5.தரிசனங்களின் அடிப்படைகள் – தரிசனங்களின் அமைப்பு முறை

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் அடிப்படைகள்

தரிசனங்களின் அமைப்பு முறை

ஒரு தரிசனத்தின் பொதுவான அமைப்பு முறை எப்படிப்பட்டது? இந்து மரபின் ஆதி தரிசனங்கள் நன்கு வளர்ந்து மேம்பட்ட நிலையில் உள்ளன. பெரும்பாலான தரிசனங்களை நாம் மதங்களின் ஒரு பகுதி என்ற நிலையிலேயே காணமுடிகிறது. வேறு பல தரிசனங்களைப் பல்வேறு துறைகளில் அவை பிரதிபலிப்பதை வைத்து ஊகித்து அறியவேண்டியுள்ளது. ஆகவே இந்து மரபின் ஆறு தரிசனங்கள் எப்படி உள்ளன என்பதை வைத்து இந்த நிர்ணயத்தினை நடத்துவதே உசிதமானது.

ஒரு தரிசனம் பெரும்பாலும் ஒர் ஆதி குருவின் மொழியிலிருந்து தொடங்குகிறது. உதாரணமாக சாங்கியத் தரிசனம் கபிலரின் கூற்றுகளிலிருந்தே தொடங்குகிறது. ஆகவே கபிலர் சாங்கியக் குரு என்று அழைக்கப்படுகிறார். ஆனால் உண்மையில் அத்தரிசனம் அவரால் சூனியத்தில் இருந்து உருவாக்கப்பட்டது அல்ல. உலகத்தில் இதுகாறும் உருவான எந்த தரிசனமும் அப்படி ஒரு தனி நபரால் திடீரென்று கண்டடையப்பட்டது அல்ல என்று உறுதிபடக் கூறிவிட முடியும்.

தரிசனங்களின் விதைகளை நாம் நம் மொழியில் சாதாரணமாகவே காண முடியும். நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள்,பழங்கதைகள் முதலியவற்றில் அவை புதைந்து கிடக்கும். அதேபோல புராதனமான சடங்குகள், தெய்வ வடிவங்கள் ஆகியவற்றிலும் அவை உறைந்திருக்கும். அவை மனித மனத்திலிருந்து இயல்பாகவே உருவாகி மொழியிலும் கலையிலும் வெளிப்பட்டவை ஆகும்.

ஒரு விழிப்புற்ற மனம் அந்தத் தரிசனத்தைக் கண்டுபிடிக்கிறது அவ்வளவுதான். விதையை அந்த மனம் பெரிய மரமாக ஆக்குகிறது. உதாரணமாக சாங்கியத் தரிசனத்தின் சாராம்சம் என்ன? Continue reading

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்:கடிதங்கள் – 1

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்

கடிதங்கள்

ஜெயமோகன்.இன்  இல் இருந்து

ஜெயமோகன்,

இன்று நான் விஷ்ணுபுரத்தை படித்து முடித்தேன். தமிழின் பெரும் படைப்புகளில் ஒன்று. தினமும் விஷ்ணுபுரம் பற்றி ஒரு கடிதமாவது வருகிறது என்று சொன்னீர்கள். இப்போது என்னுடயது.

என்னுடைய சொந்த படைப்பூக்கக் குறைவால் நான் இதில் சில சிக்கல்களைச் சந்தித்தேன். காரணம் இதை கண்முன் காண வார்த்தை வார்த்தையாக வாசிக்கவேண்டியிருக்கிறது. தத்துவமும் எனக்கு சிக்கலாக இருந்தது, ஆனால் சில பக்கங்களுக்குள் நான் அதற்குள் சென்றுவிட்டேன். இந்நாவலில் பல பக்கங்களில் நான் ஆன்மீகமான [மதம் சார்ந்த அல்ல] உணர்வலைகளை அடைந்தேன். பாஇப்புக்கற்பனை வழியாக அப்படிபப்ட்ட ஓர் அனுபவத்தை அடைவது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது

