விஷ்ணுபுரம் by கடலூர் சீனு

விஷ்ணுபுரம்

by கடலூர் சீனு

இனிய J.M,

இந்தப் பதிவினை ஓர் அறிமுக வாசகனின் எளிய பதிலாகவே முன்வைக்கிறேன். கடலின் ஆழமோ, விரிவோ, ஓய்வற்ற அலைநாவுகளின் தழலாட்டமோ, உலாடக்கிய உயிர்ச் சுழலோ இருக்காது, இது கரைமணலில் கிடக்கும் சங்கினில் அலை நிரப்பிய கடல் மட்டுமே.

உதிரத்தால் எரியும் சுடர்

தந்தை தனயன் உறவினை உள்ளார்ந்து இணைக்கும் உணர்வு எது? பிரியமா? துவேஷமா? தன் ஆளுமையை கடக்கும் மகன் மீது தந்தை கொள்ளும் பிரியம் அதன் ஆழத்தில் தன் தோல்வியின் வெறுப்பாக கனன்று கொண்டிருக்கிறதா? பவதத்தரின் விருப்பக் கனவு தானே விஷ்ணுதத்தன். ஞானத் தேட்டத்தில் பவதத்தரால் ஒருபோதும் தொடமுடியாத சிகரமல்லவா விஷ்ணுதத்தன் தொட்டது. பவதத்தர் அனுபவிக்கும் புத்திர சோகம் வரமாகி வந்த ஒன்றே சாபமாக மாறிப் போன துயரம் தானே? வேத ஞான வேள்வியில் அவிசாகிப் போனவன் விஷ்ணுதத்தனுக்காக வாழ்நாளின் இறுதிவரை வேத ஞானத்தை சிதையாக்கி எரிந்து கொண்டிருக்கிறார்

Continue reading

ஞானத்தின் பேரிருப்பு, விஷ்ணுபுரம் – சில குறிப்புகள் by வேணு தயாநிதி

ஞானத்தின் பேரிருப்பு

விஷ்ணுபுரம் – சில குறிப்புகள்

by வேணு தயாநிதி

Venu

2006-ஆம் ஆண்டு மதுரை புத்தகத்திருவிழாவில் தான் ஜெ.யை அறிமுகம் செய்துகொண்டேன். அவரின் சில சிறுகதைகள் சிற்றிதழ்களில் வெளிவந்த விவாதங்கள், கட்டுரைகள், நேர்முகங்கள் மற்றும் கன்னியாகுமரி நாவல் இவை மட்டுமே அப்போது படித்திருந்தேன்.

கன்னியாகுமரி நாவல் பற்றி பாராட்டு சொல்லிவிட்டு அதை ஃபெலினியின் 81/2 படத்துடன்2 ஒப்பிட்டுச் சொல்வதற்காக எண்ணங்களளைத் திரட்டிக்கொண்டிருந்தபோது, ”விஷ்ணுபுரம் படித்தீர்களா?” என்றார். “இல்லை” என்றதும் “அது படிக்க கொஞ்சம் கஷ்டமான புத்தகம் தான்” என்றார். விஷ்ணுபுரம் நூலை அப்போது நான் உண்மையிலேயே வாசித்திருக்கவில்லை என்பதால் என்னிடம் சொல்ல ஏதும் இருக்கவில்லை. ஆனால் அவரே அப்படிச்சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு வேறு விஷயங்களை விவாதித்தோம்.

Continue reading

விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து… -பிரகாஷ் சங்கரன்

விஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து…

-பிரகாஷ் சங்கரன்

மண்ணில் ஓடும் நதிகளெல்லாம் கடலையே அடைகின்றன. மாறுபட்ட சிந்தனைகளும் தரிசனங்களுமெல்லாம் இறுதியில் பிரம்மத்தையே சென்றடைகின்றன. (சாந்தோக்ய உபநிடதம்)

*

முழுமை

உயர்ந்த மலையின் வெவ்வேறு சிகரங்களில் ஊற்றெடுத்த நீர் சிற்றோடைகளாகவும் குறு நதிகளாகவும் பாய்ந்து ஓரிடத்தில் சங்கமித்துப் பெருநதியாகப் பெருகி  மீண்டும் கிளைத்து துணைநதிகளாகவும் வாய்க்கால்களாகவும் ஓடி இறுதியில் கடலை அடைகின்றன.

