[ஜெயமோகன்.இன் ல் இருந்து]

[நண்பர்களுடன். இலக்கிய முகாம், ஊட்டி நாராயண குருகுலம்]

அன்புள்ள ஜெ,

உங்கள் பல கட்டுரைகளில் தூய அத்வைதம் என்று வருகிறது. அது என்ன? வேதாந்தமா? அல்லது அத்வைதத்திலேயே இரு பிரிவுகள் உள்ளனவா? அத்வைதத்தை சைவம் என்று கொள்ளலாமா? ஏனென்றால் வைணவர்கள் அத்வைதத்தை மறுத்துத்தானே விசிஷ்டாத்வைதம் பேசுகிறார்கள்? தமிழ்நாட்டில் சைவர்களான ஸ்மார்த்த பிராமணர்களே அதிகமும் அத்வைதம் பேசுகிறார்கள். இந்தக்குழப்பம் பலவருடங்களாகவே எனக்கு இருக்கிறது. உங்கள் விளக்கம் உதவும் என நினைக்கிறேன்

கெ.டி.சாமி

அன்புள்ள சாமி அவர்களுக்கு,

நானும் பல சந்தர்ப்பங்களில் நேர்ப்பேச்சில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நேரிட்டிருக்கிறது. அப்பதில்களை இந்த தருணத்தில் தொகுத்துக்கொள்ளலாமென நினைக்கிறேன்.

வேதாந்தம் என்பதன் நீட்சியும் வளர்ச்சியும்தான் அத்வைதம். அத்வைத வேதாந்தம் என்றுதான் சொல்வார்கள். ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் மத்வரின் துவைதம் நிம்பார்க்கரின் துவைதாத்வைதம் போன்றவை எல்லாமே வேதாந்தத்தின் பல்வேறு வளர்ச்சி நிலைகளே. அவற்றை ஒட்டுமொத்தமாக பிற்கால வேதாந்தங்கள் என்று சொல்வதுண்டு.

வேதாந்தம் என்ற சொல்லுக்கு வேதங்களின் இறுதி என்று பொருள். இரு வகைகளில் இச்சொல் பொருள்படுகிறது. பிற்காலத்தில் உருவான பல ஞானநூல்கள் வேதங்களுடன் இணைக்கப்பட்டன. பிராம்மணங்கள், ஆரண்யகங்கள்,உபவேதங்கள் போன்றவை இவ்வாறு இணைக்கப்பட்டவையே. அவ்வாறே பிற்கால ஞானநூல்களான உபநிடதங்களும் வேதங்களுடன் இணைக்கப்பட்டன. ஒவ்வொரு முக்கியமான உபநிடதமும் ஒரு வேதத்துக்கு உரியதாகும். உதாரணமாக சாந்தோக்ய உபநிடதம் சாமவேதத்தின் துணைப்பகுதி [ உபாங்கம்] இவ்வாறு வேதங்களில் இறுதியாக இணைந்தவை ஆதலால் உபநிடதங்களை ஒட்டிய சிந்தனை வேத இறுதி என்ற பொருளில் வேதாந்தம் என அழைக்கப்பட்டது Continue reading