இன்று நான் உங்கள் கடைசிச் சிறுகதையான ஊமைச்செந்நாயை படித்தேன். விஷ்ணுபுரம் சொல்வதுபோல கலைஞர்கள் பெரும் படைப்புகள் வெளிப்படும் ஊடகங்கள் மட்டுமே. உங்கள் வழியாக சிறந்த படைப்புகள் வெளிவருகின்றன. ஆனால் அதற்கு உங்கள் தேடலும் உணர்ச்சியும் பங்காற்றுகின்றன. வாழ்த்துக்கள் Continue reading

4.தரிசனங்களின் அடிப்படைகள் – தரிசனம் என்றால் என்ன?

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் அடிப்படைகள்

தரிசனம் என்றால் என்ன?

இந்து மெய்ஞான மரபு என்பது இந்துத் தரிசங்களின் வரிசையே. அவற்றை அறிவதற்கு முன்பாக ‘தரிசனம்’ என்றால் என்ன என்று அறிந்தாகவேண்டிய அவசியம் உள்ளது.

’தரிசனம்’ என்ற வார்தையானது சமஸ்கிருதத்திலே பலவாறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு பொருள்மயக்கம் அதிகம். சரியானபடி மொழிபெயர்த்தால்  தரிசனம் என்பதற்குக் ‘காட்சி’ என்று மட்டும்தான் பொருள் வரும். அப்பொருளில் தான் அது சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது.

பக்தி மரபில், இறைவனைக் காண்பதைத் தரிசனம் என்கிறார்கள். தன் அகத்தில் இறைவனைத் தரிசிப்பதையும் ஆலயத்திற்குப் போய் வணங்குவதையும் தரிசனம் என்றே கூறுவார்கள்.

மெய்ஞான மரபில் இச்சொல்லுக்கு இரு அர்த்தங்கள் உண்டு. அன்றாட வாழ்வில் நாம் புழங்கும்போது நமக்கு தேவைக்கு ஏற்பவும், நமது இயல்புக்கு ஏற்பவும்தான் ஒவ்வொன்றும் நமக்கு காட்சி அளிக்கின்றன. இக்காட்சிகள் குறையுடையவை. முழுமை இல்லாதவை. அன்றாட வாழ்வின் தளத்திலிருந்து விடுபட்டு நமது மனம் தன்னைத்தானே முழுமையாக காணும் நிலையில் இருப்பதை அகவிழிப்பு  நிலை என்கிறோம். இதை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வகையில் விளக்குகிறது என்பதை நாம் அறிவோம். அத்துடன் விளக்கத்துக்கு அப்பாற்பட்ட ஓர் ஆழ்நிலை இது என்பதையும் நாம் அறிவோம்.

இந்த சூழ்நிலையில் நாம் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகவும், முழுமையாகவும் பார்ப்பதையும் ‘தரிசனம்’ என்று மெய்ஞான மரபு குறிப்பிடுகிறது. அதாவது, தரிசனம் என்பது வேறு, பார்வை என்பது வேறு. பார்வை, சாதாரணமாகப் பார்த்து அறிவது. தரிசனம், அகவிழிப்பு நிலையில் பார்த்து அறிவது.

இவ்வாறு அகவிழிப்பு நிலையில் வாழ்க்கையும் பிரபஞ்சத்தையும் ஒட்டுமொத்தமாகவும் முழுமையாகவும் பார்த்து அறிந்த விஷயங்களைத் தர்க்கப்பூர்வமாகக் கூற முடையும் போதுதான் தத்துவ தரிசனங்கள் உருவாகின்றன. ஆகவே தத்துவ ரீதியாகப் பார்த்தால் தரிசனம் என்பது வழ்க்கை மற்றும் பிரபஞ்சம் குறித்த ஒட்டு மொத்தமான ஒரு பார்வை ஆகும். Continue reading

