குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து – 2 by ஜாஜா

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து – 2
by
ஜாஜா (எ) ராஜகோபாலன் ஜானகிராமன்

இக்கட்டுரையின் முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்

குரு நிலை என்பது கை விளக்கோடு கூடிய ஒருவனின் பயணமே. சீடன் கைவிளக்கற்று, குருவின் கால் தடம் பற்றித் தொடர்கிறான். பேரன்புடன் குரு தன் கைவிளக்கின் ஒளியால் பாதையினை அவனுக்கும் காட்டியபடியே தொடர்கிறார். ஞானத்தின் பாதையில் குருவும் சக பயணிதானோ?

கை விளக்கின் ஒளி எல்லை, சிறிது தொலைவை மட்டுமே புலனாக்குவது. எல்லை எது வரை என்பதை கைவிளக்கு காட்டுவதில்லை. இந்திர பதவியின் முயற்சிக்கு இடையே ஊர்வசி, மேனகை, ரம்பை உண்டெனில் ஞானத்தின் பாதையில் குரு பீடம். கை விளக்கின் ஒளி எல்லையை , அறிதலின் எல்லையாக்கி பீடம் ஏறி நிற்கும் குருட்டு குருமார்கள்.

தழலாய் மாறத் துடித்து நிற்கும் கற்பூரக் கட்டி போன்ற சிறுவனை , அவனது அறிவின் வீச்சினைக் கண்டு அசூயை கொள்ளும் குரு பீடம். அவனது தகுதியை , படிப்பினை, அறிவினை, வயதினை நிந்தித்துப் பேசும் ஜம்பம். தேடலின் தாகம் கொண்டு நிற்போரை கானல் நீர் காட்டி விரட்டி விடும் குரூரம். தன் அகந்தையைத் தடவி நிற்பவனைத் தழுவி ஏற்று அவனையும் குருடனாக்கப் போகும் நிர்மூடம். அறிந்ததாய் எண்ணி, அடைந்ததாய்க் காட்டி மரணத்தின் முன் கெஞ்சிக் கதறப் போகும் அவல நிலையில் நிற்கும் விஸ்வகரும் குருவாகவே அறியப்படுகிறார். அவரால் குரு பீடத்தை மட்டுமே உருவாக்க இயலும். குரு, சிஷ்ய உறவு அவருக்கு சாத்தியமே இல்லை.

விளக்கின் ஒளியில் பாதை காண மறந்து, திரியின் ஒளியில் பார்வையை லயிக்க விட்டு வெளிச்சக் குருடுகளாய் திரியும் குரு பீடங்கள் முமுட்சுவாய் நிற்பவனுக்கு நிழல் தருமா என்ன? திரும்பி நடந்து போகும் சிறுவன் சுடுகாட்டுச் சித்தனால் ஆட்கொள்ளப்படுகிறான். சீடனின் தகுதி குருவினை இட்டு வருமோ ? சீடன் சரியாய் இருக்கையில் குருவும் தகுதியானவராகவே வந்து அமைவது தற்செயலா என்ன? Continue reading

10. தரிசனங்களின் பின்னணி – பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் பின்னணி

பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம்

பெளத்த, சமண மதங்களின் வெகுஜனத்தன்மைக்கு எதிரான பேரியக்கமாக பக்தி காலகட்டம் உருவாயிற்று என்றோம். பெளத்த சமண மதங்களின் தத்துவார்த்தமான அறைகூவலுக்கு எதிராக உருவான வைதிகத் தத்துவ தரிசனங்கள்தான் பிற்கால வேதாந்தங்கள். இவை அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்ட்வைதம் என்று மூன்று தனிப்போக்குகளாக உள்ளன.

வேதாந்தம் என்ற சொல்லுக்கு வேதத்தின் இறுதி என்று பொருள். வேதங்களின் விரிவாக்கமான உபநிஷதங்களே உண்மையில் வேதாந்தங்கள். அவை முற்காலக் கட்ட வேதங்கங்கள் எனலாம். இவை தருக்கப்பூர்வமானவை. வேதாந்தம் என்ற சொல் தருக்கம் என்ற பொருளில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப்படுகிறது.

பெளத்த, சமண மதங்கள் தருக்க முறையை பிரம்மாண்டமாக வளர்த்தெடுத்தன. குறிப்பாக பெளத்த மெய்ஞானம் நியாய மரபின் தருக்க முறைகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. நாகார்ச்சுனர், அசங்கர், வசுபந்து, திக்நாகர், தர்ம கீர்த்தி முதலிய முக்கியமான பெளத்த ஞானிகள் அனைவருமே நியாய இயலுக்கு உரை எழுதியுள்ளனர். Continue reading

9.தரிசனங்களின் பின்னணி – பக்தி காலகட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் பின்னணி

பக்தி காலகட்டம்

அவைதிக மதங்களான பெளத்தமும் சமணமும் இந்தியா முழுக்கப் பரவின. அவற்றை எதிர்த்து வைதிக மதங்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டன. அதன் விளைவாக அவை தங்கள் அமைப்பை மாற்றி அமைத்துக்கொண்டன. இதன் விளைவாக உருவானதே பக்தி காலகட்டமாகும்.