Continue reading

விஷ்ணுபுரம் எனும் காவியம் – ராதாகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் எனும் காவியம்  

by ராதாகிருஷ்ணன்

இந்நூலின் மீதான என் முதல் வாசிப்பின் பின் நான்  உணர்ந்தது , விஷ்ணுபுர நகரின் கதை வழியாக ஒரு யுகத்தின் மனிதவாழ்வின் உச்ச சாத்தியங்களிருந்து அதன் பேரழிவு வரை  தரிசனமும் ,பல்வேறு மனங்கள் மூலம்  பிரபஞ்சம் தன் நிகழ்வினை நிகழ்த்தும் தரிசனமுமே,  அதுவே என்னை இந்நூல் ஒரு மகத்தான காவியமாக காண வைக்கிறது.

Continue reading

விஷ்ணுபுரம் – ஒரு துவக்க விமரிசனம்.by சுரேஷ்

விஷ்ணுபுரம் – ஒரு துவக்க விமரிசனம்.

 by சுரேஷ்

 சுமார் பத்து வருடங்களுக்குமுன் முதன்முறையாக விஷ்ணுபுரம் வாசித்ததில் விஷ்ணுபுரம் அதன் பிரம்மாண்டத்தாலும் வீச்சாலும் பெரும் திகைப்பை ஏற்படுத்தியது. . அது அள்ளி வழங்கும் தகவல்கள்.-சிற்ப சாஸ்திரம், தத்துவம், விலங்குகளின் அங்க லட்சணங்கள்,  அவற்றுக்குச் சூட்டப்படும் அணிகலன்கள், ஆண்களும் பெண்களுமாய் மனிதர்கள் அணியும் ஆபரணங்கள், கோயிலின் விவரிப்பு, அதில் சொல்லப்படும் ஏராளமான மூர்த்திகள், யட்சர்கள், யட்சிகள் – இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொள்ளவே ஒரு வாசிப்பு சரியாய்ப் போய் விடுகிறது.பின்னர் விஷ்ணுபுரம் பற்றிய விதவிதமான வரலாறுகள் – நாமதேவரின் கோணம்,மகாவைதீகரின் கோணம், நிஷாதர்களின்  கோணம், ஸ்ரீபாதமார்க்கிகளின் கோணம் என்று பற்பலக் கோணங்களில் விஷ்ணுபுரம் விரிகிறது.

Continue reading

விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்

விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்

ஜெயமோகன்

திண்ணை

விஷ்ணுபுரம் குறித்து கோ ராஜாராம் எழுதியிருந்ததில் இரு விஷயங்களுக்கு விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளேன்.

******

விஷ்ணுபுரத்தின் புகழுக்கு காரணம் விவாதங்கள் என்ற கருத்து தகவல் ரீதியாக சரியல்ல.அந்நாவல் வெளிவந்த போது சிற்றிதழ்களில் பரவலாக விமரிசனம் ஏதும் வரவில்லை.வந்த விமரிசனங்கள் அனேகமாக எல்லாமே சிறு சிறு தகவல் பிழைகளை சுட்டிகாட்டி அந்நாவலை எழுதுவதற்கு எனக்குள்ள தகுதியை மறுத்து கூற முற்படுபவை மட்ட்டுமே .அனேகமாக அப்படிச் சொல்லப்பட்ட எந்தப் பிழையும் சரியானது அல்ல.சொல்பவர்களின் அறியாமையையே அவை காட்டின.அவற்றுக்கு தொடர்ந்து விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தேன்.பிறகு விட்டுவிட்டேன் .இந்தியா டுடே இதழிலும் ஹிந்து விலும் மட்டுமே சாதகமான விமரிசனங்கள் வந்தன.காலச்சுவடு இதழ் நடத்திய ஒரு நூல் வெளியீட்டு விழாவில் சர்வ சாதாரணமான இரு நூல்களுடன் இதை இணைத்து பேசப்பட்டது. அந்நூல்கள் மிக மேலானவை என்றும் இது மோசமான நூல் என்றும் அங்கு பொதுவாகக் கருத்து தெரிவிக்கப் பட்டது, விதிவிலக்கு தேவதேவன். அவை பிரசுரிக்கப் பட்டன . மற்றபடி எந்த விவாதமும் ஆராய்ச்சியும் இங்கு சிற்றிதழ்ச் சூழலில் நடக்கவில்லை