வைணவத்தின் மூன்றுநிலை கோட்பாடு

ஜெயமோகன்.இன் தளத்தில் இருந்து

வைணவத்தின் மூன்றுநிலை கோட்பாடு

வணக்கம் ஜெமோ,

விஷ்ணுபுரம் நாவலைப் பற்றிய ரவியின் ஐந்தாவது கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கையில், கதை ஐந்தாம் நூற்றாண்டில் நடக்கிறதென்றும், அதனால் அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம் பற்றி அதில் குறிப்பு இல்லை என்று கூறியுள்ளீர்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பட்டர் (??) அவையில் “தத்வம், ஹிதம், புருஷார்த்தம்” பற்றி பேசுவதாக வருகிறது. எனக்குத் தெரிந்து இம்மூன்றைப் பற்றி வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மட்டுமே அதிகம் பேசப்படுகிறது. அதுவும் நாதமுனிகள் காலத்திற்கு பின் தான் தொடங்கி இருக்க வேண்டும். ஆழ்வார்கள் அவற்றைப் பற்றி பேசி இருந்தாலும் அதை நாம் உரைகளின் மூலமே உணர முடிகிறது. அப்படி இருக்க ஐந்தாம் நூற்றாண்டில் எப்படி பட்டர் இதுபற்றி பேசி இருக்க முடியும்? என்னுடைய புரிதலில் ஏதேனும் பிழை இருந்தால் தயவு செய்து சுட்டிக் கட்டவும்.

– சீனு

Cheenu Narasimhan Continue reading

கேள்வி, பதில்

விஷ்ணுபுரம்: கேள்வி, பதில்

ஜெயமோகன்.இன்  தளத்தில் இருந்து

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு…

தங்களின் விஷ்ணுபுரம நாவல் படித்தேன்…

மூன்று நாட்களில் படித்து முடித்தேன்…

நல்ல அனுபவத்தை தந்தது நாவல்… அதை பற்றிய என் கருத்தை இந்த இணைப்பில் காணலாம்..

http://pichaikaaran.blogspot.com/2010/07/matrix-chaos.html

மீண்டும் இன்னொரு முறை படித்து விட்டு விரிவாக எழுதுவேன்..

தங்கள் முன் சில கேள்விகள்..

1 விஷ்ணு புரம் என்ற தலைப்பு, இது மத ரீதியான நூல் என்ற அடையாளத்தை தருவதால், என்னை போல பல வாசகர்களை நெருங்க முடியாமல் போகிறது … ஒரு தத்துவ நூலான இதற்கு, பின் தொடரும் நிழலின் குரல் என்பது போல செகுலர் பெயரை வைத்து இருப்பதுதான் பொருத்தமாக இருந்துஇருக்கும்..உங்கள் கருத்து என்ன ?

2 பின் தொடரும் குரல் நாவலில் இருந்த அளவுக்கு வடிவ அமைப்பு நேர்த்தி இதில் இல்லை என தோன்றுகிறது… உதாரணமாக பி தொ குரலில் இருந்த குறுநாடகம் நன்றாக இருந்தது..இது தட்டையாகஇருக்கிறதே?

3 மன்னர்கள், ஆழவார்கள், வைதீகர்கள் என அனைவரையுமே எதிர்மறையாக காட்டி இருப்பது நெருடலாக இருக்கிறது..

4 ஞான சபை விவாதத்தில் தமிழ் மரபான சித்தர் மரபு சார்ந்த விவாதம் இல்லாததது ஒரு குறை. ஏன் விட்டு போனது ?

5 அத்வைதம், த்வைதம், விஷிஷ்டத்வைதம் போன்ற வார்த்தைகளியே காணவில்லை … மருபிரப்ப்பு, ஊழ் போன்றவற்றை விரிவாக அலசவில்லையே .ஏன் ?

அன்புடன்,
ரவி Continue reading

3.தரிசனங்களின் அடிப்படைகள் – மெய்ஞானமரபு என்பது என்ன?