பெளத்த, சமண மதங்களுக்கு முன்பு வைதிக மதம் என்பது வேள்வி முதலிய சடங்குகளிலானதாக இருந்தது. அது மன்னர்கள், வணிகர்கள் பிராமணர்கள் சம்பத்தப்பட்டதாக இருந்தது. அதற்கும் கீழே உள்ள மக்கள் தங்கள் குல மரபுக்கு உரிய தெய்வங்களைத் தங்கள் வழக்கப்படி வணங்கினர். அவர்களுக்கும் வைதிக மரபுக்கும் உறவே இருக்கவில்லை.

பெளத்த, சமண மதங்கள் முதலில் ஏழை, எளிய மக்கலுக்கு இடையே ஊடுருவிச் சென்றன. புத்த பிச்சுக்களும் சமண முனிகளும் ஊருக்குள் தங்கக்கூடாது என்ற விதியே இருந்தது. ஆகவே அவர்கள் விலக்கபட்ட எளிய மக்களை அணுகினார்கள். அவர்கள் பள்ளிகள் அமைத்து கல்வி கற்பித்தனர். Continue reading

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து by ஜாஜா

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து
by
ஜாஜா (எ) ராஜகோபாலன் ஜானகிராமன்

நண்பர்களே ! பணி நிமித்தம் வாசிக்க நேர்ந்த “இந்து வாரிசுரிமைச் சட்டம்” வியப்பான ஒன்று. ஒரு இந்துக் குடும்பத்தின் உறவு முறைகள் எந்தெந்த அடுக்குகளில் அமைகின்றன, அவற்றுள் முதன்மை பெறும் வரிசை எது, அடுத்த வரிசைக்கிரமம் என்பனவற்றை ஒரு நாவல் போல விவரித்துச் செல்லும் சட்டம் அது. எண்ணிறந்த உறவு முறைகளையும், அவற்றுக்கிடையே பாவியிருக்கும் தாய்வழி, தந்தைவழி குறுக்குப் பின்னல்களையும், அவற்றின் சொத்துரிமைக்கான அடுக்கு முறைகளையும் காணும்போது இவ்வளவு உறவுமுறைகளா என்று தோன்றும். ஆனால் , ரத்த உறவாலும், திருமண பந்தத்தாலும் அல்லாது இவ்வகைப்பாட்டைத் தாண்டிய ஒரு உறவு முறை நமது மரபில் தோன்றி இன்று வரை இடையறாது நீடிக்கிறது.

கால ஓட்டத்தின் வேக வாகினியை மீறி துளித் துளியாய் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மானுட ஞானத்தினை பின்வரும் தலைமுறைக்கென தருவதில் இந்த உறவுமுறையின் பங்கு மகத்தானது. எந்த பந்தத்தின் அடிப்படையிலுமல்லாது , தேடலின் துணை கொண்டு மட்டுமே தேர்வு செய்யப்படும் உறவு இது. புல்லின் வேரென இந்தத் தேசம் முழுதும் பரவி, காலந்தோறும் உருவாகி வரும் குரு சிஷ்ய உறவினாலேயே இன்றைய நமது ஞானம் சாத்தியமாகிறது.

வேறெந்த உறவுமுறையையும் வரையறை செய்து, வகைப்படுத்திவிட முடியும். ஆனால், இந்த குரு சிஷ்ய உறவு எந்த இலக்கணத்திற்கும், எந்த வரையறைக்கும் நாலு விரற்கடை தள்ளியேதான் நிற்கும்.எப்படி உருவாகிறது இந்த உறவு என்பதை ஆண்டவனும் அறிய இயலாது போலும். “வா” என்ற குருவின் ஒற்றைச் சொல்லுக்கு, மறு பேச்சின்றி, திரும்பிப் பாராது எழுந்து அவர் பின்னே செல்லும் சீடனை இயக்குவது எது? மாறாக் காதலுடன் குருவின் பாதத்தை பணிந்து நிற்கும் சீடன் மனம் அடைவதுதான் என்ன? தரிசனம் பெற்ற ஒரு நொடியின் பரவசத்தை, தனக்கேற்ற சீடனைக் கண்டபோதும் அடையும் குருவின் உவகைதான் எப்படிப்பட்டது? மரபின் தொடர்ச்சியாய் நீளும் இவ்வுறவிலிருந்து மானுட ஞானம் பெறும் விழுமியம்தான் எது? Continue reading

8.தரிசனங்களின் பின்னணி – தரிசன, அவைதீக மதங்களின் காலகட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் பின்னணி

தரிசன மற்றும் அவைதீக மதங்களின் காலகட்டம்

தரிசன காலகட்டம்

உபநிஷத காலகட்டத்தில் தருக்கப் பிரக்ஞை வலுவடைந்தது. ஞான தரிசனங்கள் விரிவாக விவாதிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் எற்பட்டது. இதன் விளைவே தரிசனங்களின் காலகட்டமாகும்.

அவைதீக மதங்களின் காலகட்டம்

இந்திய ஞான மரபினை வைதிகம், அவைதிகம் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துவிடலாம். வேதங்கள்ளை மூலநூல்களாக கருதும் மரபு வைதிகம். அப்படிக் கருதாமல் வேதங்களை மறுக்கும் மரபு அவைதிகம்.