Continue reading

விஷ்ணுபுரம்- ஜெயமோகன்

விஷ்ணுபுரம்- ஜெயமோகன்

by பாண்டியன் அன்பழகன்

வாசகன்

தற்கால தீவிர இலக்கிய படைப்பாளி ஜெயமோகனின் மிகப்பெரிய முயற்சியில் உருவான கணமான நாவல் (847 பக்கம்). அடிக்கடி பல இலக்கிய சர்ச்சைகளில் சிக்கி வலைப்பதிவுகளில் அதிகம் பேசப்படும் ஜெயமோகனின் நாவல் எதையும் இதற்கு முன் நான் வாசித்ததில்லை. ஒரு சில சிறுகதைகள், கட்டுரைகளை வாசித்ததுண்டு.
இந்நாவலை வாசிக்க நான் ஒரு மாதம் எடுத்துக்கொண்டேன். இது ஒரு சரித்திர நாவலுக்குறிய பாணியில் அமைந்திருக்கிற நவீன இலக்கியம். சிலர் இதை சரித்திர நாவல் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பழங்காலத்தில் நடந்ததாக  நம்பகத்தன்மையோடு  ஒரு கற்பனை கதையை ஆசிரியர் கூறுகிறார். இதில் வரும் ஊர் கற்பனை, காலம் கற்பனை, கதை மாந்தர்கள் கற்பனை, வரலாற்று பின்னனி நிகழ்வுகளும் கற்பனை…ஆனால் இதில் மையப்படுத்தப்படும் சமய தத்துவ விசாரனைகள் மட்டும் மெய். அதேசமயம் கதை ஓட்டத்தை பாதிக்கும் அளவுக்கு சலிப்பேற்படுத்திய பகுதியும் இதுதான்.

Continue reading

ஒரு பாடினியின் பரவசம்

ஒரு பாடினியின் பரவசம் – ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு பார்வை

by கிருத்திகா

வடிகால்

ஒரு பாடினியாய் இருந்திருக்கலாம்.  இசையும், கலையும், கவிதையும், கதையுமாய் காலம் கடத்தியிருக்கலாம். வியாபாரம், வணிகம், அயல்நாடு, உள்நாடு தொழில்விருத்தி இது ஏதுமற்று வாழ்வின் உன்னதங்களை சுகித்திருந்திருக்கலாம், ஊர் ஊராய், குழுக்களாய் பயணித்திருந்திருக்கலாம்,

இப்படி எத்தனையோ “லாம்”களை என்னுள் எப்போதும் விழித்திருக்கச்செய்திருக்கும் உணர்வுகள், ஒரு சமயம் கவிஞர் விக்ரமாதித்யனை எஸ்.ரா. தன் எழுத்துக்களில் பெருநகரப் பாணன் என்று விளித்திருந்த போது அந்த வார்த்தையின் வசீகரம் என்னுள் அவ்வுணர்வுகளை மீண்டுமொருமுறை கிளர்ந்தெழுந்து ஒர் பேயாட்டம் போடச்செய்தது.

இத்தகைய பாணர்களின் வாயிலாக கதை சொல்லல் தொடங்கப்படுகிறது பின் என்றும் எத்தனையோ கதைசொல்லிகளின் வாயிலாக இன்றும் விஷ்ணுபுரத்துக்கதைகள் சொல்லப்பட்டுகொண்டேயிருக்கிறது என்று அந்தப்புத்தகத்தின் முடிவில் நம்மால் தீர்க்கமாய் நம்பமுடிகிறது . இந்த கதைசொல்லிகளின் வரிசையில் நானும் ஒரு பாடினியாய் இங்குஜெயமோகனின் விஷ்ணுபுரம் பற்றி …..