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் அடிப்படைகள்

மெய்ஞானமரபு என்பது என்ன?

இந்து மெய்ஞான மரபு என்றால் என்ன என்னும் கேள்வியினை மிக விரிவாகவும் தெளிவாகவும் நாம் எழுப்பியாகவேண்டிய தேவை இன்று உள்ளது. இம்மரபின் உள்ளேயுள்ள விஷயங்களைப் புரிந்து கொள்ள இது அவசியம்.

முதலில் இது குறித்து நமக்கிடையே உள்ள பிழையான புரிதல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக இந்து மெய்ஞானமரபு என்று கூறும்போது இந்து மதத்தையே நாம் குறிப்பிட்டுகிறோம். சிலர் பெளத்த மதத்தையும் சமண ( ஜைன ) மதத்தையும் சேர்த்துக்கொள்வார்கள்.

இந்து மதம் என்றால் என்ன? இப்போது நாம் இந்து மதம் என்று குறிப்பிடுவது உண்மையில் சைவம், வைணவம், சாக்தேயம், கெளமாரம், காணபத்யம், செளரம் என ஆறு வழிபாட்டுமுறைகைளின் தொகுப்பு ஆகும். நமது பழைய வழக்கப்படி ஒரு மதம் என்பது ஒரு குறிப்பிட்ட இறைவனை வணங்கும் வழிபாட்டு மறபே.

இந்த பட்டியலில் சேர்க்கப்படாத ஏராளமான சிறு வழிபாட்டு முறைகளும் இந்துமதம் என்ற அமைப்புகுக்குள் காணப்படுகின்றன. பல்வேறு பிராந்திய வழிபாட்டு  முறைகள் படிப்படியாக இந்து மதத்தில் சேர்வது இப்போதும் தொடர்ந்து நடக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பழங்குடி மக்கள் மற்ற மக்களுடன் தொடர்புகொள்வது அதிகரித்தது. அவர்களுடைய வழிபாட்டு முறைகள் இந்து மதத்தில் சேர்ந்தன. இது சமீப காலத்து உதாரணம். Continue reading

காலமே உனக்கு வணக்கம் – 2 by சுனீல் கிருஷ்ணன்

விஷ்ணுபுரம்

காலமே உனக்கு வணக்கம் – 2

by  சுனீல் கிருஷ்ணன்

மகத்தான தனிமை

உனது மகத்தான தனிமையில்

கரிய பறவையெனப் பறந்துவரும்.

நீயேண்ணும் சொற்கடலின் அலைகள்

நக்கியுண்ணும் கரைமணலில் எஞ்சும்

நேற்றைய பாதங்களின் சாயலில் இன்று

எங்கு பதிகின்றன சுவடுகள்?

இந்த நாவலை நான் முதல் முறை வாசித்த போது எனக்கு இதன் இலக்கிய நுட்பங்கள் சரிவர புலப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். முதல் வாசிப்பின் முடிவில் நான் இதை ஓர் தத்துவ- ஆன்மீக நூலாகவே அணுகினேன். அதுவரை நான் வாசித்திருந்த தத்துவ- ஆன்மீக நூல்கள் வாழ்வை பற்றி முன்வைத்த நம்பிக்கைகள் அத்தனையும் பொசுங்கி சாம்பலாயின. விஷ்ணுபுரம் வாழ்வை பற்றிய மிக அடிப்படையான கேள்விகளை, வறட்டு தத்துவங்களாக இன்றி உயிர்த்துடிப்புள்ள பாத்திரங்கள் மூலம் எழுப்பியதால் அதன் உக்கிரத்தை பன்மடங்கு அதிகமாக உணர முடிந்தது..