இந்த இருபாற் பிரிவினையை நிகழ்த்துவதில் பல சிக்கல்கள் உள்ளன என்பதை இங்கு குறிப்பிட்டு பேசவேண்டும். வேதங்கள் ஒற்றைப்படையான ஒரு தரப்பை முன் வைப்பவை அல்ல. பிற்காலத்தில் வளர்ந்து வந்த எல்லா ஞான மரபுகளின் மூல விதைகளும் அவற்றுக்குள் உள்ளன. உதாரணமாக சார்வாக மரபு வேதங்களை மறுப்பது; புரோகித மரபுக்குப் பரம எதிரி; முழுமையான உலகியல் தன்மை உடையது. இம்மரபின் தொடக்கப்புள்ளியும் வேதங்களில் தான் உள்ளது. வேதரிஷிகளான ‘பிரகஸ்பதி’, ’அஜித கேசம்பளன்’ முதலியோர்தான் இம்மரபின் ஆதிகுருநாதர்கள்.

ஆகவே இந்தியாவில் உள்ள எந்த ஒரு ஞானமரபினையும் முற்றிலும் வேதம் சாராதது என்று கூறிவிட முடியாது. அப்படி என்றால் வைதிகம், அவைதிகம் என்ற பிரிவினை எதனடிபடையில் நடத்தப்படுகிறது.? Continue reading

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்: கடிதங்கள் – 4

தேடல்,விஷ்ணுபுரம்–ஒரு கடிதம்

ஜெயமோகன்.இன் இல் இருந்து

[விஷ்ணுபுரம் வாசிப்பரங்கு. காரைக்குடி]

அன்பு நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின்  நித்ய சய்தன்ய நிதி நினைவு கூட்ட  உரை படிக்க நேர்ந்தது…  ஒரு மிக நல்ல வாசிப்பு அனுபவமாக உணர்ந்தேன்.. நன்றி..

இருத்தல்  குறித்த தீராத கேள்விகள் எப்போதும் என்னுள் உள்ளன. இதனால் என்ன,இதன் அர்த்தம் என்ன? கேள்விகள் எப்போதும் கேள்விகளை மட்டுமே தருகின்றன.. சலித்து உலகியல் வாழ்விற்கு திரும்பும் போது அதன் போதை போதுமெனக்கு என்று சுகப்படுகிறேன்.. யோகிகள் ஞானிகள் இவர்கள் எல்லோரும் எதை அடைந்தார்கள்? எண்ணிலடங்கா தத்துவங்கள், அவற்றை மறுத்த எண்ணிலடங்கா  தத்துவங்கள் இவற்றால் இந்த குறு கோளம்  என்ன அடைந்தது?உண்மை என்பது நம் எண்ணத்தின் பிம்பமன்றி  வேறொன்று தனியாய் நம்மை சுற்றி உள்ளதா என்ன? என்னால் உணர முடிகிறது இவை எனது புதிய கேள்விகள் அல்ல என்று .. பன்னெடுங்காலமாய் மனிதனின் ஆதி கேள்விகளாய் இவை இருந்து உள்ளன.. ஆனால் இவற்றால் நாம் நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோமோ என்ற எண்ணம்..

தர்க்கத்தால் உணர முடியாதவற்றை ஒரு மாபெரும் உண்மையாக கற்பித்து கொண்டு ஒன்றும் இல்லாத ஒன்றை தேடி ஒடுகிறோமோ என்ற சங்கடம் அல்லது பயம். ஒரு உயிரியலாளனாய் என்னால் எப்போதும் மானுடத்தின் ஆக பெரிய அர்த்தம் வாழுதல் மற்றும் இனம் பெருக்குதல் என்ற விதியே என்று தோன்றுகிறது.. எல்லா மிக பெரிய தத்துவங்களும் சமூக தளத்திலும் ஆச பாச தளத்திலும் எல்லாவற்றையும் விட முக்கியமாய் மனித மனம் என்ற வட்டத்திலும் மட்டுமே பெருமளவு செயல்படுகின்றன.. இவை சார்ந்த எண்ணங்கள் இவை சார்ந்த கேள்விகள் இவை சார்ந்த உண்மைகள் அல்லது நிராகரிப்புகள்.. வைரஸ் எனப்படும் உயிருக்கு என்ன தத்துவம் என்ன உண்மை. பேரண்டத்தை யோசிப்பவர்கள் உயிர் துணுக்கை யோசிக்கிறார்களா? யோசித்து இருக்கலாம்.. ஆனால் அவை ஒரு மையப்புள்ளியில் குவிந்து தத்துவம் மலர்ந்ததா?  புத்தன் கண்ட உண்மையால் என்ன தான் நிகழ்ந்தது? Continue reading

7.தரிசனங்களின் பின்னணி – உபநிஷத காலகட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் பின்னணி

உபநிஷத காலகட்டம்

உபநிஷதம் (உபநிடதம்) என்றால் அருகே அமர்ந்து கொள்ளுதல் என்று அர்த்தம். இந்நூல்கள் பெரும்பாலும் குரு சிஷ்யனுக்குக் கூறியவையோ குருசீட விவாதங்களாகவோ அமைந்திருப்பதே இவற்றுக்கு இப்பெயர் உருவாகக் காரணம் என்று ஊகிக்கலாம். நேரடியான தத்துவச் சிந்தனை, இந்திய ஞான மரபில் உபநிஷதங்களில்தான் தொடங்குகிறது. எனவே இந்து ஞான மரபின் எல்லாத் தத்துவ மரபுகளுக்கும் உபநிஷங்களில் வேர்கள் உண்டு.

