கீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 2

கீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[திருச்செந்தூர் கோயில் ஓவியம்]

இரண்டாவதாக இப்புனைவில் நாம் கவனிக்கவேண்டியது துரியோதனனை. ‘களத்தில் என்ன நடக்கிறது?’ என்ற வினாவுக்கு பதிலாக சஞ்சயன் முதலில் துரியோதனனைப் பற்றி கூறியது இயல்பே. காரணம் கேட்டது துரியோதனனின் தந்தை. அதைவிட முக்கியமானது இந்த சுருக்கமான விவரணையில் வெளியாகும் துரியோதனனின் ஆளுமை.

தன் ஆசிரியரை நெருங்கி பேச ஆரம்பிக்கும் துரியோதனன் முதலில் காண்பது எதிரிப்படையைத்தான். அங்குள்ள வீரர்களை அவன் பட்டியலிடுகிறான். அவர்கள் வலிமையை எடுத்துரைத்தபின் தன் தரப்புக்கு வருகிறான். மிகச் சுருக்கமாக அதைக் கூறிவிட்டு பாண்டவப்படை போதுமானது, நமது படை போதுமானதல்ல என்று தன் அச்சத்தைக் குறிப்பிடுகிறான்.

தெளிவாகவே அர்ஜுனனுக்கு நேர்மாறான ஒரு குணாதிசயத்தைக் காட்டும் பொருட்டு இக்காட்சி அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கிட்டத்தட்ட அர்ஜுனன் கண்ட அதே காட்சிதான் இதுவும். ஆனால் முற்றிலும் வேறுவித மன ஓட்டங்களினால் ஆனதாக உள்ளது துரியோதனனின் அகம். நமது படை எதிரிப்படை என்று பிரித்து பார்த்து ஒப்பிட்டு நோக்குதல், போரின் முடிவு குறித்த அச்சம். அந்தப் போர்க்களத்தில் அப்போது ஆயுதங்களுடன் வந்து நின்ற ஒவ்வொருவரும் அதே மனநிலையில்தான் இருந்திருப்பார்கள். அதுவே இயல்பு. அம்மனநிலைக்கு அப்பால் சென்று ஓர் அபூர்வமான விவேகத்தை அடைந்தவன், அதன் மூலம் ஆழமான உள நெருக்கடிக்கு ஆளானவன், அர்ஜுனன் ஒருவனே. ஆகவேதான் அவனுக்கு கீதை கூறப்பட்டது. Continue reading

கீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 1

கீதை: மகத்தான மனத் தடுமாற்றம் – 1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[திருச்செந்தூர் கோயில் ஓவியம்]

1. ‘அறநிலமாம் குருநிலத்தில்
போருக்கு முனைந்து
வந்துள்ள
என்னவரும் பாண்டவரும்
என்ன செய்கின்றனர் சஞ்சயா?’

2.என்று கேட்ட திருதராஷ்ட்ரனிடம்
சஞ்சயன் சொன்னான்,
‘அதோ மன்னனாகிய துரியோதனன்
அணிவகுத்து நிற்கும்
பாண்டவப் படையைக் கண்டு
துரோணரை நெருங்கி
பேசலுற்றான்.’
Continue reading

கலாச்சார இந்து

கலாச்சார இந்து

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[ஒரான் பாமுக்]

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது  தர்க்க புத்திதான்.

ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் உண்டு. கும்பிடும் வேளை ஒரு மன அமைதி கிடைத்தாலும், நீ பெறுவது ஒரு போலிப் பாதுகாப்பு உணர்வுதான் என்று எனது தர்க்க மனது விழித்துக்கொள்ளும்.எனது உறவினர்களின், தெரிந்தவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாக அவதானித்த வரை அவர்கள் மலைபோல் சந்தித்த துன்பங்களை எல்லாம் கடவுள் நம்பிக்கை கொண்டு இலகுவாக கடந்துவந்திருப்பதனை அறிவதனால் கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற இரு முனைவுகளுக்கு அப்பால் இறை நம்பிக்கை தனிமனிதனைப் பொறுத்தவரை பயனுடையது என்றே எண்ணுகின்றேன். Continue reading

பரிணாமவாதமும் இந்திய மதங்களும்

பரிணாமவாதமும் இந்திய மதங்களும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[வனம் நோக்கி ஈரோடு அருகில்]

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

உங்களுக்கு எனது முதல் கடிதம் இது. தவறுகள் இருப்பின் தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். நான் கடந்த 20 வருடங்களாக Software  துறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமீப காலம் வரை ஆங்கில fiction , non – fiction எழுத்துக்கள் வாசித்து வந்தேன் (Carl  Sagan , Stephen Hawkins , Malcolm Gladwell , Richard Feynman , James  Rollins  ஆகியோர் என் குறைந்த வாசிப்பில், என்னை கவர்ந்த எழுத்தளர்கள்). 2008 வரை தமிழ் வாசிப்பு மிக குறைவு. 80s  இல் சுஜாதா, வாசித்ததோடு அவ்வப்போது விகடனில் எஸ் ராமகிருஷ்ணன் , நாஞ்சில் நாடன் வாசிப்பதுண்டு. அலுவலக நண்பர் ஒருவர் உயிர்மையில் தங்களது ஊமைச்செந்நாய் வாசிக்க அறிமுகப்படுத்தினார். என்னை மிகவும் பாதித்த கதைகளுள் ஒன்று அது. பல முறை வாசித்து விட்டேன்.

நான் தங்களது ப்ளாக் கடந்த மூன்று வருடங்களாக படித்து வருகிறேன்.  தங்களது சிறுகதை தொகுப்பு (முழு தொகுப்பு) , மண் சிறுகதை தொகுப்பு, விஷ்ணுபுரம் , இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள், இரவு, உலோகம் ஆகிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். தங்கள் எழுத்துக்கள் எப்போதும் என் மனதில் ஒரு ஆழமான பாதிப்பை , தேடலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. தங்கள் அனைத்துப் புத்தகங்களையும் வாங்கி வைத்துவிட்டேன் , படிக்கத்தான் நேரம் ஒதுக்க வேண்டும்:-) Continue reading

இந்துமதமும் தரப்படுத்தலும்

இந்துமதமும் தரப்படுத்தலும்

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கான பாராட்டுவிழா நிகழ்ச்சியின் போது நண்பர்களுடன். சென்னை]

ஆங்கிலம் என்ற திமிங்கலம் மற்ற உலகமொழிகளை விழுங்கிவருவதுபோல, பெருமதங்கள் உலகத்தின் அனைத்து பழங்குடிமதங்களையும் ஞானமார்க்கங்களையும் விழுங்கிவிட்டால்? இது இயற்கையான நிகழ்வாகுமா? விழுங்கப்பட்ட மதங்களின் ஆன்மீக தத்துவ ஞான தரிசனங்கள் என்னாவது? Continue reading

உருவரு

உருவரு

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[சிக்கிம். வட கிழக்கு  பயணத்தின் போது]

அன்புக்குரிய எழுத்தாளருக்கு,

வணக்கம் அண்ணா.கருத்து முரண்பாடுகள் சில இருந்தபோதும் உங்களை துபாயில் சந்தித்து உரையாடியது மிகுந்த மனநிறைவளிப்பதாக உள்ளது.இன்னும் பலமணிநேரங்கள்,பலநாள்கள் உரையாடவேண்டிய அளவிற்கு விடயங்கள் இருப்பினும் கிடைத்தவரைத் திருப்தியே.