இந்த நாவலின் அடிநாதமாக நான் காண்பது தனிமையும் தவிப்பும், ஆன்மீக தகிப்பும் தான். ஒருவகையில் ஜெ வுடைய தனிமையும் தவிப்பும் அதற்கான தேடலுமே இந்த விஷ்ணுபுரத்தின் மூலக் கூரு என்று எண்ணுகிறேன். விஷ்ணுபுரம் எனும் நாவலை ஒட்டுமொத்தமாக பிணைப்பது தனிமை எனும் இழை தான் என்று எனக்கு படுவதுண்டு. ஆன்மீக அகப் பயணம் என்பது கருந்தூளைக்குள் (black hole வழுக்குமரத்தில் ஏறுவதைப்  போலத்தான். ஒளி என்றேனும் நம் மீது விழக்கூடும் எனும் நம்பிக்கை மட்டுமே எஞ்சும், திசைகள் அற்ற இருளும், வெறுமையும் மட்டுமே சூழ்ந்த பயணம் அது.

அக்னிதத்தனின் வழித்தோன்றலாக விஷ்ணுபுரத்தை கட்டுபடுத்தும் மகாவைதிகர்களுக்கு புத்திர சோகம் மட்டுமல்ல தனிமையும் குலசொத்து தான். அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் மனிதனுக்கு அந்த அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனும் முனைப்பு எப்போதும் இருப்பதுதான். அதற்கு அவன் தன்னை பிறர் அணுகமுடியாத தொலைவில், அகந்தையின் கோட்டைக்குள் புதைத்து வைத்திருக்கிறான். அதிகார நாட்டமும் ஆன்மீக தேடலும் ஒருபோதும் இணைந்திட முடியாது. சூரியதத்தரின் தனிமை இத்தகையதே. ஸ்வேததத்தன் சொன்னது போல் சூரியதத்தனின் தனிமைக்கு காரணம் விஷ்ணுபுரம் அல்ல, மாறாக தன்னையே அவன் விஷ்ணுபுரம் என எண்ணுவதால் விளைந்தது. அகந்தையை ஊதி பெருக்கிக் கட்டப்பட்ட அதிகாரத்தின் மீதான ஐயத்தால், அவரால் அவருடைய மகன் ஸ்வேததத்தனை கூட நெருங்கமுடியவில்லை. மலர்மாலைகளை கருகசெய்யும் நெருங்கமுடியாத நெருப்பாகவே அவர் மரணத்திற்கு பின்பும் நினைவுகூரப் படுகிறார். நிலவின் குளுமையில் அனைவரையும் வசீகரிக்கும் பவதத்தர் உணர்ந்த தனிமை தன் குலத்தின் ஆகச்சிறந்த வாரிசு அக்குலத்தின் மரபிற்கு எதிராக, மகாகாலனாய் உருவெடுத்து அதன் அஸ்திவாரங்களை பெயர்க்க தொடங்கியபோது எழுந்தது. சூரியதத்தரின் தனிமை அதிகாரத்திலும் அகங்காரத்திலும் விளைந்தது, அதை மீறி செல்ல அவர் முனையவும் இல்லை விரும்பவும் இல்லை. பவதத்தர் தனிமையை தன் மேல் அழுத்தும் சுமையாக அறிகிறார், விஷ்ணுபுரத்து சர்வஞர் எனும் பட்டம் தன் பாதையில் அகற்றமுடியாத கரும்பாறையாக அடைத்து நிற்பதை எண்ணி வருந்துகிறார். அதிலிருந்து மீண்டு தன் மகனோடு சேர்ந்து காசியபனைப்போல் குதித்தாட  வேண்டும் என துடிக்கிறார். Continue reading

காலமே உனக்கு வணக்கம் – 1 by சுனீல் கிருஷ்ணன்

விஷ்ணுபுரம்

காலமே உனக்கு வணக்கம் – 1

by  சுனீல் கிருஷ்ணன்

”அனந்த கோடி அடையாளங்கள் கொண்ட காலமே

நீ அன்னையாகி வருக.