வேதங்களில் எழுப்பபட்ட அடிப்படை கேள்விகளும்  கண்டடையப்பட்ட அடிப்படையான தரிசனங்களும் மேலும் விரிவாகவும் தருக்கப்பூர்வமாகவும் விவாதிக்கப்பட்டது உப நிடதங்களில்தான். அத்துடன் உப நிடதங்கள் வேத ஞானத்தை மறுதலித்தும் தாண்டியும் செல்கின்றன. இந்த முரண்பாட்டை நாம் தெளிவாக புரிந்துகொள்ளுதல் அவசியம்.

ஒரு சிந்தனை மரபோ ஞான மரபோ அடுத்த கட்டத்துக்கு எப்படிச் செல்கிறது?. அம்மரபில் உள்ள சாராம்சமான சில கூறுகள் விரிவாக வளர்த்தெடுக்கப்படுகின்றன. அம்மரபில் உள்ள சாரமற்ற பல கூறுகள் விமர்சித்து ஒதுக்கப்படுகின்றன. இரண்டும் ஒரே சமயம் நிகழுகின்றன. வளர்ச்சி என்பது இதுவேயாகும்.

உபநிஷதங்களில் வேததரிசனங்கள் பல வளர்ச்சியடைந்து காணப்படுகின்றன. அதை வைத்து டாக்டர் ராதாகிருஷணன் முதலிய ஆன்மிக பார்வை உடைய தத்துவ ஆய்வாளர்கள், வேதங்களின் தொடர்ச்சிதான் உபநிஷதங்கள் என்கிறார்கள். வேதங்களை கடுமையாக மறுக்கக்கூடிய, எள்ளி நகையாடக் கூடிய பல பகுதிகள் உபநிஷதங்களில் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டி, தேவி பிரசாத் சட்டோபாத்யாய முதலிய உலகியல் பார்வை கொண்ட தத்துவ ஆய்வாளர்கள், உபநிஷத காலகட்டம் வேதங்களை மறுத்து எழுந்தது என்கிறார்கள்.

எது உண்மை? இரண்டுமே உண்மைதான். உபநிஷதங்கள் வேதங்களின் தத்துவார்த்த பார்வையாகவும், ஆதி தரிசனங்களையும் ஏற்று வளர்த்தெடுக்கின்றன. Continue reading

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்: கடிதங்கள் – 3

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்

கடிதங்கள்

ஜெயமோகன்.இன் இல் இருந்து

[விஷ்ணுபுரம் வாசிப்பரங்கு. காரைக்குடி]

அன்பு நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி.. நான் உங்களிடம் கேட்ட அனைத்தும் நீங்கள் குறிப்பிட்டது போல மிகுந்த அந்தரங்கமானவையே.. நான் சொன்னது போல இவற்றை உங்களுக்கு பகிர்தலின் பொருட்டே எழுதினேன். அவை தீர்மானமான விடைகளை தர வல்லது அல்ல என்றும் உணர்வேன்…தத்துவங்கள் அற்ற  வெளியில் சித்தர்கள் நிற்பதாக நீங்கள் குறிப்பிடுவது முக்கியமான ஒன்றாய் எனக்கு படுகிறது (அத்தகைய வெளியை என்னால் உணர முடியவில்லை என்றாலும் அதன் சாத்தியக்கூறு குறித்த ஆச்சர்யம் ஏற்படுகிறது)

எனது இலக்கிய அனுபவத்தை ஜே ஜே சில குறிப்புகளுக்கு முன், பின் என்று பிரிக்க முடியும் ( அதற்கு முன் எனக்கு இலக்கிய அனுபவமே இருந்ததில்லை என்றும் கூட சொல்லலாம்). அது போல் என் தத்துவ புரிதல்களை விஷ்னுபுரத்திற்கு முன் பின் என்று பிரிக்கலாம்.. (முன்னால் இருந்ததெல்லாம் தத்துவம் குறித்த ஏளன போக்கு மட்டுமே.. காரணம் என் முன் இருந்த வைக்கப்பட்ட   தத்துவ கருத்துகள் அது போன்றவை.. கல்வி மற்றும் ஊடகங்கள் வழி கிடைத்தவை அவை  )
விஷ்ணுபுரம் மறுவாசிப்பு செய்ய உள்ளேன்… Continue reading

6. தரிசனங்களின் அடிப்படைகள் – தரிசனங்களின் பின்னணி

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் அடிப்படைகள் 

தரிசனங்களின் பின்னணி

இந்து ஞான மரபுக்கு ஒரு எளிய வரைபடத்தினை உருவக்கிக் கொண்டோமெனில் அதில் ஆறு தரிசனங்களையும் அடையாளப்படுத்தி அறிவது மிகவும் எளிதாக இருக்கும். பொதுவாக ஒரு சூழலின் சிந்தனைத் தளத்தில் செயல்படுபவர்கள் அச்சூழலின் சிந்தனை மரபு, வரலாற்று மரபு ஆகியவை குறித்து ஒரு மன வரைபடத்தினை கொண்டிருப்பது மிக அவசியம்.

இந்து ஞான மரபுக்கு தொன்மையான காலம் தொட்டு ஒரு பாடத்திட்டம் இருந்துள்ளது. புராதன நூல்களில் அந்த வைப்புமுறை மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறது. வேதங்கள், ஆறுதரிசனங்கள், ஆறு மதங்கள், மூன்று தத்துவங்கள் ஆகியவைதான் அந்த பாடத்திட்டம்.