Continue reading

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம்

from “ஒன்றுமில்லை

அந்த புத்தகம் அதன் பல பக்கங்களை புரட்டி கொண்டு இருந்தது. சில பக்கங்கள் மிக வேகமாகவும், சில பக்கங்கள் பல நாட்கள் புரட்டபடாமலும் இருந்தன. புத்தகமே அதற்கு காரணம். புத்தகத்தின் இயக்கம் புலப்பட நாள் பிடித்ததால் பேருந்தின் சன்னல் வழி பார்வை மட்டுமே கொண்டு வாசிக்க முடிந்தது.

*************
அந்த நகரத்தில் மதம் கொண்ட யானைக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு கொண்டிருந்தது. யானை ஒரே குழப்பத்தில் இருந்தது. யானையிலும் குலம் எதும் இருந்திருந்தால் தான் பிழைத்திருக்க வாய்ப்பிருக்குமா எனற ஐயம் கொண்டது. உயர் குல தண்டனைகள் மயிலிறகால் வருடுவதாகவும், தாழ்த்தப்பட்ட குல தண்டனைகள் கழுத்தறுப்பதாகவும் இருந்ததால் அது உயர் குலமாக மாறமுடியுமா என யோசிக்கலாயிற்று.

**************

அஜிதனுக்கும் பவதத்தருக்கும் இடையேயான ஞானசபை போராட்டத்தின் ஊடே வெவ்வேறு மதங்களான மீசாம்சம், சைவம், சமணமும் மற்றும் பௌத்த உட்பிரிவுகளும் தர்க்கமாய் வந்தன. விஷ்ணுபுர கோவிலில் கர்ப்பகிரகத்தின் கதவுகளால் அடைக்கப்பட்டவன் கூச்சல் தாளாது காதுகளை மூடிக் கொள்ள முடிவு செய்தான். செந்தலை பட்டனால் சிறையுண்டவன் இன்னும் கோபமாகதான் இருந்தான்.

Continue reading

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் -1

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் -1

By Dr. Suneel Krishnan

எதுவுமே தப்பில்ல

மானுடன் ஞானத்தை நோக்கி பயணம் செய்யும் தருணம் எது ? மானுட வாழ்வின் பொருளென்ன ? பிறப்பதும் மரிப்பதும் ஏன் ? உறவுகளின் பொருளென்ன ? துக்கமும் சுகமும் ஏன் ? காலம் என்பது என்ன ?  புலன்களுக்கு புலப்படாத ஒரு மிக பெரிய பகடை ஆட்டத்தின் காய்களா? வீழ்வதும் ,பிழைத்து இருப்பதும் மட்டுமே சாத்தியமான கோடானகோடி உயிரின் அர்த்தமற்ற சாகரத்தின் ஒரு சிறு துளி மட்டும் தானோ ?

எதன் மீது நிற்கிறோமோ ,எதை சாஸ்வதம் என்கிறோமோ அவை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டால் ,பின்பு எதன் மீது நிற்பது ,எதை பற்றி கடப்பது ? அப்படி ஏதேனும் ஒன்றை பற்றி தான் ஆகவேண்டுமா ? அக இருட்டில் தொலைந்து விடுவோம் , மனிதன் தனியன் .அவனுக்கு ஆக பெரிய பயம் அவனது மனம் தான் ,ஆம் அதை அவன் நெருங்குவதில்லை ,பாவனைகளால் விளக்கி அதை தர்க்க சட்டகத்தில் அடைத்து சொற்களால் பூசி ஒரு மாய மாளிகையை எழுப்புகிறான் .மனதை சந்திக்கும் திராணி மனிதனுக்கு இருப்பதில்லை ,உண்மைக்காக தேடல்களும் ,விவாதங்களும் ,தரிசனங்களும் ,இலக்கியங்களும் ,காப்பியங்களும் ,காவியங்களும் இன்னும் அனைத்தும்- சொற்களின் பிரவாகங்கள் நிரப்பி தன்னை தானே நம்ப வைக்கும் முயற்சி தானோ ? வாழ்க்கைக்கு பொருள் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் உரக்க சொல்வது தன் மனதை நம்ப வைக்கும் வெற்று உத்தியோ ?