செமிட்டிக் மதங்களுக்கும் இந்துமதத்திற்கும் இடையிலான முக்கிய முரண்பாடுகளில் ஒன்றாக பொதுவெளியில் வைக்கப்படும் கருத்து உருவ வழிபாடு பற்றியது.ஆயினும் செமிட்டிக் மதங்களின் மூலநூல்களில் நான் வாசித்தவரை இறைவனுக்கு உருவத்தை கூறுகின்ற வசனங்கள் காணப்படுகின்றன.அம்மதங்களின் கருத்தை சுருக்கமாக கூறுவதானால் இறைவன் தனது அரசில்(பௌதிகமாக) இருக்கிறார்.அவருக்குப்பதிலாக விக்கிரகங்களை வழிபடுவது குற்றமாகும். Continue reading

உருவம்

உருவம்

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[ஹூக்ளி நதி. வடகிழக்கு பயணத்தின் போது ]

அன்புள்ள ஜெ,

நான் எட்டு வருடங்களுக்கு முன்பு என் தந்தையாரிடம் இருந்து சிவதீக்கை பெற்றுக்கொண்டேன். ஆனால் இப்போதெல்லாம் என்னால் மனம் ஒன்றி பூஜைசெய்ய முடியவில்லை. என் மனம் உருவ வழிபாட்டை ஏற்கவில்லை. என்னுடன் நான் கொண்டுபோகும் சிவலிங்கங்களை புனிதமானவையாக என்னால் நினைக்க முடிவதில்லை. ஆகவே பூஜைகள் சலிப்பை தருகின்றன. வீட்டில் இருக்கும்போது மட்டும் பூஜைசெய்வேன். மற்ற நேரங்களில் செய்வதில்லை. கடவுளுக்கு உருவம் உண்டா என்ன? இந்தமாதிரி ஒரு உருவத்தில் கடவுளை கற்பித்துக்கொண்டு வழிபடுவதனால் என்ன பயன்? இவையெல்லாம் பண்படாத காட்டுமிராண்டிக்கால வழக்கங்கள் அல்லவா? இந்து மதத்தில் உள்ள இந்த உருவ வழிபாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? எனக்கு இந்தமாதிரி உருவங்களை கும்பிடுபவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்ற எண்ணம் சமீபகாலமாக உருவாகி வருகிறது, ஆகவேதான் இந்த கடிதத்தை எழுதினேன்.

சிவக்குமார் பொன்னம்பலம் Continue reading

ஈஸோவாஸ்யம்- முன்னுரை

ஈஸோவாஸ்யம்- முன்னுரை

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

சமீபத்தில் என் நண்பரான ஜடாயு ஈசாவாஸ்ய உபநிடதத்தைத் தமிழாக்கம் செய்து தமிழ்ஹிந்து என்ற தளத்திலே வெளியிட்டார். அதற்கு வந்த எதிர்வினைகளில் ஒன்றில் இப்படி ஒரு கேள்வி இருந்தது.

’உபநிடதங்கள் பிரம்மா வித்யை என்று அழைக்கப்பட்டன. பிரம்மத்தைத் தேடுபவர்களே கூட முறையாக ஆன்மீகக் கல்வியில் தேர்ச்சி பெற்று, அதிகாரம் பெற்றுத்தான் அணுக முடிந்தது என்று தெரிகிறது. எப்படியாயினும் உபநிடதங்கள் – வேதத்தின் கருத்து முடிவாக, இறுதி உண்மையாகக் கருதப்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை.

…அதனை நாடி வருகிற ஒருவனை இவ்வாறு ’பிறர் பொருளை விரும்பற்க’ (வடமொழியில் ’மா கஸ்யஸ்வித் தனம்’) என்று கூறுவது ஏன்? பிறர் பொருளுக்கு ஆசைப் படுபவன் உலகியலைத் துறந்து பிரம்மத்தைத் தேடுவானா? பிரம்மத்தை அடைவதே குறிக்கோளாக கொண்டு வருபவனிடம் திருடாதே என்று சொல்வதே கூட ஒரு இன்சல்ட் இல்லையா? இதற்கு இன்னும் வேறு அர்த்தம் ஏதும் இருக்கிறதா?’