வரலாற்று ரீதியாக நாம் இந்து ஞான மரபை வேறு வகையான பகுத்துப் பார்க்கலாம். இது வேத காலம் முதல் இன்றுவரை உள்ள ஒட்டு மொத்த மரபை வகுத்துப் புரிந்துகொள்வதற்கு உதவும். இப்பிரிவினை சிந்தனைப் போக்குகளையும் அவை உருவான கால கட்டங்களையும் இணைந்து பார்க்கும்போது உருவானது.

இந்து ஞான மரபினை எட்டு கால கட்டங்களாகப் பிரிக்கலாம். (1) வேத காலகட்டம் (2) உபநிடத  காலகட்டம் (3) தரிசன காலகட்டம் (4) அவைதிக மதங்களின் காலகட்டம் (5) பக்தி கால கட்டம் (6) பிற்கால வேதாந்தங்களின் கால கட்டம் (7) இந்து மறுமலர்ச்சிக் கால கட்டம் (8) இந்து நவீனப் போக்குகளின் காலகட்டம்

இவற்றில், பல பழங்கால மரபுகளின் வரலாற்றுக் காலகட்டங்களைத் தெளிவாக அறுதியிட்டு கூற முடியாது. எனவே அவற்றை கால வரிசைப்படி அடக்க முடியாது. சிந்தனையின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையிலேயே அடுக்க முடியும். எனினும் இவ்வரிசை மூலம் நம் மரபு எப்படி வளர்ந்து வந்துள்ளது என்பதை அறியலாம். Continue reading

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்: கடிதங்கள் – 2

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்

கடிதங்கள்

ஜெயமோகன்.இன் இல் இருந்து

[எழுத்தாளர் ஜெயமோகனுடன்  வாசகர் Dr.சுனீல் கிருஷ்ணன்.

இடம்:  விஷ்ணுபுரம் வாசிப்பரங்கு. காரைக்குடி]

அன்புள்ள ஜெ:

மிகவும் உக்கிரமான வரிகள் இவை.. இன்று முழுக்க திரும்பத் திரும்ப…. இதன் முன் செயலற்று அமர்ந்திருக்கிறேன்.

“ஆயிரம் காதத் திரையை

செவ்வலகால் கிழித்து வந்து

என் முன் அமர்ந்து நொடிக்கும்

இவ்வெண் பறவையின் முன்

செயலற்று

அமர்ந்திருக்கிறேன்.

 

எண்ணங்கள் மீது

கவிகிறது வெண்மை.

சஞ்சலங்கள் மீது

கவிகிறது வெண்மை.

இருத்தல் மீது

கவிகிறது முடிவற்ற வெண்மை…”

அர்விந்த்

அன்புள்ள அர்விந்த்,

தியானத்தில் மெல்ல மெல்ல கூடணையும் புள் நிறைந்த மரம்போல மனம் சொற்கள் கலைந்து அடங்குகிறது. அப்போது பொருளற்ற தன்னிச்சையான சொற்சேர்க்கைகள் ஆழ்ந்த பொருளுள்ள சொற்சேர்க்கைகள் வெறும் நினைவுச்சித்திரங்கள், படிமங்கள் என ஒரு பெரும் சுழித்தோடல் நமக்குள் நிகழ்கிறது. விஷ்ணுபுரத்தில் மூன்றுபேர் மூன்று நிலைகளில் அந்த தியான நிலையை தீண்டும் வரிகள் உள்ளன. முதலில் பக்தியும் நெகிழ்ச்சியும் ஓங்கிய நிலையில் திருவடி. இரண்டாவதாக அறிவார்ந்த தளம் ஓங்கிய பிங்கலன். மூன்றாவதாக செயலின்மை நிலை ஓங்கிய பாவகன். மூன்றிலும் தற்செயல் மொழி உருவாக்கும் நீளமான சொற்பிரவாகம்தான். மூன்றும் வெவ்வேறானவை. விஷ்ணுபுரத்தில் வெகுகாலம் காத்திருந்து ‘பெற்றுக்கொண்டு’ எழுதப்பட்ட வரிகள் அவை.  எனக்கே அவற்றில் பலவரிகள் மிகப்பிடித்தமானவையாகவும் அவற்றின் பொருளென்ன என்று மீள மீள மனதைப் போட்டு மீட்டுவனவாகவும் இருந்தன

இசைக்கும் வெளி உன் நடனம்

அடி என் சாகரத்திரைச்சீலை

விலக்கி

புன்னகைக்கும் பெருமுகம்

 

காட்டுவெளியின் இலைகள்

நாநுனியென துடிதுடித்து

காற்றை நிரப்பும்

ஓயாத பெயர்

 

இருட்படுகையில் ஓடும்

பெருநதியின்மீது கண்கள்

உருண்டு மின்னும்

தனித்த பரமீனின் செவிள்களின்

சிறகுகளில்

பூத்த நிலவுக்குமிழ் நீ

ஆகியவரிகளை நான் பின்னர் என் ஆழ்ந்த மனநிலையில் ட்டிக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக மூன்றாவது. அதில் ஒரு சித்திரம் உள்ளது. கடைசிவரை அதை முழுமையான சித்திரமாக ஆக்கிக்கொள்ளவே முடியவில்லை. தியானத்தில் சித்திரங்கள் அப்படித்தான் பார்க்கும்போதே கலைந்துகொண்டு ஆனால் கலையாமல்நின்றுகொண்டு இருக்கும்…

