அயன் ரான்ட் கடிதங்கள்

அயன் ரான்ட் கடிதங்கள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெ,

அயன் ராண்டின் சிந்தனைகள் அவ்வளவு எளிமையானவை அல்ல. சுயநலத்தை பற்றிய அவரது கருத்துக்கள் மிக தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளன். மனிதநேயத்தையும், தர்ம‌ சிந்தனையையும் அவர் மறுக்கவில்லை / வெறுக்கவில்லை. ஆனால் மனிதனேயம் ‘மட்டுமே’ அறம் என்பதை அவ்ர் ஏற்பதில்லை. உற்பத்தியை பெருக்கும், தொழில் முனைவோரின் அடிப்படை அறங்களே உலகில் மிக மிக முக்கியமான அறம் என்பதே அவர் கோட்பாடு. தொழில் முனைவோர்களின் ஊக்கம், உழைப்பு மற்றும் லாபநோக்கங்களே நம் உலகை மாற்றி, வறுமையை பல மடங்கு குறைத்து, வாழ்க்கை தரத்தை மிக மிக உயர்த்தி உள்ளது. Continue reading

அயன் ரான்ட் – 4

அயன் ரான்ட் – 4

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அயன் ராண்ட் கலைக்கலஞ்சியம் என்ற ஒரு நூலை அமெரிக்க நூலகத்தில் பார்த்த நினைவிருக்கிறது. அயன் ராண்டின் கொள்கைகளை பிரச்சாரம்செய்வதற்கான ஆய்வுமையத்தால் வெளியிடப்பட்டது அது. அயன் ராண்ட் பல்வேறு விஷயங்களைப் பற்றி சொன்ன கருத்துக்கள் அதில் அகரவரிசையில் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவரது நோக்கின் மையச்சரடு என்பது அவராலேயே புறவயவாதம் என்று வகுத்துரைக்கப்பட்டது. Continue reading

அயன் ராண்ட் – 3

அயன் ராண்ட் – 3

ஜெயமோகன்.இன் ல் இருந்து

நான் ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் இருந்தபோது பேரா.காசிநாதனைச் சந்தித்தேன். என்னை அவர் ஒருநாள்முழுக்க காரில் வெளியே அழைத்துச்சென்று மெல்பர்ன் நகருக்கு வெளியே உள்ள சிற்றூர்களைக் காட்டினார். இலங்கையில் தத்துவத்தில் ஆசிரியராக பணியாற்றிய காசிநாதன் அவர்கள் லண்டனில் தத்துவம் பயின்றவர். அவர் பயிலும்காலத்தில் தத்துவத்தில் பெரும் பரவசத்தை உருவாக்கிய ஆளுமை விட்கென்ஸ்டீன். காசிநாதன் அவர்கள் விட்கென்ஸ்டீன்னின் தத்துவத்தில் உயராய்வு செய்தார். கடந்த முப்பது வருடங்களாக அவருக்கு விட்கென்ஸ்டீன்தான் ஆய்வுப்பொருளாக இருக்கிறார். நாங்கள் ஒரு கிராமத்துப் புத்தகக் கடைக்குச் சென்றிருந்தோம். காசிநாதன் அங்கேயும் ஒரு விட்கென்ஸ்டீன் பற்றிய நூலைத்தான் வாங்கினார். Continue reading

அயன் ராண்ட் 2 [தொடர்ச்சி]

அயன் ராண்ட் 2 [தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

6850926453_f238c4aae3_o

பத்துவருடம் முன்பு உலகின் உயரமான கட்டுமானமாகக் கருதப்பட்ட டொரொண்டோவின் சி.என்.என் கோபுரத்துக்குச் சென்று வந்தபோது அ.முத்துலிங்கத்திடம் சொன்னேன், அது வானத்தை நோக்கி நீட்டப்பட்ட ஒரு முஷ்டி போல இருக்கிறது, அகங்காரமும் சவாலும் மட்டுமே தெரிகிறது, அது என்னை தொந்தரவு செய்கிறது என. ஆம்,கட்டிடங்களில் இருந்து அகங்காரத்தைப் பிரிக்க முடியாது. தஞ்சை பெரிய கோயில் ராஜராஜ சோழனின் அகங்காரம்.ஆகவேதான் அவனது சொந்த மகனுக்கு அதைவிடப்பெரிய கோயில் ஒன்று தனக்கெனத் தேவைப்பட்டது. Continue reading