காலமே உனக்கு வணக்கம்”

வெண் மணல் நிறைந்த வறண்ட பாலைவனத்தில், பவுர்ணமி நிலவொளியில் பிரம்மாண்டமாக விரியும் அந்த சக்கரம். அந்த மண், நதி புரண்ட மண். காலமெனும் நதி சுழிந்தோடி தன் அடையாளங்களை தொலைத்த மண். தன்னுள் பல நூற்றாண்டு ரகசியங்களை, மானுட தேடல்களை, நிராசைகளை, ஏமாற்றங்களை. என உயிர்த்துடிப்புடன் விளங்கிய அனைத்தையும் விழுங்கிய   மலைப்பாம்பை போல, மானுட ஞானத்தை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஆழமான,வெறுமையான, வெதுவெதுப்பான மண். கூரைகள் இல்லாத வெட்டை வெளியில், நிலவொளியில் எதை தேடுகிறேன்? பிங்கலனும்  சங்கர்ஷணனும் உணர்ந்த அந்த தனிமை, ப்ரேசனரும் காசியபனும் உணர்ந்த அந்த தனிமை, பவதத்தரும், சூரிய தத்தரும், ஆரிய தத்தரும் யுகம் யுகமாக கண்டுணர்ந்த அந்த தனிமை, பாவகனும், பத்மனும், யோக விரதரும் அறிந்து தவித்த அந்த மகத்தான தனிமை, அது என்னையும் குளிர செய்கிறது. . ஆம் இந்த பிரபஞ்சத்தில் நான் தனித்து நிற்கிறேன். ஏன் எனும் கேள்வி மட்டுமே என்னுள் எஞ்சி இருக்கிறது..

விஷ்ணுபுரத்தை முதல் முறை வாசித்த சமயம், அதுவே நான் வாசித்த முதல் பெருநாவல். எந்த ஒரு மகத்தான இலக்கிய ஆக்கமும்  அதை அணுகும்  வாசகனை கலைத்து மீண்டும் கட்டி எழுப்பும். அந்த அனுபவத்தை முதன்முதலாக எனக்கு  விஷ்ணுபுரமே அளித்தது. மலை உச்சியை நோக்கி மூச்சிரைக்க, பதைபதைப்புடன் ஓடி, அதன் சிகர நுனியில் ஏறி நின்று கீழே பார்த்தால் புலப்படும் அந்த ஒட்டுமொத்த காட்சி கொடுக்கக் கூடிய வார்த்தைகளில் அடைபடாத அந்த பிரமிப்பு, திகைப்பு, பீறிட்டு கிளம்பும் அர்த்தமற்ற ஆழ்ந்த துக்கம் போன்றவையே முதல் வாசிப்பில் என்னை நிறைத்தது. Continue reading

விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை by ஜடாயு – 4

விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை – 4

– ஜடாயு

மதிப்பீடுகள்:

“துயில் கலைந்த பாம்பொன்று வேரில் சுழன்றேறி, மரம் பிணைத்தேறி கிளைகள் படர்ந்தேறி உச்சி நுனியொன்றில் தன் தலைவிழுங்கி சுருண்டு ஒரு வெண்ணிற மலராக விரிந்தது. குறையாத பாத்திரத்திலிருந்து நிரம்பாத பாத்திரத்திற்கு நீர் வழிந்தபடியே இருந்தது”

கலைரீதியாக விஷ்ணுபுரத்தை எப்படி மதிப்பிடலாம்?

மரபார்ந்த செவ்வியல் கலைகள் எப்போதும் மேலும் மேலும் அந்தக் கலைப் பரப்பின் நுட்பங்களுக்குள் சென்று கொண்டே இருக்கும் இயல்பு கொண்டவை. கோயில்களின் உள்மண்படங்களிலும் பிராகாரங்களிலும் முடுக்குகளிலும் என்றோ ஒரு நாள் வந்து பார்க்கப் போகிற ஒரு தீவிர கலாரசிகனுக்காக ஒரு சிற்பி படைத்திருக்கும் செதுக்கல்களை நாம் காண முடியும்.