ஜெ

@@@

அன்புள்ள ஜெ,

இப்போதுதான் விஷ்ணுபுரத்தை படித்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கிறேன். வாசிக்க ஆரம்பித்து 7 மாதம் ஆகின்றது. மெதுவாக ‘உந்தி பகுதியை தாண்டியாயிற்று. எனக்கு ஒரு நாவலை வாசிக்கும் அனுபவம் எனக்கு ஏற்படவில்லை. அதாவது  தொடர்ச்சியான ஒரு கதை ஓட்டத்தில் நீந்திச்சென்றதுபோலவே இல்லை. ஒவ்வொரு நாளும் படிக்கும் ஒரு அத்தியாயம் அதுவே ஒரு தனி சிறுகதை போல இருக்கின்றது. அதையே இரண்டு முறை படிக்க வேண்டியிருக்கின்றது. அது பலவகையான உணர்ச்சிகளை அளிக்கின்றது. நிறைய யோசிக்கச் செய்கின்றது. நிறைய சந்தர்ப்பங்களில் பரவசமான நேரங்களெல்லாம் அமைந்திருக்கின்றன. மனசினுடைய பரபரப்பு தாளாமல் வெளியே இறங்கி பைக்கை எடுத்துக்கொண்டு ரோட்டில் ஓடியிருக்கின்றேன். நிறைய வரிகளை கிறுக்கன் போல நாள்கணக்கில் மனதுக்குள் சொல்லிக்கொண்டே அலைந்திருக்கின்றேன். நிறைய கருத்துக்கள் என் மனத்தில் வரும்போது அவை நாவலில் நான் படித்த வரிகளின் வேறு வடிவங்கள்தான் என்று தெரிந்திருக்கின்றது.

மொத்தத்தில் இந்த நாவல் என்னுடைய சிந்தனையையே ஒட்டுமொத்தமாகவே மாற்றியிருக்கின்றது. என்னுடைய கனவுகளில்கூட இந்நாவலின் காட்சிகளை கண்டிருக்கின்றேன். சில இடங்களுக்கு உண்மையிலேயே போய்விட்டு வந்தது போலவே சில மாதங்கள் கழிந்து தோன்றுகிறது. என்னுடைய வாசிப்பில் இதுவரை இதுபோல ஒரு வாசிப்பு அனுபவம் கிடையாது. ஒரு புத்தகம் என்னை இந்த அளவுக்கு மாற்றும் என்று நான் நினைத்ததே இல்லை.

ஆனால் உந்தி பகுதியிலே உள்ள நிறைய தர்க்கங்களின் பொருத்தப்பாடு எனக்கு புரிபடவில்லை. நான் இன்னமும் நாவலை முடிக்கவில்லை என்பதனால் ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை. ஆனால் இப்படி நாவலில் சொல்ல வேண்டிய விசயங்களை தர்க்கபூர்வமாக சொல்லி முடிக்க வேண்டுமா? பொதுவாக நாவல்களில் சொல்ல வேண்டிய விசயங்கள் குறிப்பால்தானே உணர்த்தப்பட்டிருக்கும். இது என்னோட சிறிய சந்தேகம்தான். தப்பாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்

 சரவணன்

@@@

அன்புள்ள சரவணன்,

விஷ்ணுபுரத்தில் உள்ள இரண்டாம் பகுதி எந்த கருத்தையும் விவாதித்து நிறுவும் நோக்கம் கொண்டது அல்ல. மானுடத்தின் தேடலின் கதை விஷ்ணுபுரம். அப்படியானால் அதில் ஞானத்தின் மூன்று முகங்களும் வரவேண்டும் அல்லவா? பக்தி அல்லது கர்மம் முதலில். ஞானம் இரண்டாவதாக. கைவல்யம் மூன்றாவதாக. ஆகவே இரண்டாவதாக தர்க்கங்கள் வருகின்றன. தர்க்கம் மூலமாக எப்படி மனிதனின் தேடல் முன்னால்செல்கிறது என்ற சித்திரத்தையே நாவலின்

அப்பகுதி அளிக்கிறது. அதில் வரும் தர்க்கங்கள் எவையுமே உண்மையான தத்துவத் தர்க்கங்கள் அல்ல. அவையெல்லாம் தர்க்கங்கள் போன்ற புனைவுகளே. பெரும்பாலான தர்க்கங்கள் இலக்கிய உருவகங்களாகவே உள்ளன. எவையும் நிறுவப்படவில்லை. நிறுவப்பட்ட ஒன்றின் எல்லை உடனே வெளிப்பட்டுவிடும் என்பதே விஷ்ணுபுரத்தின் இயல்பாகும்.

ஞானசபை விவாதத்தில் விவாதிக்காதவர்களாக சித்தனும் அவன் மடியில் அமர்ந்த மகா காஸியபனும் வருகிறார்கள் என்பதைக் கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஞானசபை விவாதங்களை அதில் பங்குகொண்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் புரிந்துகொள்கிறார்கள். சித்தன் சொல்கிறான், ‘சீடா ஞானமென்பதே முடிவில்லாத பாடபேதங்களின் வரிசைதானே?’

