அயன் ரான்ட் கடிதங்கள்
ஜெயமோகன்.இன் ல் இருந்து
அன்புள்ள ஜெ,
அயன் ராண்டின் சிந்தனைகள் அவ்வளவு எளிமையானவை அல்ல. சுயநலத்தை பற்றிய அவரது கருத்துக்கள் மிக தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளன். மனிதநேயத்தையும், தர்ம சிந்தனையையும் அவர் மறுக்கவில்லை / வெறுக்கவில்லை. ஆனால் மனிதனேயம் ‘மட்டுமே’ அறம் என்பதை அவ்ர் ஏற்பதில்லை. உற்பத்தியை பெருக்கும், தொழில் முனைவோரின் அடிப்படை அறங்களே உலகில் மிக மிக முக்கியமான அறம் என்பதே அவர் கோட்பாடு. தொழில் முனைவோர்களின் ஊக்கம், உழைப்பு மற்றும் லாபநோக்கங்களே நம் உலகை மாற்றி, வறுமையை பல மடங்கு குறைத்து, வாழ்க்கை தரத்தை மிக மிக உயர்த்தி உள்ளது. Continue reading