அயன் ராண்ட் 2

அயன் ராண்ட் 2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அயன் ராண்ட் பற்றி தமிழில் எதுவும் எழுதப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன். சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகம் அவரைபொருட்படுத்தவில்லை. காரணம் க.நா.சு அவரை இடதுகையால் ஒதுக்கிவிட்டார்.  எங்கோ ஒரு கட்டுரையில் க.நா.சு ‘அரைவேக்காடு எழுத்து’ என்று அயன் ராண்ட் பற்றி சொல்லியிருக்கிறார். நவீன ஐரோப்பிய எழுத்தாளர்களை ஆதர்சமாகக் கொண்ட, அவ்வகையில் எளிய மக்களை அவர்களின் மொழியிலேயே முன்வைக்கும் கலைப்படைப்புகள் உருவாகவேண்டுமென வலியுறுத்திய, க.நா.சுவுக்கு அயன் ராண்ட் கடுப்பைக் கொடுத்ததில் ஆச்சரியமில்லை. Continue reading

அயன் ராண்ட் 1

அயன் ராண்ட் 1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[அயன் ராண்ட்]

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்,நலம்தானே. அயன் ராண்டின் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவரது ·பௌண்டன் ஹெட் [Fountainhead]மற்றும் அட்லஸ் ஷ்ரக்ட் [Atlas shrugged]  பற்றி பேசினீர்களென்றால் நன்றாக இருக்கும்.

அன்புடன் ரவி

பி.கு. நான் உங்களை 2006ல் மதுரை புத்தகச்சந்தையில் சந்தித்தபின் வீட்டுக்கு வந்து பார்த்திருக்கிறேன் Continue reading

கீதா உபநிடதம்

கீதா உபநிடதம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கும்பமேளா பயணத்தின் போது]

கீதையை நான் ‘வாசித்து’ மீண்டும் சில வருடங்கள் கழித்து என் குரு நித்ய சைதன்ய யதியை ஊட்டியில் அவரது குருகுலத்தில் வைத்து சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன். ‘சந்தேக இயந்திரம்’ என்று வேடிக்கையாக அவர் அழைப்பார். இலக்கியம், உளவியல், தத்துவம் என எல்லா தளங்களிலும் அவரிடம் கேள்வி கேட்டபடியே இருந்தேன். அவ்வினாக்களின் ஒரு சிறு தொகுப்பு ஒரு பேட்டி வடிவில் காலச்சுவடு இதழில் வெளியாயிற்று.

அந்நாட்களில் ஒருமுறை மாலைநேர வகுப்பில் நித்யா சுற்றிலும் பார்த்து ‘எங்கே என் சந்தேகத் தாமஸ்?’ என்றார். நான் ஒரு விருந்தினருக்குப் பின் அமர்ந்திருந்தேன். ‘இங்கேவந்து உட்கார்’ என்று தன் அருகே ஓர் இடத்தை நித்யா காட்டினார். அங்கே நான் அமர்ந்ததும் ”அருகே அமர்தல் என்றால் என்ன என்று தெரியுமா?” என்று புன்னகையுடன் என்னிடம் கேட்டார். நான் இல்லை என்று தலையசைத்தேன். நித்யா பதில் கூறாமல் வகுப்பிற்குப் புகுந்தார். Continue reading

வாழ்வின் பொருள்

வாழ்வின் பொருள்

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[பூட்டான்.புலிக்கூடு மடாலயத்தை நோக்கி]