 ஜெ

@@@

 அன்புள்ள ஜெயமோகன்;

தங்களின் விஷ்ணுபுரம் நாவலை ஒரு வாரம் முன்பு தான் படித்தேன். இந்த ஒரு வாரமாக உங்களுக்கு கடிதம் எழுதலாமா வேண்டாமா என்கிற இடையறாத ஒரு சிந்தனை? காரணம் இதற்க்கு முன் தங்களுக்கு நான் எழுதிய அனைத்து கடிதங்களுமே இப்போது படிக்கும் போது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக எனக்கே தோன்றுகிறது.இதுவும் நிச்சயம் அப்படித்தான் என்றாலும் இதை எழுதியே தீர வேண்டும் என்கிற தீவிரமான விருப்பம் தான் காரணம்.

இந்த நாவல் முக்கியமாக கடந்த ஐந்து வருட கால தொடர் சிந்தனையை அல்லது அவஸ்தையை மீண்டும் ஒரு முறை அசை போடவும் தொகுத்துக் கொள்ளவும் பெரிதும் உதவியது.எனக்கு முதலில் படிக்கக் கிடைத்த உங்களின் ஒரு கீதை கட்டுரையில் நீங்கள் ஒரு வரி எழுதியிருந்தீர்கள். கீதை உயிர் கரைக்கும் ஒரு மருந்து போல என இந்த வார்த்தைகளை எழுதும் போது நீங்கள் என்ன ஒரு மன உச்சத்தை அடைந்திருக்கக் கூடும் என்று அப்போதே ஓரளவுக்கு என்னால் ஊகிக்க முடிந்தது.காரணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் என் தாத்தாவின் பகவத் கீதை நூலை ஏதோ ஒரு காரணம் யோசித்தால் ஏதோ ஒரு சாபமோ என்று கூட சமயங்களில் தோன்றும். இன்னும் உண்மையை சொல்லப் போனால் ஒரு போட்டி மனோபாவம் காரணமாகத் தான் படிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக இரண்டாவது அத்தியாயத்தையே ஒரு நாற்பது முறை படித்திருப்பேன் அதை தாண்டி படிக்க முடியவில்லை.. அதையே திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருப்பேன் குறிப்பாக அந்த கடைசி பதினெட்டு ஸ்லோகங்களும் கிட்டத்தட்ட என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் தந்து விட்டதாக ஒரு பூரிப்பு.நான் என்னை சார்ந்தவர்களுக்கு புரியாத ஒரு இடம் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அவர்களால் என்னுடைய உயரத்தை அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஆன்மீக உச்சம் அடைந்து விட்டதாக அகம்பாவம் கொழுந்து விட்டெரிய திரிந்தேன்.

 onefineday- இப்படித்தான் அந்த நாளை சொல்ல வேண்டும் என்னுடைய உறவினர் ஒருவருடன் விவாதம் புரிந்து கொண்டிருந்தேன்.முழுமையற்ற அவருடைய கடவுள் நம்பிக்கையை கிண்டல் செய்வதாக நினைத்து சில கேள்விகள் எழுப்பினேன்.அவர் விடை தெரியாமால் விழித்ததில் ஒரு மகிழ்ச்சி ஆனால் அன்றைக்கு எங்களூர் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது  அதே கேள்விகள் அவரை கேட்ட அதே கேள்விகளை என்னை நானே கேட்டுக் கொண்ட போது என்னாலும் அதற்க்கு விடை சொல்ல முடியவில்லை. என்னுடைய மனம் இரண்டாக பிரிவதாகவும் ஒரு மனம் தொடர்ந்து கேள்விகளையும் ஒரு மனம் தொடர்ந்து விடைகளையும் உற்ப்பத்தி செய்து வந்தது.கேள்விகளை கேட்கிற அந்த மனம் ஒவ்வொரு விடையையும் தான் படித்த ஏதேனும் ஒரு வாதத்தை முன் வைத்து கேள்விகளை அர்த்தமற்றுப்போக வைப்பதையும் விடை காண்கிற என்னால் அந்த துயரத்தை தாங்க முடியாமல் மருகுவதும் பல நாட்கள் தொடர்ந்தது.என் நோக்கில் அப்போது கீதை ஒரு மெல்லக்கொல்லும்விஷம் போல என்னை துளித்துளியாக அது கொன்று விடும் என்கிற அச்சம் என்னை பீடித்திருந்தது. எனக்கு ஒன்று புரிந்தது விடைகளை தயாரிக்கிற நான் எவ்வளவு உண்மையோடு ச்ரத்தையோடு ஒவ்வொரு வாதத்தையும் அனுமதிக்கிறேன் அனால் பிடிவாதமாக என்னுடையா எல்ல ந்யாயங்களும் மறுக்கப் படுகிறதென்றால் விடை இதற்க்கு முக்கியமில்லை. கேள்விகள் மூலமாக நான் திணற வேண்டும் அதை பார்த்து ரசிக்க வேண்டும் இன்னும் ஒரு சிந்தனை நான் ஏன் இவ்வளவு தீவிரமாக என்னுடைய தரப்பை முன்வைக்க வேண்டும் இந்த தீவிரத்தில் ஒரு தீர்மானம் தெரிகிறது அதை போல இதுவும் ஒரு பிடிவாதமே அதில் மூர்க்கம் அப்பட்டமாக தெரிகிறது. இதில் கொஞ்சம் மிதம் தெரிகறது வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை. இல்லை இது ஒரு மனபிரழ்வா அதன் ஆரம்ப நிலையா? எதற்காக இதை படித்துத் தொலைத்தோம் ஒரு மரங்கொத்திப் பறவையை போல கேள்விகள் கொத்தி தின்கிறது.எந்த பதிலுக்கும் மனம் சமாதானமாகவில்லை.