[குரு நித்ய சைதன்ய யதி] Continue reading

விஷ்ணுபுரமும் பிராமணர்களும்

விஷ்ணுபுரமும் பிராமணர்களும்

கேள்வி பதில் ஜெயமோகன்.இன் இல் இருந்து

அன்புள்ள ஜெயமோகன்,

நன்றி. இப்போது படித்து முடித்து ஒரு முழுமை மனதில் வந்து படிகிறது.

அலுவலகப் பணியில் கொஞ்சம் ஓய்வு கிடைத்ததால் விஷ்ணுபுரம் கௌஸ்துபம் முடிந்து மணிமுடியில் வந்து தங்கிவிட்டேன்.

சுடுகாட்டு சித்தன் மீண்டும் வருவாரா என்ற ஏக்கத்துடன் படிக்கிறேன் . அதற்குள் பிரளயம் வந்து விட்டதே.

எனக்கென்னவோ விஷ்ணுபுரம் இன்னும் கூட எழுதலாம் என்றே தோன்றுகிறது. ஸ்ரீ பாதத்தில் இருந்த வக்கணை கௌஸ்துபத்தில் இல்லை. ஆனால் தர்க்கங்கள் தத்துவ விசாரங்கள் நேரடியாக இருந்தது பிடித்திருந்தது. ஆனால் நீளம் போதவில்லை என்றே தோன்றுகிறது. தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதே மெய் ஞானம் எனும் போது அப்பாடா என்ற நிம்மதி வருகிறது (அதனால் தர்க்கம் வீண் என்று நான் பொருள் கொள்ளவில்லை. அதன் எல்லைகள் நான் புரிந்தது போலவே அமைந்தது மன நிறைவைக் கொடுக்கிறது). Continue reading

நாராயணகுருவின் தத்துவம்

நாராயணகுருவின் தத்துவம்

ஜெயமோகன்.இன்  ல் இருந்து தொகுத்தது

[Copyright:Thinnai.com ]

[நாராயணகுரு]

தமிழ்ச் சூழலில் நாராயணகுருவின் செய்தியை புரிந்துகொள்ள சிரமங்கள் உள்ளன. இங்கே ஓர் எதிர்மறையான சிந்தனைப்போக்கு மிக வலுவாக வேரூன்றியுள்ளது. மரபையே நிராகரிக்கும் போக்காக அது மாறியுள்ளது . மேலும் மிக எளிமைப்படுத்தபட்ட ஒரு இரட்டைஎதிர்மை [binary opposition] கற்பிதம் செய்யப்பட்டுள்ளது . ஆரிய X திராவிட வாதம் , உயர் சாதி X கீழ்சாதி வாதம் , ஆதிக்கப்போக்கு X அடிமைப்படுத்தப்பட்ட போக்கு என்றெல்லாம் அப்பிரிவினை தொடர்ந்து செய்யப்படுகிறது . அந்த இரட்டைஎதிர்மைத்தன்மை தமிழ்ப்பண்பாட்டாய்வில் வெள்ளையர்களால் [உதாரணமாக கால்டுவெல்] அக்கால மேற்கத்திய சிந்தனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது . அது அன்றைய மேற்கத்திய சிந்தனையின் சாரமாக காணப்பட்டமையால் அவ்வாறு உருவாக்கப்பட்டமை இயல்பானதேயாகும் . அப்போக்கு மார்க்ஸியத்துடனும் ஒத்துப்போனதனால் அது வலுவாக நம் சிந்தனையில் வேரூன்றி அதுவே ஒரே சிந்தனைமுறை என கருதப் படுகிறது .நாராயணகுருவை புரிந்துகொள்ள மிகுந்த தடையாக அமைவது அதுவே. உண்மையில் நாராயண குருவின் பிரதான சீடர்கள் சிலர் கூட அவ்வடிப்படையில் நாராயணகுருவை மறுத்தனர் . முக்கியமாக சகோதரன் அய்யப்பன். Continue reading