அன்புள்ள ஜெ,

மனித சமூகத்தைப் பற்றிய சர்ச்சைகளிலும், குறிப்பாகப் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவல் பற்றிய விவாதங்களிலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக ‘மானுட வாழ்க்கையின் அர்த்தம் என்ன?’ இருக்கிறது. ஜெ, உண்மையிலேயே மனித வாழ்க்கைக்கென்று “பொருள்” உள்ளதா? பேய்க்காற்று அள்ளிச்செல்லும் சருகுக் குவியலில் முன்னால் பறக்கும் சருகு பின்னால் வரும் குப்பைகளையெல்லாம் தானே வழி நடத்திச் செல்வதாக எண்ணி, தன் பொறுப்பை நினைத்துக் கவலை கொள்வது போல் தோன்றுகிறது. தான் நம்பிய சித்தாந்தத்திற்காக உயிரை விடும் தனிமனிதனாகட்டும், ஏதேதோ காரணங்களுக்காக நடக்கும் போர்களில் கூட்டம்கூட்டமாக செத்து விழும் மக்களாகட்டும், சுனாமி, விபத்து, என்று நினைத்தே பார்க்காத நேரங்களில் மரணத்தைத் தழுவி மறையும் மக்களாகட்டும், தனிப்பட்ட இழப்புக்களுக்காக சுயமாகச் சாவைத் தேடியடைபவர்களாக இருக்கட்டும், மனிதனைப் போலவே பிறந்து, இறந்து இல்லாமலாகும் மற்ற எண்ணற்ற உயிரினங்களை விட எவ்வகையில் வாழ்வில் ‘பொருள்’ இருக்க வேண்டிய அருகதை உடையவனாகிறான்? இப்படி ஒரு கேள்வி கேட்க விதிக்கப்பட்டவன் என்பதாலேயேவா? Continue reading

சேட்டை

சேட்டை

ஜெயமோகன்.இன் ல் இருந்து

புதுமைப்பித்தனின் முடிவடையாத நாவலான சிற்றன்னையில் பேராசிரியர் சுந்தர மூர்த்தி மறுமணம் செய்துகொள்ளும்போது முதல் தாரத்துக் குழந்தை சிற்றன்னையை அக்கா என்று கூப்பிடுகிறது. ‘அக்கா என்று சொல்லக்கூடாது சித்தி என்று சொல்லவேண்டும்’ என்று கண்டிக்கிறார் பேராசிரியர். பின்னர் ஒருநாள் சித்திக்கும் குழந்தை குஞ்சுவுக்கும் பூசல் வருகிறது. பூனையை தூக்கி மேலே போட்டுவிடுவேன் என்று கடுமையாகப் பயமுறுத்துகிறாள் சித்தி. குஞ்சு கடும் துவேஷத்துடன் ”அக்கா” என்று சித்தியைச் சொல்கிறாள் Continue reading

உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக!

உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக!

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கோவை புத்தக விழாவில் வாசக நண்பர்களுடன்]

வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமூகத்துக்கு நாகரீகத்திலும் மேலாதிக்கத்திலும் மேல்நிலை காணப்படுகிறது. பதினேழாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய சமூகம் இன்றுவரை அதற்கு இருக்கும் உயர்பண்பாட்டையும் வணிகமேலாதிக்கத்தையும் அடைந்தது. அதற்கு முன்னர் ரோம சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தை நாம் காண்கிறோம். அதற்கு முன் கிரேக்கர்கள்.

பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இந்தியா பண்பட்டிலும் செல்வத்திலும் ஓங்கியிருந்த ஒரு நாடு என நாம் அறிவோம். உலகமே இந்தியாவை கல்விக்காகவும் வணிகத்துக்காகவும் தேடிவந்த ஒருகாலகட்டம் இருந்தது. இந்தியா என்பது ஒரு பொற்கனவாக உலகமனத்தில் இருந்தது. Continue reading