லட்சண சுத்தமும் நுட்பங்களும் ஒளிச்சிதறல்களின் விளையாட்டால் அந்த கணத்தில் துலங்கி நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் இருட்டு மூலைகளும் வாய்ந்தது விஷ்ணுபுரம். தாராசுரம், பேலூர், ஹளேபீடு கோயில்களின் சிற்ப அற்புதங்களிலும் அஜந்தா ஓவியங்களிலும் நாம் காண்பது போல.

ஆனால் அது மட்டுமல்ல, நவீன ஓவியங்களுக்கே உரித்தான குறியீட்டுத் தன்மை, பூடகத் தன்மை, சலனம் ஆகிய இயல்புகளும் அதில் உண்டு.  ஒரு இம்ப்ரெஷனிஸ ஓவியத்தையோ க்யூபிஸ ஓவியத்தையோ ரசிக்கும் போது ஏற்படுவது போன்ற “திறப்புகள்” விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பிலும் சாத்தியம்.

மரபு காலங்காலமாக உருவாக்கி வைத்திருக்கும் குறியீடுகள் ஒருவகையானவை என்றால் நவீன ஓவியங்கள் உருவாக்கும் குறியீட்டு வெளி இன்னொரு வகையானது.  இந்த இரண்டுமே ஒரு கலைப்படைப்பாக, விஷ்ணுபுரத்தில் கைகூடியிருக்கிறது. Continue reading

2.தத்துவம் – ஒரு எளிய அறிமுகம்: பழங்கால தத்துவம் இன்றைக்கு எதற்கு?

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

பழங்கால தத்துவம் இன்றைக்கு எதற்கு?

பரவலாக கேட்கப்படும் கேள்வி இது. ’சரி, புதிய தத்துவம் என்று எதைச் சொல்கிறீர்கள்?’ என்று நான் கேட்பேன். அவர்கள் மார்க்ஸியம் என்றோ, அணுக்கொள்கை என்றோ பதில் கூறுவார்கள். இத்தத்துவங்களின் நடைமுறை சார்ந்த அம்சங்கள், சில தருக்க முறைகள் மட்டுமே புதியவை. அடிப்படைகள் முழுக்க புராதன கிரேக்க சிந்தனையில் இருந்து பெறப்பட்டவை என்று நான் விளக்குவேன்.

தத்துவம் என்பது தொழில்நுட்பம் அல்ல. புதியது வந்ததும் பழையது போய்விடாது. ஒவ்வொன்றும் பிறிதின் தொடர்ச்சியாகவே எழமுடியும். தத்துவம் என்பது தருக்கங்களின் தொகுப்பு என்றேன். அத்தருக்கங்கள் எங்கிருந்து வருகின்றன? மனித மூளை செயல்படும் விதங்களில் இருந்து அல்லவா? மனித மூளை அன்றும் இன்றும் ஒன்றுதான். புறச் சூழல்தான் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஆகவே கலையிலும் தத்துவத்திலும் அடிப்படைகள் மாறுவதே இல்லை. அவற்றை எடுத்துரைக்கும் முறையும், புரிந்து கொள்ளப்படும் சூழலும் மட்டும் மாறியபடியே இருக்கும். மிகப்புராதனமான தத்துவ சிந்தனையின் அடிப்படைகள் இன்றைய நவீனச் சிந்தனைகளில் தொடர்வதைக் காணலாம்.

ஆகவேதான் அதி நவீன சிந்தனைகள் பெருகி வந்தபடியே இருக்கும் மேற்கத்திய அறிவுச் சூழலில் கூட அதிபுரான கிரேக்க சிந்தனையாளர்கள் முதற்கொண்டு எவருமே புறக்கணிக்கப்படுவதில்லை. ஒவ்வொருவரும் திரும்பத் திரும்ப வேறு வேறு கோணங்களில் வாசிக்கப்படுகிறார்கள். மறுகண்டுபிடிப்புச் செய்யப்படுகிறார்கள். Continue reading