 என்னுடைய உச்ச மன பலவீனம் காரணமாக சில ஆன்மீக பெரியவர்களை துறவியரை அணுகினேன். என்னுடைய கேள்விகளுக்கு பின்னாலிருக்கிற நோக்கத்தை அவர்களால் சுத்தமாக புரிந்து கொள்ள முடியவில்லை.எல்ல கேள்விகளுக்கும் ஏதோ ஒரு பண்டித நோக்கில் அவர்கள் அளித்த பதில் எனக்கு மிகுந்த எரிச்சலையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது. எந்த ஒரு பொருளை பார்த்தாலும் அது சார்ந்து கேள்விகளை எழுப்பி பதில்களை அடைவதாக பாசாங்கு செய்து இறுதியில் அடைவது என்னமோ ஒரு அத்ருப்ப்தியை அந்த விடைகளுக்கேலாம் இந்திய சிந்தனை மரபில் ஒரு இடம் இருப்பதை பின்னாளில் அறிந்து கொண்ட போது என்னை குறித்த ஒரு சுயத்ருப்தியும் அதே சமயம் கூடவே எழுகிற ஒரு அத்ருப்தியையும் விலக்கிவைக்க முடியவில்லை. உங்களின் கீதை தொடர்பான கட்டுரைகள் எனக்கு கீதை குறித்த ஒரு தெளிவை நிச்சயமாக கொடுத்திருக்கிறது எந்த கொந்தளிப்பும் இல்லாது அந்த நூலை இன்றைக்கு நான் அணுக முடிவதற்கு நீங்கள் ஒரு முக்கிய காரணம். உங்களின் விஷ்ணுபுரம் முதல் நூறு பக்கங்கள் போவேனா என்று என்னை துன்பப்படுத்தியது.அதற்குப்பின் பெரும்பாலும் இத்தனை அலுவலக பணிகளுக்கு நடுவிலும் மூன்று நாட்களில் இரவெல்லாம் விழித்துப் படித்து முடித்ததற்கு ஒரே ஒரு காரணம் என் நோக்கில் அது என் கதை. தமிழ் எழுத்தாளர்களை பற்றி நிலவும் ஒரு கிண்டல் வசை ஏளனம் எவ்வளவு நியாயமற்றது முழுமையற்றது என்று புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் விஷ்ணுபுரத்தை நான் பார்க்கிறேன்.காரணம் உங்களுடைய கட்டுரைகளை என்னுடைய உறவினர்களில் நண்பர்களில் ஒரு சிலருக்கு அனுப்புவேன். பெரிய இல்லக்கிய பயிற்ச்சி இல்லாத என்னுடைய நண்பர்கள் சந்தோஷ் நெஜமாவா ரொம்ப நன்னாயிருக்கு ஆனா தமிழ் படிக்கறதுல தான் ச்ரமம்?இலக்கிய பயிற்ச்சி நிறைந்தவர்கள் உங்களை நியாயமில்லாமல் விமர்சிப்பதையும் பார்த்து இந்த பரிந்துரைகளை எல்லாம் நிறுத்தி விட்டேன் நான் என் அவர்களுக்கு உதவ வேண்டும்? அதுவும் விஷ்ணுபுரத்தை படித்ததும் அந்த எண்ணம் மேலும் பலப்பட்டது.

விஷ்ணுபுரம் படித்து முடித்தவுடன் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னோடு பழகிய ஒரு நண்பனின் ஞாபகம் வந்தது.எனக்கு கணக்கு வராது பொதுவாகவே கணக்கை மனப்பாடம் செய்து பாஸ் பண்ணுபவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன் என்று நம்புகிறேன். எனவே கணக்குப்பாடம் நடக்கும் போது மிக கவனமாக கவனிக்க முயற்சி செய்வேன்.அவன் கணக்கில் ரொம்ப கெட்டிக்காரன் சாதரணமாக தொண்ணூறு மார்க்குக்கு மேல் வாங்கி விட்டு நூறு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பன். அவனுடைய முக்கியமான வேலை என்னவென்றால் நாங்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்போம் எல்லாம் புரிந்த மாதிரியே இருக்கும் ஒரு கேள்வி ஒரே ஒரு கேள்வி கேட்ப்பான் அவ்வளவு தான் அது வரை புரிந்ததெல்லாம் மறந்து விடும்.வாத்தியார் அந்த கேள்விக்கு பதில் சொல்ல விட்டாலும் அந்த கேள்விக்கான பதில் அவனுக்கு தெரிந்து விடும்.அல்லது முன்னாடியே தெரிந்திருக்கும். இந்த கடிதம் எழுதும் போது என் மனம் அந்த நண்பனின் இடத்தில் உங்களை வைத்துப் பார்த்தது விஷ்ணுபுரம் படித்து முடித்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்வு ஒன்று தான் இது வரை எனக்கு கணக்கு மட்டும் தான் வராது என்று நினைத்திருந்தேன். சென்ற கடிதத்தில் என்னை நலம் விசாரித்ததற்கு மனமார்ந்த நன்றி.

உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் என் மனபூர்வமான அன்பு.

வணக்கத்துடன்

சந்தோஷ்